உதயத்தூர் கீழூர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இராதாபுரம் வட்டாரத்திலுள்ள கிராமம்,
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் அங்கு பூர்வீக சைவப்பிள்ளைகள் திருநெல்வேலிக்காரர்கள் உறுவாக்கிய உதயத்தூர் கிராமமும், சென்னை உதயம் தியேட்டரும்.
திருநெல்வேலி பரமசிவம் பிள்ளை தொடங்கிய பல பலசரக்குக் கடைகள் தான் பிற்காலத்தில் நாடார்கள் எனும் அண்ணாச்சிகளின் கடையாக மாறியது சென்னை முழுவதுமிருந்தது பெரும்பாலும் திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்து பலர் தற்போது பாத்திரக்கடை, ஜவுளிக் கடைகளைத் துவங்கிய போது ஒரு குடும்பம் மட்டும் தியேட்டர் கட்டியது.
உதயத்தூரிலிருந்து வந்த அந்தக் குடும்பத்தினர் 1983 ஆம் ஆண்டில் அசோக் பில்லர் அருகில் நிலம் வாங்கி தியேட்டர் கட்டியது . முதலில் ஒரு திரை வைத்து கட்டப்பட்ட தியேட்டருக்குப் பெயராக. தங்களின் உதயத்தூர் நினைவாக.. உதயம் தியேட்டர் என்றானது. பரமசிவம் பிள்ளை மற்றும் அவரின் ஐந்து சகோதரர்கள் உள்ளிட்ட அறுவர் சேர்ந்து உருவாக்க தியேட்டரானது.
அது வளர வளர தியேட்டரில் கூடுதல் ஸ்கிரீன் போடப்பட்டு உதயம், சந்திரன், சூரியன், உதயம் மினி எனப்பட்டது. அதுவே உதயம் காம்ப்ளக்ஸ், சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட சத்யம் , அபிராமிக்கு அடுத்ததாக பெரிய தியேட்டரிது சென்னையின் மிகப்பெரிய அடையாளம் மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றானது.
அதன்பின் இந்தத் தியேட்டரின் பங்குகள் அந்த அண்ணன் - தம்பிகளின் குடும்பத்தில் பிறந்த எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தளிக்கப்பட்டது. அது வேறு சில நிறுவனங்களுக்கும் கூடச் சென்றது. ஒழுங்கான ஒரு குடும்பத் தலைமை இல்லாத காரணத்தால் 2000 தொடக்கத்தில் இந்தத் தியேட்டர் நல்ல பராமரிப்பின்றிப்பின்தங்கியது. 2009 ஆம் ஆண்டில் தான் சென்னையிலுள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை ஒரு முக்கியப் பிரமுகரிடமிருந்து மீண்டும் வாங்கினார். அந்தத் தியேட்டரை உருவாக்கிய ஆறு சகோதரர்களில் அப்போது உயிரோடு இருந்த ஒரே ஆள் இவர் மட்டும் தான். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூபாய் .80 கோடிக்கு வாங்கினார்.
அதன்பின் இந்தத் தியேட்டரை 2013 ஆம் ஆண்டில் விற்கும் முடிவை எடுத்தனர். ஆனால் அப்போது தியேட்டர் விற்பனைக்கு வரவில்லை. மாறாக வாங்குவதற்கு பெரிதாக ஆட்களின்றி இருந்தது. அதே போல் இங்கே மக்கள் கூட்டமும் முன்பு அளவிற்கு வர வில்லை.
,''உதயம் தியேட்டரில் என் இதயத்தைத் தொலைச்சேன்.." எனும் பாடல் தொடங்கி சென்னையின் அடையாளம் கூறும் பகுதிகளில் ஒன்றான தியேட்டர் இருந்த நிலையில் தான் அது மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் எனும் நிறுவனம் வாங்கியுள்ளது.
உதயம் தியேட்டரைப் பற்றிய திருநெல்வேலிக் காரர்கள் தங்களின் நினைவுகளையும், பார்த்த படங்களையும் தற்போது நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத் தக்கது காரணம் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம் இந்தக் குடியிருப்புக் கட்டப்பட்டு வருகிறது. மதுக் கோப்பை வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு மாடிகள் அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
ஒரு லட்சம் சதுர அடி நிலத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மால் பகுதி ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மாடிகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் அதன் உள்ளே மல்டிபிள்க்ஸ் தியேட்டர் கண்டிப்பாக இருக்கும். அதனால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது என்பதைக் கருதி அதை விற்கும் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழகிய பலருக்கு இன்னும் பத்தாண்டு ஆனாலும் உதயம் பஸ் ஸ்டாப் தான் இந்த நிலையில் உதயம் திரையரங்கை விற்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல. அதுபோல ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது. எதுவும் முடிவாகவில்லை. அதற்குள் திரையரங்கை விற்றுவிட்டதாகவும் இடிக்கப் போவதாகவும் செய்திகளில் உண்மையில்லை, இந்தத் தருணம் வரை இதுபோல எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார் சண்முகசுந்தரம்.
கருத்துகள்