தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலா சாமி இ ஆ ப நியமனம்
பத்திரப்பதிவுத் துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு சட்டத்தின் கீழ், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்கள் இனி இவரது தலைமையில் தான் நடைபெறும். தற்போது வரை தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெற்றதையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலத் தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்கள் இவரது தலைமையில் நடைபெறும்.அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் கிராம ஊராட்சிகளின் தேர்தல்கள் நடைத்தப்படும் . இன்று காலையில் தான் இவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆச்சிமுத்து சங்கர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள்