முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரக்கமற்று அரக்கனாக வாழும் சமூக நலத்துறையின் மாவட்ட அலுவலர் பெரம்பலூர் அவலம்

பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுவனுக்கு உதவ மனமின்றி இரக்கமற்று அரக்கனாக வாழும் சமூக நலத்துறையின் மாவட்ட அலுவலர் , 

குமுறும் தொண்டு நிறுவனங்கள் , பெரம்பலூர் மாவட்டம் குன்னம், வட்டம் கொளப்பாடி, ஊராட்சி மன்றம்  காலனித் தெருவில் வசிக்கும் ஆனந்துக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள். மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மூத்த மகனான 14 வயதுச் சிறுவன் கண்ணனை பாலியல் கொடுமைப்படுத்தியதால்  சிறுவன் கண்ணன், நண்பர்களிடம்  தனக்கு நடக்கும் கொடுமைகளைச்சொல்லி அழுத நிலையில் . அவர்கள் "குழந்தைகள் பாதுகாப்பு" இலவச பொதுச் சேவைத் தொலைபேசி, 

(சைல்ட்



ஹெல்ப் லைன்) மூலம் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தைக் கூறிவே அவரைக் காவல்துறையினர், " POCSO " சட்டத்தில் கைது செய்து, சிறையிலடைத்தனர். சில நாட்களில் ஜாமீனில்  வந்தவர். மீண்டும்  பாலியல் கொடுமை செய்துள்ளார். அதனால் சிறுவன், வீட்டில் எலியை கொல்லும்  விஷ "பேஸ்ட்டை வெறும் வயிற்றில் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் POCSO சட்டத்தின் கீழ். குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், இது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வரை உண்டு சிறுவன் கண்ணன், பாதிக்கப்பட்டதைத் தெரிந்து, ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். தற்சமயம் சிறுவன்கண்ணன் 


உயிருக்கு போராடும் நிலையில், சிகிச்சையளித்த மருத்துவர், நல்ல மீண்டு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் தான், உறுதியாகக் கூற முடியும் என தெரிவித்துள்ளதாகவும் . தற்போதுது சுய நினைவு இல்லாமல் சிறுவன் கண்ணன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் , மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமையில்  செயல்படும் "மாவட்ட சமூக நலத்துறை" மற்றும் "மாவட்ட குழந்தைகள் நல அலகு அலுவலகங்கள்" குழந்தைகள் நல காப்பகங்கள் நடத்தும் இல்லங்கள் மீது அக்கரை கொண்டு இதுபோல் பாதிக்கப்படும் சிறுவர்களைப் பாதுகாகாக்க வேண்டும்  என்பதே சமூக நலனில் அக்கரை கொண்ட பலரது  எதிர்பார்ப்பாகும்.






குழந்தைகள் நல காப்பகங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மிகுந்த அக்கரை காட்டாமல் இருப்பதே இதுபோண்ற சம்பவங்கள் பெருகக் காரணமாகிறது, தொடர்பான  அலுவலர்கள் உதவி கொண்டு, 14 வயதுடைய கண்ணனை, ஆபத்திலிருந்து காப்பாத்தி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வைத்து ஆலோசனை வழங்கி,  உயிர் பாதுகாப்பு வழங்கி இருக்கலாம். இச் சிறுவன்  போல மாவட்டம் முழுவதும் (இருபால்) குழந்தைகளுடைய நிலைமை கேள்விக்குறியாவதாக


பெரம்பலூர் மாவட்டத்தில் இது போல, பல்வேறு  கிராமங்களில் குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு பலியாவதாக ஒரு சமூக ஆர்வலர் நம்மிடம் வருத்தம் தெரிவித்தார், நமக்கு விசாரணையில் கிடைத்த தகவல் படி மாவட்ட சமூக நல அலுவலர் பெரும்பாலான நாட்களில் அலுவலகத்தில இருப்பதல்ல எனபது தெரிகிறது, மேலும் சமூக நலனில் அக்கரையற்ற  ஒரு சமூக நல அலுவலர் பெரம்பலூருக்குத் தேவையா என்பதும் இதற்கு முன் இருந்த அலுவலர்கள் இவர்போல சமூக நலனில் அக்கரை இல்லாமல்  இல்லை என்பதும் நாம் பலரை விசாரித்து அறிந்த போது கிடைத்த தகவலாகும் இதை மாநில சமூக நலத்துறை கவணத்தில் கொள்ள வேண்டும் என்பதே இங்கு பொதுநீதி , பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற ஏழை எளிய (இருபால்) குழந்தைகள் குடும்பப் பராமரிப்பில்லாமல், திசைமாறி நாலா பக்கமும் இருக்க இருப்பிடமும், உண்ண உணவும், இல்லாமல் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,




பெரம்பலூர் மாவட்டத்தில் நிலை உள்ளது. பலரை வருத்தமடைய வைக்கிறது மாவட்டத்தில் "மாவட்ட சமூக நலத் துறை மற்றும் மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம்" இருந்தும் முறையாக செயல்படாத காரணத்தால், சிறுவன் கண்ணனைப் போல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது. உடனே மாவட்ட நிர்வாகம், துரிதமாக , பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு  நிறுவனங்கள் மூலம் குழந்தைகள் காப்பகங்களைக் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.






மேலும் தொடர்பான அலுவலரிடம் குழந்தைகளின் பிரச்சனைகளைத் தெரிவித்து மூடி மறைக்காமல்  செயல்பட்டு, கிராமங்களுக்கும் தொடர்பான  அலுவலர்களுக்கும் "விழிப்புணர்வுப் பயிற்சி கொடுத்து, அரசு கவணமாகப் பணியாற்றி இது போல் பாதிக்கப்படும் குழந்தைகளை உரிய காப்பகங்கள்  அமைத்துப் பாதிகாக்க வேண்டும்,






என்பதே! சமூக ஆர்வலர்களின் தற்போதய வேண்டுகோள். இது குறித்து நாம் இரண்டு முறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலரைத் தொடர்பு கொண்டு கேட்க முயன்றும் அலுவலகக் கண்காணிப்பாளரே நம்மிடம் பேசினார்,  மாவடட அலுவலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகவே அறிந்தோம். ஆகவே பெரம்பலூர் பகுதிக்கு சமூக நலர்துறை செயல்பட ஒரு மக்கள் தொடர்பில் உள்ள நல்ல அலுவர் தான் முதல் தேவை என்பதே பகுதி மக்கள் எதிர் பார்ப்பாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு