இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் தலைமறைவு
முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மார்ச் மாதம் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்ததையடுத்து, ஜாபர் சாதிக்குடன் தொடர்பிலிருந்தவர்களிடமும் விசாரணை நடத்துகின்றனர். அதில் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.டைரக்டர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இருவரும் இணைந்து காஃபி கடை ஒன்றை தொடங்கியதாகவும் தகவல் வெளியானதையடுத்து,
இயக்குனர் அமீருக்கு நோட்டீஸ் அனுப்பிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியிலுள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதையடுத்து, டெல்லியிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் நேரில் ஆஜரானார். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்ட விசாரணைக்குப் பின் இயக்குனர் அமீர் சென்னை திரும்பிய நிலையில், விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி இயக்குனர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்து சென்ற மூன்றாண்டுக்கான வங்கிப் பரிவர்த்தனைகள், வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களுடன் டெல்லியிலுள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் உடன் தொழில் ரீதியில் கூட்டளியாக இணைந்தது எப்படி? என்ற விவரத்தையும் அமீரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கேட்டுள்ளது. அதேவேளை, விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு இயக்குனர் அமீர் இமெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கு காரணமாக அமீரின் அலுவலகம் உள்பட சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பொதுவான நீதி உன் குற்றமா? என் குற்றமா? புஹாரி மருத்துவமனைகள், உணவகங்கள், நில முதலீடுகள், படத் தயாரிப்புகள்,
பண உதவி என்று தொட்டுத் தொட்டுப் படரும் வலை. சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமாக இருந்தது குற்றம் தானே
கருத்துகள்