முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிக்கலில் ரெட்பிக்ஸ் யூ-டியூப் சேனல்

சவுக்கு சங்கர் மீது கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஏழாவது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர் வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகரக் காவல்துறையினர் இது தொடர்பான ஆவணங்களை கோயம்புத்தூர் காவல்துறையினரிடம் வழங்கினர். சென்னை மதுரவாயலிலுள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தியாகராய நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் இரண்டு நாட்கள் முன்பு காலை முதல் தேனி மாவட்டக் காவல்துறையினர் நடத்திய. சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும்

அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். வலையொளியில் காணொலி வெளியிட்டால் வீட்டில் காவல்துறை ஆவணங்களைத் தேடும் தான்.   தமிழ்நாடு காவல்துறையில் உள்ள பெண் காவலர்கர்களை தவறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் தேனியில் வைத்துக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய வீடியோ பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததையடுத்து

கடந்த 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சிராப்பள்ளி தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால்  அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்பட்ட நிலையில்  அவரது மனைவி ஜேன்ஆஸ்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அங்கு காவல்துறையினர் இல்லாததால் சுமார் 45 நிமிடம் காத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தவர். "எனது கணவரைக் கைது செய்த பின்னர் இதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலுமில்லை. இது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தால் இங்கு புகார் பெற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் இல்லை. எனது கணவரைக் கைது செய்த திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர், அவரைக் கைது செய்துள்ளோம்





விரைவில் திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டு வரப்படுமென தெரிவித்தார். அதன் பிறகு எந்தவிதமான தகவலும் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விபரமும் காவல்துறையினர் வழங்க மறுக்கின்றனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம்.  திருச்சிராப்பள்ளி காவல்துறையினர் கண்டிப்பாக எனக்கு உரிய பதிலளிக்க வேண்டும். கைது செய்வதில் தவறில்லை. ஆனால் 48 மணி நேரத்திற்கு மேல் கடந்தும் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

ஆம் உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவர்கள் தண்டனை அடைவதும். வஞ்சகங்கள் வென்றதில்லை ! நெஞ்சுரம் தோற்றதில்லை ! உணர்வின் மொழி ஆளமானது வலிமையானதுநெருப்பைக் குப்பைகளால் ஒருபோதும் அனைத்து விட முடியாது.சவுக்கு சங்கரைத் தொடர்ந்து  அடுத்த ஜாதி வெறியனும் கைது என பலரும் இந்தக் கைதை வரவேற்க .




ரெட் பிக்ஸ் youtube சேனலின் எடிட்டர் பிலிப்ஸ் ஜெரால்ட் புதுடில்லியில் கைதாகி தற்போது சிறையில் உள்ளார்.   ரூபாய் 50 கோடியில பங்களா வாங்கி குடுத்தார்ன்னு சொன்னப்ப நிவேதா பெத்துராஜ் போட்டோவ முதல் பக்கத்துல போட்ட மீடியா தற்போது, சவுக்கு சங்கர் தேனி தங்கும் விடுதியில் கைதாகும் போது அவனுடன் உடனிருந்த செய்தியாளர் மாலதியைப் பற்றி  மட்டும் யாரும் வாய் திறக்கப் போவதில்லை.

ரூபாய் 3 கோடிக்கு வீடு வேற வாங்கிக் கொடுத்துருப்பது நமக்குக் கிடைக்கும் கூடுதல் தகவல். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ரெட்பிக்ஸ் யூ-டியூப் சேனலின் தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் இல்லத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரிலுள்ள ரெட்பிக்ஸ்  யூ-டியூப் சேனல் தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் இல்லத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் 


எஸ் பி ,யிடம் புகாரளிக்க வந்த பெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி

காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தனது கையை உடைத்ததாகக் குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும் காவல்துறை ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து சவுக்கு சங்கரை விசாரித்த நிலையில் கோயமுத்தூரில் யூடியூபர் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.


கடந்த 31.10.2023 அன்று Red Pix யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி, இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நேதாஜி பேரவையைச் சேர்ந்த வழகறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் கோயம்புத்தூர் மாநகர் பந்தயச் சாலை காவல் நிலையத்தில் 153, 153(A)(1)(a), 153(A)(1)(b)504, 505(ll) IPC ஆகிய சட்டப்பிரிவுகளில் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.                      எப்பவும் ஒரு ஆட்டத்துல ஆட்டத்தை ஆடறவனை விட அந்த ஆட்டத்தை அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருந்தவன் திடிர்னு உள்ளே நுழைந்து ஆட ஆரம்பிச்சிட்டான்னா. ஈசியா முடிச்சிட்டு போயிட்டே இருப்பான். 



சிலரிடம் பறித்து சிலரிடம் கொடுப்பதனால் எந்தப் பயனும் இல்லை.  உன் உழைப்பில் இருந்து கொடுத்துப்பார் உன் வியர்வையும் ருசிக்கும். யாருக்கும் ஏதும் தெரியவில்லை என்று ஆடிக்கொண்டிருக்காதிர்கள்.

இறைவனின் ஆணையால்,  நீங்கள் கண்காணிக்கபட்டுக்கொண்டிருக்கறிர்கள்.  உங்களுக்கான தீர்ப்பு நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை...ஓருநாள் மொத்தமாக கணக்கில் கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படும்..



காத்திருங்கள். என்ற நிலையில் சங்கர் பேசியது மிகத் தவறானது. பெலிக்ஸ் சங்கரின் பேச்சை எடிட் செய்யாமல் வெளியிட்டதும் நூறு சதவீதம் தவறானது. அதை நியாயப் படுத்த முடியாதது.              தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது பெண்கள் அதிக அளவில் கூடி சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



குறிப்பாக அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட எழும்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் குவிந்த பெண்கள் துடைப்பத்துடன் வந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர் வந்த வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டது. மேலும், காவல்துறை வாகனத்தின் முன் படுத்துக்கொண்ட மூதாட்டி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.


திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கொண்டு வந்த போது புதுக்கோட்டை வழக்கறிஞர் ரங்கபதாகதேவி தலைமையில் பல பெண்கள் கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

ஆனால், இப்போது சங்கருக்கும் பெலிக்சுக்கும்  நடப்பது பெண் காவலர்கள் குறித்த பேச்சுக்கான அவதூறு வழக்கிற்காகத்தான் என்று இன்னும் நம்புகிறீர்கள் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.குற்றப்பத்திரிக்கை வந்த பிறகு சட்ட வல்லுநர்கள் வழக்கை எளிதாகவே உடைப்பார்கள் என்பது நடக்கும் நிகழ்வுகளை வைத்து உணரலாம்.

ஆனால் ஏதோ ஒரு வகையில் தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டாரோ என்ற எண்ணத்தைத் தான் இதுவரை பரப்புகிறார்கள்.

சொத்துப் பட்டியல் என்று ஒன்றை வெளியிடுகிறார்கள். சவுக்கு சங்கருக்காகவும்,  பெலிக்சு செரால்ட்டிற்காக அரசியல் கட்சிகள் எதுவும் குரல் எழுப்பவில்லை. சீமான் தவிர 




சேலம் ஈரோடு மாவட்டங்களில் பழங்குடியினர் வீடுகளை அடித்து நொறுக்கி பொருள்களை வாரி இரைத்த காவல்துறையினர் மற்றும் மாநில அரசு பற்றி யாரும் பேசினார்களா? தெரியவில்லை குடும்பத்தில் தெரிவிக்காமல் கைது செய்து இரண்டு நாள்களாக என்ன செய்கிறார்கள்? என சவுக்கு சங்கரின் மனைவி மாலதி எக்ஸ் தளத்தில் பரபரக்கும் பதிவுகளை வெளியிட்டார்.

அதில், "சங்கரின் கைது திட்டமிடப்பட்டது, மனித உரிமைக்கு எதிரானது. சாதாரண மக்கள் எதிர் வொயிட் காலர் கிரிமினல்ஸ், அரசியல்வாதிகள், அல்லக்கைகள் சிறையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிறை அவர்களுக்கு வழங்கும் அடையாளமும், சாதாரண மக்களுக்கு வழங்கும் அடையாளமும் பெருமளவில் மாறுபடும். ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்குத் தெரிந்த சங்கருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 35 ஆயிரம். தினமணியிலிருந்து வந்தது மாதம் ரூபாய்.10,000 சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது. மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக் கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு ரூபாய்.2000 வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றான். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள்.


அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்குக் கவலையில்லை. அந்தத் தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும் பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை. தூத்துக்குடி கலவரத்திலிருந்து, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி இறப்பு வரை அவன் ஆதரவுக்கரம் நீட்டியது மக்களுக்கில்லை. மணல் மாஃபியாவிலிருந்து, காசா கிராண்ட், ஜிஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் வரை ஆரம்பித்து பின் அமைதி காத்த அவனின் கள்ளமெளனம் கேள்விக்குரியது தான். 4மாதக் குழந்தையுடன், எனது பெற்றோருடன் இருந்த பொழுது, என்னைக் குறித்து சவுக்கு இணையத் தளத்தில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டியதோடு, அப்பொழுது VAO வேலை செய்த எனது அப்பாவை வேலையை விட்டுத் தூக்க வழிவகை செய்வேன் எனவும் மிரட்டினான் அவன்.


அதன் பின்பு, அவன் சம்மந்தப்பட்டவற்றை முழுவதுமாய் நிராகரித்தேன். எவ்விதப் பின்னணியுமின்றி, அவனது மிரட்டல்களை, ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என துப்பிச் சென்றேன். அப்படியான மிரட்டல்களே இன்று அவனுக்குப் பல மடங்கு அன்பளிப்புகளுடன், கோடிகளில் புரள வைத்திருக்கிறது போலும். அரசியல் காரணங்களுக்காகவே அவன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை ஆர்வளர்களுக்கு, அரசு அடக்குமுறையை தினந்தினம் அனுபவிக்கும் சாமானிய ஏழை, நடுத்தர வர்க்க மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? திடீரென கோடியில் புரளுபவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் 'சாதாரண ஆங்கர் மாலதிக்கு அசையா சொத்துகள் (100 பவுன்), அசையும் சொத்துகள்(1கோடி வீடு) இது எப்படி வந்தது? மாலதியின் வங்கி அக்கெளண்ட் டிரான்ஸ்சேக்‌ஷன் பழையதும், சங்கரின் நட்புக்குப் பிறகான கணக்குகளையும் கணக்கிலெடுக்க வேண்டும். சங்கரின் சட்டப்பூர்வ மனைவி நான்' எனக் கூறி அதனை வருமான வரித்துறைக்கு டேக் செய்துள்ளார். இவ்வாறு வழக்கு மாநிலத்தில் பல பகுதிகளில் நகர்கிறது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 'ரெட் பிக்ஸ்' நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

MEDIA PRIVATE LIMITED இன் நிறுவன அடையாள எண் (CIN) U22130TN2013PTC091050 ஆகும். subashiniassociates@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் பதிவு செய்யப்பட்ட முகவரி எண்.21, முதல் பிரதான சாலை, சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை சென்னை 600004 என்ற முகவரியில் 

ரெட்பிக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்பது 09-05-2013 அன்று இணைக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் . இது ஒரு அரசு சாரா நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் RoC-Chennai இல் பதிவு செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் 100000.00 மற்றும் அதன் செலுத்தப்பட்ட மூலதனம் 100000.00.  தற்போது - செயலில் உள்ளது .                                   அடிப்படைத் தகவல்.                          CINU 22130TN2013PTC091050 இணைக்கப்பட்ட தேதி 09-05-2013. பதிவு செய்யப்பட்ட மாநிலம் தமிழ்நாடு நிறுவனங்களின் பதிவாளர் ரோசி-சென்னை பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுவனம் துணை வகை அரசு சாரா நிறுவனம் ஆகும்.                              இந்த நிலையில் தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இது மே மாதம் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணையை மே மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து கோயமுத்தூர் நீதிமன்றத்தின் நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

அதன்படி,  கோயமுத்தூரிலும், மதுரையிலும் தாக்கல் செய்த ஜாமீன் வழக்குகள்  மே மாதம் 20 ஆம் தேதி ஒரே நாளில் விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம