முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் உரை

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் மாநாடு 2023-ல் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்


அனைவருக்கும் வணக்கம்!

நாட்டில் நாம் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். நமது பாரதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறிக் கொண்டிருக்கிறது. நான் 1989-ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். நான் மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். பல அம்சங்களைப் பல ஆண்டுகளாக நான் கவனித்து வந்துள்ளேன்.


இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பாருங்கள்! ஒரு பில்லியன், இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலைகளில் இருந்து இப்போது நாம் 600 பில்லியனுக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டுள்ளோம். 

1960 ஆம் ஆண்டில் நமது சொந்த செயற்கைக்கோள் மற்றொரு நாட்டின் வழியாகச் செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது  அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்களை நாம் செலுத்துகிறோம். இதுதான் இந்தியா கண்ட வளர்ச்சி.



பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒரு மகத்தான வரலாற்றைக் கொண்டுள்ளது. நாம் அனைவரும் அதைப் பாதுகாக்க வேண்டும்.  பஞ்சாப் பல்கலைக்கழகம் உலகளாவிய முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற நாம் உழைக்க வேண்டும்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உலக அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். இங்கு படித்தவர்கள் சிலர் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் பிரதமர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதிகள், விஞ்ஞானிகள், முக்கிய அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், தொழில்முனைவோர் என பல முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளனர்.   முன்னாள் மாணவர்களின் நிகரற்ற பலம் கொண்ட ஒரு பல்கலைக்கழகம் இது.

நமது தேசிய கல்விக் கொள்கை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. படிப்பு என்று வரும்போது அது நதிபோல இருக்க வேண்டும். மனித மனம் ஒரு நதியைப் போல ஓடட்டும்.

பழங்கால பாரதத்தில் நாளந்தா, தக்ஷிலா போன்ற பல பல்கலைக்கழகங்கள் இருந்தன என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அந்த அளவிற்கு உலகளாவிய நிறுவனங்களை நாம் உருவாக்க வேண்டும். செனட் அல்லது சிண்டிகேட் அல்லது அரசு அல்லது துணைவேந்தரின் பலத்தில் மட்டும் அதைச் செய்ய முடியாது. முன்னாள் மாணவர்களின் பங்களிப்பால் மட்டுமே அந்தச் சாதனையை அடைய முடியும்.

அறிவு மற்றும் அனுபவத்தை ஒருங்கிணைக்கவும், பல்வேறு நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களின் பலத்தை வெளிப்படுத்தவும் இந்த நாட்டில் நேரம் வந்துவிட்டது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியாவில் ஐஐஎம்-கள் உள்ளன. ஐஐடிகள் உள்ளன. அறிவியல் நிறுவனங்கள் உள்ளன. பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. முக்கியமான கல்லூரிகள் உள்ளன. இப்போது இந்த நிறுவனங்களின் சிறந்த முன்னாள் மாணவர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால், சக்தி வாய்ந்த கொள்கைகளை உருவாக்க முடியும்.

நாட்டில் பெண் கல்வியும் பெண்களின் நிலையும் இப்போது மேம்பட்டுள்ளது. 30 ஆண்டு காலப் பெரும் போராட்டம் மற்றும் தோல்விக்குப் பிறகு, தற்போது மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கழிவறைகள் இல்லாத காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பெண்களின் சிக்கலான நிலையை கற்பனை செய்து பார்க்கிறேன். இப்போது ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை உள்ளது. எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது.  இந்தியாவின் வேகமான வளர்ச்சி அதன் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிப்படும். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் பலம் குறித்து எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறன், திறமை, அனுபவம் உங்களிடம் உள்ளது.

நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம