முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எவரிடமிருந்தும், எந்த உபதேசமும் இந்தியாவுக்குத் தேவையில்லை என– குடியரசுத் துணைத்தலைவர் கருத்து

சமத்துவம் என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பூமியில் உள்ள எவரிடமிருந்தும், எந்த உபதேசமும் இந்தியாவுக்குத் தேவையில்லை – குடியரசுத் துணைத்தலைவர்

சமத்துவத்தின் மீது நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதால், சமத்துவம் குறித்து இந்தப் பூமியில் உள்ள எவரிடமிருந்தும் போதனைகள் எதுவும் இந்தியாவுக்குத் தேவையில்லை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் உறுதிபடக் கூறியுள்ளார். நாடுகளை உள்நோக்கிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்ட அவர், "சில நாடுகள் இன்னும் ஒரு பெண் அதிபரைக் கொண்டிருக்காத நிலையில், இந்தியா ஒரு பெண் குடியரசுத் தலைவரைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இங்கிலாந்துக்கு முன்பாக பெண் பிரதமரைக் கொண்டிருந்த நாடு இந்தியா என்று அவர் சுட்டிக்காட்டினார். 200 ஆண்டுகளை நிறைவு செய்த மற்ற பல நாடுகளின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்று தெரிவித்த அவர், இந்தியாவில் பெண் நீதிபதிகள் உண்டு என்பதை சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான கதைகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதற்கு எதிராக எச்சரித்துள்ள திரு தன்கர், குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்திய குடிமகனின் குடியுரிமையைப் பறிக்கவோ அல்லது முன்பு போல இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதிலிருந்து யாரையும் விலக்கவோ முயற்சிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையைப் பெற சிஏஏ உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர், "மத அர்ப்பணிப்பு காரணமாக நம் அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இந்த நிவாரணம், எவ்வாறு பாரபட்சமாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது உள்நாட்டிற்கு வருவதற்கான அழைப்பு அல்ல என்று தெரிவித்துள்ளார். "இந்த விளக்கங்களை நாம் நடுநிலையாக்க வேண்டும். இவை அறியாமையால் அல்ல, நம் நாட்டை வீழ்த்துவதற்கான ஒரு உத்தியிலிருந்து வெளிப்படுகின்றன" என்று அவர் எச்சரித்துள்ளார்.

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் 2023 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி பயிற்சியாளர்களின் தொழில்முறை படிப்பின் முதல் கட்டத்தின் முடிவில் உரையாற்றிய அவர், நமது புகழ்பெற்ற மற்றும் வலுவான அரசியலமைப்பு அமைப்புகளை களங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உண்மைக்கு புறம்பான தேச விரோத கதைகளின் இதுபோன்ற  திட்டமிடலை நிராகரிக்குமாறு இளம் மனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சமீப காலமாக நிர்வாகம் சிறப்பான திருப்பத்தை அடைந்துள்ளது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், சலுகை பெற்ற வம்சாவளியினர் இப்போது புறவழிச் சந்துகளில் சிக்கித் தவிப்பதாகக் கூறினார். "சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பது முன்மாதிரியான முறையில் திணிக்கப்படுவதாலும், ஊழல் இனி ஒரு வர்த்தகப் பொருளாக இல்லாததாலும் ஜனநாயக விழுமியங்களும் சாரமும் ஆழமடைந்து வருகின்றன. முன்னதாக ஒப்பந்தம், ஆட்சேர்ப்பு, வாய்ப்பு ஆகியவற்றைக் கடந்து செல்வதற்கான ஒரே வழிமுறை இதுதான், "என்று அவர் மேலும் கூறினார்.

சில சலுகை பெற்ற வம்சாவளியினர் முன்னர் சட்ட நடைமுறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டவர்கள் என்றும், சட்டம் அவர்களை அடைய முடியாது என்றும் நினைத்ததாகக் கூறிய குடியரசு துணைத்தலைவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நீண்ட காலமாக நம்மிடமிருந்து நழுவிச் சென்றதும், நிர்வாக நரம்புகளில் ரத்தம் போல் ஓடிக் கொண்டிருந்த ஊழலும் இப்போது கடந்த காலப் பிரச்சினைகளாகிவிட்டன என்று அவர் இளம் அதிகாரிகளிடம் கூறினார்.

நமது அதிகார வழித்தடங்கள் ஊழல் சக்திகளிடமிருந்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன, அவர்கள் முடிவெடுப்பதை சட்டபூர்வமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நாடு விரக்தியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.  இந்தியா நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறுகளின் பூமியாக மாறியுள்ளது. நாடு முழுவதும் உற்சாகமான மனநிலை நிலவுவதாகக் கூறிய குடியரசு துணைத் தலைவர், இந்தியா இனி ஒரு ஆற்றலைக் கொண்ட நாடாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

உலகளவில் நமது தோற்றம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய திரு. தன்கர், விநியோகச் சங்கிலியைக் காப்பாற்றவோ அல்லது கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவோ நமது கடற்படை செயல்படாத ஒரு வாரம் கூட இல்லை என்றார். அவர்களின் சாதனை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

நீண்டகாலமாக ஆட்சியில் இருந்தவர்கள், அதிகாரப் பதவிகளை வகித்தவர்கள், தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் வாய்ப்பைப் பெற்றவர்கள், அதிகாரத்தை இழந்ததால் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஆர்வம் இல்லாதவர்கள் ஆகியோரிடமிருந்து நமது ஜனநாயக ஆட்சி முறைக்கு மிகப் பெரிய சவால் எழுகிறது என்று அவர் கூறினார்.

மக்களின் அறியாமையைப் பணமாக்க ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவதைப்போல ஜனநாயகத்திற்கு சவாலானது எதுவும் இருக்க முடியாது என்று எச்சரித்த குடியரசு துணைத்தலைவர், அத்தகைய நபர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "அதிகார பதவிகளை வகித்த சில நபர்கள், அதிகாரம் அல்லது அதிகாரத்தை விட்டு வெளியேறியவுடன், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் மோசமான பசியைக் கொண்டுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர் தனது உரையில், ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் மக்கள் அவர்களை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்று கூறினார். "இளம் உள்ளங்களை பின்பற்றவும், ஊக்குவிக்கவும், எந்தவொரு திறனிலும் பெரியவர்களின் பாராட்டைப் பெறவும் மதிப்புள்ள செயல்களால் நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்

நமது நாகரிக விழுமியங்களை வழிகாட்டும் கொள்கையாக விவரித்த குடியரசுத் துணைத் தலைவர், "சேவை உணர்வு மற்றும் கருணையுடன் இணைந்து பணியாற்றுங்கள்" என்று இளம் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் , லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் இயக்குநர் திரு. ஸ்ரீராம் தரணிகாந்தி மற்றும் பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம