முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் வழிபட்டார்

பிரதமர் அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் வழிபட்டார்



தமிழ்நாட்டில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாட்டில் ஈடுபட்டார்

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன்."பிரதமர் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்


தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.

மகான் கம்பன் தனது ராமாயணத்தை முதன்முதலில் வெளி உலகத்துக்கு  அரங்கேற்றிய கோவிலில் கம்ப ராமாயணத்தின் பாராயணத்தையும் பிரதமர் கேட்டறிந்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவிலுடனான பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது. பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை  பாக்கியமாக உணர்கிறேன்.


”அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டாவின் பின்னணியில், சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலி செய்திகள் பரவுவதை கவனத்தில் கொண்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.


2024 ஜனவரி 22, அன்று அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ள சூழலில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சில சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலிச்செய்திகள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன, அவை வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கக்கூடும் என்று கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.


இதைக் கருத்தில் கொண்டு, 2024 ஜனவரி 20 ஆம் தேதி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது, தவறான அல்லது போலியான அல்லது நாட்டில் வகுப்புவாத நல்லிணக்கம் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தன்மை கொண்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதையோ அல்லது


ஒளிபரப்புவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது. மேலும், சமூக ஊடக தளங்கள் தங்கள் உரிய விடாமுயற்சியின் ஒரு பகுதியாக, மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்யவோ, காட்சிப்படுத்தவோ அல்லது வெளியிடவோ கூடாது என்று நியாயமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் ஒழுங்குமுறை சட்டம், 1995 இன் கீழ் நிகழ்ச்சி குறியீட்டின் பின்வரும் விதிகள் மற்றும் பிரஸ் கவுன்சில் சட்டம், 1978 இன் கீழ் இந்திய பத்திரிகை கவுன்சில் வகுத்துள்ள பத்திரிகை நடத்தை விதிமுறைகள் குறித்த  இந்த ஆலோசனை கவனத்தை ஈர்க்க விழைகிறது. இது தகவல் தொழில்நுட்ப (இடைப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை குறியீடு) 2021விதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதழியல் நடத்தை விதிமுறைகள்

"துல்லியம் மற்றும் நேர்மை: i) துல்லியமற்ற, ஆதாரமற்ற, கருணையற்ற, தவறாக வழிநடத்தும் அல்லது சிதைந்த உள்ளடக்கத்தை வெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும்.


சாதி, மதம் அல்லது சமூகம் குறிப்புகள்: 6) ஒரு கட்டுரையின் தொனி, உணர்வு மற்றும் மொழி ஆட்சேபனைக்குரியதாகவோ, ஆத்திரமூட்டுவதாகவோ, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவோ அரசியலமைப்பின் உணர்வுக்கு எதிரானதாகவோ தேசத்துரோகம் மற்றும் ஆத்திரமூட்டும் இயல்புடையதாகவோ அல்லது வகுப்புவாத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துவது செய்தி நிறுவனங்களின் கடமையாகும்.




முதன்மையான தேசிய நலன்: i) இந்திய அரசியலமைப்பின் 19 வது பிரிவின் பிரிவு (2) இன் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீது சட்டத்தால் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடிய அரசு மற்றும் சமூகத்தின் தலையாய நலன்களுக்கு அல்லது தனிநபர்களின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும், தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு செய்தி, கருத்து அல்லது தகவலையும் வழங்குவதில் செய்தித்தாள்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் உரிய கட்டுப்பாட்டையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

நிகழ்ச்சி குறியீடு




"விதி 6 (1) கேபிள் சேவையில் எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படக்கூடாது:-

(இ) மதங்கள் அல்லது சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அல்லது மதக் குழுக்களை இழிவுபடுத்தும் அல்லது வகுப்புவாத மனப்பான்மையை ஊக்குவிக்கும் காட்சிகள் அல்லது சொற்கள்;

(ஈ) ஆபாசமான, அவதூறான, வேண்டுமென்றே, தவறான மற்றும் பரிந்துரைக்கும் சூழ்ச்சிகள் மற்றும் அரை உண்மைகளைக் கொண்டுள்ள தகவல்கள்;

(உ) வன்முறையை ஊக்குவித்தல் அல்லது தூண்டுதல் அல்லது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கு எதிரான அல்லது தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் எதையும் உள்ளடக்கியதாக இருத்தல்;


சமூக ஊடக தளங்கள் உட்பட தொலைக்காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளை பின்பற்றுமாறு அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது, குறிப்பாக பொது ஒழுங்கு தொடர்பான விஷயங்களில், வெளியிடப்படும் / ஒளிபரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையில் துல்லியம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மத சமூகங்களிடையே வகுப்புவாத நல்லிணக்கத்தையும் பேனவேண்டும்


ஆலோசனையை இங்கே அணுகலாம்.மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்: பிரதமர்


மேற்கு வங்க மக்கள் பிரபு திரு. ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். 

பாயல் கர் பாடிய ஸ்ரீ ராமரின் புகழ்பெற்ற 'மோன் ஜோபோ நாம்' என்ற பஜனையையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;




"மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இங்கே அதன் அடையாளமாக  நஸ்ருல் கீதி மோனோ ஜோபோ நாம் உள்ளது. #ShriRamBhajan"இராமாயணத்தின் உணர்ச்சிகரமான சபரி அத்தியாயத்தில் மைதிலி தாக்கூர் பாடிய பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இராமாயணத்தின் உணர்ச்சிகரமான சபரி நிகழ்ச்சியை முன்னிட்டு மைதிலி தாக்கூர் பாடிய பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.



அயோத்தியில் பிரதிஷ்டை கொண்டாட்டம் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான பல்வேறு சூழல்களை அனைவருக்கும் நினைவூட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது;

"அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான ஒவ்வொரு சம்பவத்தையும் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவூட்டுகிறது. அத்தகைய ஒரு உணர்வுபூர்வமான  அத்தியாயம் சபரியுடன் தொடர்புடையது. மைதிலி தாகூர் அவர்கள் தனது இனிமையான ராகங்களில் இதை எவ்வாறு நெய்திருக்கிறார் என்பதைக் கேளுங்கள்.  #ShriRamBhajan "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு