சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கு திராவிட வழியில் வந்தவர்கள் குறைந்தவர்களில்லை
என சபாநாயகர் அப்பாவு ஆளுநருக்கு பதில சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதென ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு முன் வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையிலிருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் எனத் தெரிவித்து இரண்டு நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையிலிருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் எனத் தெரிவித்து இரண்டு நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார். தமிழ்நாடு அரசின் நீண்ட கால மரபை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வருகின்றன. இதுவே சட்டசபையில் இந்த களேபரங்கள் நடக்கக் காரணம் ஆகும். என சபாநாயகர்
அப்பாவு பதிலடி:
தேசிய கீதத்தை இசைக்கவில்லை எனும் ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்புத் தந்துள்ளார். அதில், ஆளுநர் குறைவாக வாசித்ததை குறையாகச் சொல்லவில்லை, உங்கள் மனதில் உள்ளதைச் சொன்னீர்கள். எங்கள் மனதில் உள்ளதை நாங்களும் சொல்கிறோம்.
இந்த அவையில் அவரவர் தங்களுக்கு விருப்பமானதை, மனதில் தோன்றியதை எல்லாம் பேச முடியாது. ஒரு பைசாவையும் மத்திய அரசு தரவில்லை. சாவர்க்கர, கோட்ஸே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்களில்லை. இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND- டில் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்குக் கேட்க முடியாத பணத்திலிருந்தாவது ரூபாய் 50,000 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாகயிருக்கும்.ஆளுநர் ரவியிடம் முழு உரையும் முன்பே கொடுக்கப்பட்டது. அவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் உரை அவைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை அவர் முழுமையாகப் படிக்கவில்லை. இங்கே ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் உத்தரவிட்டிருக்கிறார். அதையடுத்து ஆளுநர் உரையை நான் வாசித்தேன். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்
மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22 ஆம் ஆண்டில் 4ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23 ,ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது., தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது;
தமிழ்நாடு அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ஆம் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக்கின் 2024 ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின் படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சியே நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது., எனத் தெரிவித்துள்ளார் .
கருத்துகள்