முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாம்பரத்தில் பிடிபட்ட பணம் யாருடையது விசாரணை தீவிரம்

தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்தில்பாலாமணி தலைமையிலான குழு,


தகவல் அடிப்படையில் தாம்பரம் ரயில் நிலையத்துக்குச் சென்று பிளாட்பாரம் 8-ல் காத்திருந்த போது சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் அந்தப் பிளாட்பாரத்துக்கு வந்ததும், ஏ கோச்சில் ஏறிய தேர்தல் பறக்கும் படையினர் , 26,27,28 ஆகிய படுக்கை எண்களில் பயணம் செய்த.  சதீஷ், பெருமாள், நவீன் என்பவர்களிடம் நடத்திய விசாரணையில்  அவர்களின் உடமைகளை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த போது அதில் அதிக அளவு பணமிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களையும் உடமைகளையும் தேர்தல் பறக்கும் படையினர் ரயிலிலிருந்து கீழே இறக்கி. அந்த இடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த மூன்று பேரையும் பணத்தையும் தாம்பரம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று சோதனை நடத்தப்பட்டதாகவும் அப்போது அவர்களிடம் 3,98,91,500 ரூபாய் இருந்தது குறித்து சதீஷ் என்பவரிடம் விசாரித்த போது,

அவர் புரசைவாக்கம் பகுதியிலுள்ள திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொடுத்து அனுப்பினார் என்றும் தெரிவித்ததாகவும். அதைப் போல பெருமாள் என்பவர் திருவல்லிக்கேணியிலுள்ள ஹோட்டலிருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் இரயிலில் வந்ததும் தெரியவந்தது.இந்தப் பணம் அனைத்தையும் தங்களின் ஹோட்டல் உரிமையாளர் நயினார் நாகேந்திரன், போட்டியிடும் திருநெல்வேலி நாடாளுமன்ற வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தன்னிடம் கொடுக்கப்பட்டதாக சதீஷ் கூறினார். மேலும் அவர் பி.ஜே.பி-யில் உறுப்பினராக இருப்பதற்கான அடையாள அட்டை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் முகவரி அட்டை ஆகியவற்றையும் தேர்தல் பறக்கும் படையினரிடம் சமர்பித்ததையடுத்து செந்தில் பாலாமணி, ஏ.ஆர்.ஓ மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தாம்பரம் காவல் நிலையத்திலும் புகாரளித்ததில், ``நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு வந்த பணத்துக்கு எந்தவித கணக்கும் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராகவும் வாக்காளருக்கு பணம் கொடுக்க வைத்திருந்ததாகவும் கூறிய மேற்படி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தாரிடம் ஒப்படைக்கிறேன். மேற்படி நபர்களையும் ஆவணங்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



அதையடுத்து தாம்பரம் காவல்துறை ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், இந்திய தண்டனைச் சட்டம் 171 (c), 171 (E), 171 (F), 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.                     புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினருமான சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.      இரயிலில் பணம் கொண்டு சென்றவர்கள் அளித்த தகவலின்படி திருநெல்வேலி நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில் அவருக்கு சம்மன் கொடுக்க, திருநெல்வேலிக்கு தாம்பரம் காவல்துறையினர் சென்ற போது நயினார் நாகேந்திரனை நேரில் சந்திக்க முடியாததால், அவரின் உறவினரிடம் காவல்துறையினர் சம்மன் கொடுத்துவிட்டு வந்தனர். அச் சம்மனில் ஏப்ரல் 22-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி நயினார் நாகேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


அது குறித்து தாம்பரம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், ``நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு செல்லப்பட்ட பணம் குறித்து விசாரித்து வருகிறோம். சதீஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் அளித்த தகவலின்படி திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனை விசாரிக்க சம்மன் கொடுத்திருக்கிறோம். அதைப் போல இந்தப் பணம், சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் கார் பார்க்கிங் ஏரியாவில் கைமாறியிருக்கிறது. அதனால் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்து சம்மன் கொடுத்தோம். அந்த நிர்வாகி தேர்தல் பிரசாரத்திலிருப்பதால் அவரின் மகன், விசாரணைக்கு ஆஜரானார். அவர், அந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 22-ஆம் தேதி நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம