முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் 17 வயதுச் சிறுவன் பலி

பொதிகை மலை உச்சியிலிருந்து புறப்பட்டு காட்டாற்று வெள்ளம் வந்தது,


அய்யோ விட்டுடோமே, போங்க போங்கனு சொல்றீங்களே.. வீட்டுல போயிட்டு என்ன பதில் சொல்லுவோம்..கோர முகத்தைக் காட்டிய குற்றால அருவியின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 17 வயதுச் சிறுவன். தலையிலடித்துக்கொண்டு கதறியழுத சிறுவனின் அத்தை. 

 தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக அந்திமாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்தது. நேற்றுக் காலையிலிருந்து வெயிலில்லாமல் இதமான சூழல் நிலவியது.


இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.





காலையிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குளித்து வந்த நிலையில் சுமார் 2.30 மணியளவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகப் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



தென்காசி குற்றாலம் பகுதியில் மழை பெய்யவில்லை என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் ஐந்தருவியில் முன்னதாகவே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.  ஆனால் பழைய குற்றாலத்தில் அறிவிப்புகள் எதுவும் இல்லாததால், தண்ணீரின் வரத்து அதிகரித்தவுடன் சுற்றுலாப் பயணிகள் தாங்களாகவே அருவிக் கரைக்கு வந்தனர்.

சுமார் 300 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலத்தில் குளித்து கொண்டிருக்கையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 40 க்கும் மேற்பட்டோர் சிக்கினர். பிறகு, அவர்களைத் தீயணைப்பு படையினர்  பாதுகாப்பாக மீட்டதில் திருநெல்வேலியிலிருந்து வந்த அஸ்வின் என்ற 17 வயதுச் சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். தீயணைப்புப் படையினர் அவரது உடலை மீட்டனர்.

மேலும் வேறு யாரேனும் சிக்கினரா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்தனர். தற்போது சம்பவம் நடைபெற்ற பழைய குற்றாலம் அருவியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.தென்காசி மாவட்டத்திற்கு கனமழை குறித்து வாநிலை ஆய்வு நடுவம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், தென்காசியில் நேற்று முன்தினம் 9 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியது. சங்கரன்கோவிலில் 2மி.மீ, அடைவிநாயனார் அணை 25மி.மீ, ராமனதி அணை 22மி.மீ, சிவகிரி 4மி.மீ, ஆய்க்குடி 3மி.மீ என்ற அளவில் மழை அளவு பதிவாகியது.

மேலும் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி, குற்றாலம், பகுதியில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவி சீசன் துவங்கும்.

பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் துவங்கும் குற்றால அருவி சீசன் கோடை மழையின் காரணமாகத் தற்போது முன்னதாகவே துவங்கியது.  மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்தும் அதிகரித்தது.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றால அருவி சீசன் தொடங்கியது. ஆனால், பொதுவாக மே மாதத்தில் வறண்டு, பாறையை ஒட்டியே தண்ணீர் வந்து கொண்டிருக்கும் குற்றாலத்தில் இந்த ஆண்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தற்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது கோடை விடுமுறை என்பதால் உள்ளூர் மக்களை விட சுற்றுலா வந்த நபர்கள் நிலை தெரியாமல் அருவியில் குளித்ததால் வெள்ளத்தில் சிக்கிய நிலையில். இன்று அருவியில் ஆளரவமற்ற பாதுகாப்பு பலமாய் உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம