வருமானவரித்துறை அதிகாரிகளின் வருகை குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் ஒருவரின் வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட உள்ளதாக அலெர்ட் செய்யப்பட்டுள்ளது.
குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இன்று, தமிழ்நாடடின் பிரபலமான கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மூன்றாவது நாளாக சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோயமுத்தூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 80 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி
அபிராமி ராமநாதன் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமின்றி பலவித தொழில்களும் செய்கிறார். அவரது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத நகைகள் சிக்கியதையடுத்து அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அபிராமி ராமநாதனுக்குச் சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
சென்னை, திருவண்ணாமலை, கோயமுத்தூரில் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வரும் வேளையில் தமிழ் திரையுலகத்திலும், தமிழ்நாட்டிலும் முக்கியப் பிரமுகரான அபிராமி ராமநாதனுக்குச் சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
அபிராமி ராமநாதன் உன்னோடு கா, அபிராமி, வினோதய சித்தம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான அபிராமி மால் . அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகம் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் எஸ்டேட் இரண்டாவது சாலையில் அமைந்துள்ளது. திடீரென நேற்று மாலை 4 மணி முதல் 12 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அவரது அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் சமீபகாலமாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளென பலரது வீடுகளிலும் தொடர்ந்து அதிரடியாகச் சோதனைகள் நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில் பிரபல படத்தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது
கருத்துகள்