மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா
மதுரை நேதாஜி சாலை தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்துண் பகுதி வரை பிரச்சார ரத ஊர்வலம் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மதுரை நேதாஜி சாலை தெற்கு ஆவணி மூல வீதி விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் திருமயம் முதல் லெ விளக்கு வரை நேற்று மாலை முதல் பாதுகாப்பு பலமாய் இருந்து சில வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் நடந்து சென்றனர். மேலும் பிரச்சார ஊர்வலம் நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே நிற்கக்கூடிய வாகனங்களில்
வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்தனர்.நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஊர்வலம் நடைபெற்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது.
அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனால், நேற்று று மாலையே சுவாமி வீதி உலா உள்ள நிலையில் பக்தர்கள் அதற்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொராதாபாத்தில் கடைசியாக தேர்தல் பரப்புரை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.ஆறு நாட்கள் கழித்து ஏப்ரல் 9 ஆம் தேதி மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை அஸ்ஸாமிலிருந்து ஆரம்பிக்கிறார்.
இடையில் ஐந்து நாட்கள் அமித்ஷா ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று பார்த்தால்
ஏப்ரல் 4, 5 தேதிகளில் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக அறிவித்து விட்டு கடைசி நேரத்தில் ஜகா வாங்கியதும் பலருக்கும் புரியாத நிலையில் ஏப்ரல் மாதம் 4, 5-ஆம் தேதிகளில் திட்டமிட்டிருந்த அமித் ஷாவின் பிரசாரம் ரத்தான நிலையில், 9-ஆம் தேதி சென்னைக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் இது குறித்துப் பேசிய மாநிலத் தலைமை. ‘எவ்வளவோ கேட்டும் அமித் ஷா பிரசாரத்துக்கு வர மறுக்கிறார். ஸ்மிருதி இரானி, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் வந்தாலும், அவர்களின் முகங்கள் மக்கள் மத்தியில் பரிச்சயமில்லை. அமித் ஷாவைப் பிரசாரத்துக்கு வரச் சொல்லுங்கள்...’ என கூறியிருக்கிறார்கள் . அதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திலிருந்து சொன்ன பிறகே பிரசாரத்துக்கு சம்மதம் சொன்னாராம் அமித் ஷா. சிவகங்கை, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளில், `ரோடு ஷோ’ என தவறாகக் கூறும் பிரச்சார ஊர்வலம் நடத்துவதற்கும் ஏற்பாடானது. அதற்குள், சிவகங்கை பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி ஐநூத்தி சொச்சம் கோடி ரூபாய் காலி. கோடிகளைச் சுருட்டியதா பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர் மீது காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்திருக்கு.
மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்த எம்.கே.பாலனை எரிச்சுக் கொன்னு போட்ட கதைலாம் இப்போது நினைவுக்கு வருகிறது.
புகார் கொடுத்தவர்கள் தரப்பு பெரிதாக அழுத்தமில்ல. சுருட்டினதா சொல்லப்படற பகுதியகலும்
பெரிதாக பதட்டம்இல்ல.
விரிவாக எழுதுவதற்கு இன்னும்
கொஞ்சம் விபரம் தேவை. இது தேர்தல் முடிந்து பின்னர் பேசப்படுமா என்பதே எழுவினா ? நிதி மோசடிப் புகார் வெடிக்கவும், காரைக்குடி பிரச்சார ஊர்வலத்தைக் ரத்து செய்யச் சொல்லி விட்டாராம் அமித் ஷா. அதுமட்டுமல்ல, ‘யார்மீது என்ன புகார் இருக்கிறது என்பதைச் சொல்ல மாட்டீர்களா...’ எனதா தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது!”
பிரதமர் நரேந்திர மோடி-உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் செயல்பாடுகள் மீது ஆர்எஸ்எஸ்க்கு திருப்தியில்லை என்பதோடு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ள 417 வேட்பாளர்களில் பாதி நபருக்கு மேல் ஆர்எஸ்எஸ் ஒப்புதலின்றி சீட் தரப்பட்டதாகவே தகவல்... தங்களது இரும்புப் பிடிக்குள் பாரதிய ஜனதா கட்சியை வைத்திருக்கவே விரும்பும் ஆர்எஸ்எஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடியும் - உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தன்னிச்சையாச் செயல்படுவது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதைச் சூசகமாக பலமுறை தெரிவித்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை என்பதால் ஆர்எஸ்எஸ் மிகவும் அப்செட்டாம்.
கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் இந்த முறை 100 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் கடந்த முறை தோல்வியுற்ற தொகுதிகளில் சிலவற்றை யாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்பட மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு சீட் வழங்கியுள்ளனர். தமிழ் நாட்டில் டிடிவி தினகரன், ஓ.ன்னீர் செல்வம் , நடிகை ராதிகா சரத்குமார், ஜான் பாண்டியன் போன்றோரை பாரதிய ஜனதா கட்சி களமிறக்கியுள்ளதன் பின்னணி இதுவே. ஆனாலும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதியான தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் நாடெங்குமுள்ள கேசவ விநாயகம் போன்ற மாநில அமைப்புச் செயலாளர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சியினரின் தன்னிச்சையாக போக்கைக் கட்டுப்படுத்த கடிவாளம் போடுகிறது. ஆனால் இவர்களுக்கு எதிராகவே பாஜகவில் சில முக்கியத் தலைவர்கள் நிழல் யுத்தம் நடத்தி வருகிற நிலையில்
இன்னும் தேர்தல் முடிவதற்கு முன் என்னென்ன நடக்குமோ பார்க்கனும்
கருத்துகள்