தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை துவங்கியது
சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதாக அறிவித்துள்ளது
.கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டக் கடலோரங்களில் கார்னெட் எனும் தாது மணல் கொள்ளை நடந்தது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், தாது மணல் எடுப்பதற்காக, விவி மினரல்ஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் சட்டவிரோதமாகத் தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டதாக பதில் மனு மூலம் தெரிவிக்கப்பட்டது. தடை விதிக்கும் முன்பும், தடை விதிக்கப்பட்ட பின்பும், சட்டவிரோதமாகத் தாது மணல் எடுத்ததால் அரசுக்கு ஏற்பட்ட ஐந்தாயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, திருடிச் சென்ற தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் திருடிச் சேமித்து அவர்கள் வசமுள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலைப் பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.அந்தந்த கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில், 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டதாக தெரிய வந்தது. மேலும் சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்போது 24 மணி நேரமும் காவல்துறையின் காவலில் தாது மணல் பாதுகாக்கப்படுவதாகவும்
கூறிய நிலையில் வழக்கு நெற்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாதுமணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார் இந்த வாதத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி அரசு ஆவணங்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை மூன்று விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், அந்த அறிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவம், கூறியதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் மாதம் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், தாது மணல் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை மற்றும் விசாரணை அறிக்கைகள், சட்டவிரோதமான கடத்தல்கள் என உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடற்கரை மணலுக்கு ஒரு மகிமை உள்ளது. அது வெறும் மணலல்ல! இயற்கையாகவே கதிரியக்கத்தன்மைகொண்ட இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் போன்ற விலைமதிக்க இயலாத வேதியியல் தாது உப்புகள் நிறைந்த கனிமப்புதையலாகும். அணுசக்திக்குத் தேவையான இயற்கை கதிரியக்கத் தனிமங்கள் அடங்கிய தாது மணல் உலகில் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியில் அதிகம் கிடைக்கிறது கழுதை விட்டைக்கு நல்ல விலை கிடைக்குமென்றால் அதைக் கையில் எடுத்துப் பையில் அடைத்துச் சந்தைப்படுத்தத் தயங்காத தனியார் முதலாளிகளுக்கு கோடி கோடியாக இலாபம் கொட்டிக் கொடுக்கும் பூமி என்றால் சும்மா விடுவார்களா ? தாதுமணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய, போராடுகின்ற மக்கள் மீது எத்தனை கொடிய மற்றும் கீழ்த்தரமான அணுகுமுறைகளைக் கையண்டாலும் மக்கள் சக்திதான் மிக வலிமையான ஆயுதம் என்பதை இந்த நீதிமண்றத் தீர்ப்பு வரும் போது காணலாம் என்பதே பொதுநீதி,.
கருத்துகள்