வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
ஆந்திர வர்த்தக சபை, மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அஸோசியேஷன் ஆகியவை வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை 28-02-2024(புதன்) அன்று சென்னையில் நடத்தின.
வருமானவரி அலுவலர்கள் திரு L ராஜாராமன், திரு K செந்தில் குமார் மற்றும் திரு T V ஸ்ரீதர், வருமானவரி சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரிப்பிடித்தம் செய்யவேண்டிய பிரிவுகளின் சாராம்சத்தை தெளிவாக விளக்கினர். மேலும், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகளைப் பட்டியலிட்டனர். வரிப்பிடித்தம் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
வருமானவரி ஆலோசகர் திருமதி ஜானகி கார்த்திகேயன், வரிப்பிடித்தம் செய்பவர்கள்¸ முறையான வருமானவரிப் பிடித்தம், காலக்கெடுக்குள் வரிப் பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல், சரியான காலாண்டு படிவம், நேரத்தே சான்றிதழ் வழங்குதல் என கையாளவேண்டிய நடவடிக்கைகளைத் தெளிவாக விளக்கினார்.
வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான நலன் கருதி, சென்னை தலைமை ஆணையரகம் (வரிப்பிடித்தம்) மேற்கொண்ட கீழ்கண்ட நடவடிக்கைகள், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
கருத்துகள்