முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாயல் கபாடியா தனது 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்திற்காக கிராண்ட் பிரி விருதை வென்றார்

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் - பாயல் கபாடியா தனது 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்திற்காக கிராண்ட் பிரி விருதை வென்றார்


77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் திறமை தனித்துவமாக பரிமளித்தது. உலகின் முன்னணி திரைப்பட விழாவான இதில் இந்தியாவின் இரண்டு திரைப்பட இயக்குநர்கள்,  ஒரு நடிகை, ஒரு ஒளிப்பதிவாளர் ஆகியோர்  சிறந்த விருதுகளை வென்றுள்ளனர். செழிப்பான திரைப்படத் துறையைக் கொண்ட மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவின்   திரைப்பட இயக்குநர்கள்  கேன்ஸ் திரைப்பட விழாவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

30 ஆண்டுகளில் முதல் முறையாக, இரண்டு செவிலியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பாயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' என்ற இந்திய திரைப்படம், விழாவின் மிக உயர்ந்த விருதான பாம் டி'ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கபாடியாவின் படம் கிராண்ட் பிரி பிரிவில் இரண்டாவது இடத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம், எஃப்.டி.ஐ.ஐ முன்னாள் மாணவரான பாயல் கபாடியா, இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் ஆனார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாஜி என் கருணின் 'ஸ்வாஹம்' மிக உயர்ந்த விருதுக்காக போட்டியிட்டது.


இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஆடியோ-விஷுவல் ஒப்பந்தத்தின் கீழ், பாயலின் படத்திற்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ இந்தோ-பிரெஞ்சு இணை தயாரிப்பு அந்தஸ்தை வழங்கியது.  மகாராஷ்டிராவில் (ரத்னகிரி மற்றும் மும்பை) இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதிகாரப்பூர்வ இணை தயாரிப்புக்கான இந்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த இணை தயாரிப்பு செலவில் 30% க்கு இத்திரைப்படம் இடைக்கால ஒப்புதலைப் பெற்றது.

கன்னட நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட 15 நிமிட குறும்படமான "  சன்பிளவர்ஸ் வேர் தி பர்ஸ்ட் ஒன் டு நோ"  லா சினிஃப் பிரிவில் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர் சிதானந்தா எஸ் நாயக் முதல் பரிசை வென்றார். இயக்கம், மின்னணு ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலி ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றிய எஃப்.டி.ஐ.ஐ.யின் தொலைக்காட்சி பிரிவின் ஓராண்டு  திட்டத்தின் தயாரிப்பாகும். 2022 இல் எப்டிஐஐ-யில்  சேருவதற்கு முன்பு, சிதானந்த் எஸ் நாயக் 75 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் கிரியேட்டிவ் மைண்ட்ஸ் வெற்றியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இது சினிமா துறையில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை அங்கீகரித்து ஆதரிப்பதற்கான தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இந்தியாவில் பிறந்த மான்சி மகேஸ்வரியின் பன்னிஹூட் என்ற அனிமேஷன் திரைப்படம் லா சினிஃப் தேர்வில் மூன்றாவது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஷியாம் பெனகலின் பணியைக் கொண்டாடியது. இந்தியாவில் வெளியாகி 48 ஆண்டுகளுக்குப் பிறகு, பெனகலின் மந்தன், இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில்  பாதுகாக்கப்பட்டு, திரைப்பட பாரம்பரிய அறக்கட்டளையால் மீட்டெடுக்கப்பட்டு, கேன்ஸ் திரைப்பட விழாவில் கிளாசிக் பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்திய சினிமாவில் தனது வளமான படைப்புகளுக்காக அறியப்பட்ட மிகவும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க பியர் ஏஞ்சனியக்ஸ் ட்ரிபியூட்  விருது பெற்ற முதல் ஆசியரானார். 'அன் செர்ன் ரிகார்ட்' பிரிவில் 'தி ஷேம்லெஸ்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுசுயா சென்குப்தா கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாறு படைத்துள்ளார்.

கேன்ஸில் ஜொலிக்கும் மற்றொரு  திரைப்பட இயக்குநர்  மைசம் அலி, அவரும் எஃப்.டி.ஐ.ஐ முன்னாள் மாணவர். அவரது திரைப்படம் "இன் ரிட்ரீட்"  கேன்ஸ்  ஆசிட் நிகழ்ச்சியில்  திரையிடப்பட்டது. 1993  முதல்  சினிமாவின் பரவலுக்கான சங்கம் நடத்தும் பிரிவில் ஒரு இந்தியத் திரைப்படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

77 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமாவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டை நாம் கண்டோம். இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அதன் சாதனைகளைக் கொண்டாடுவதற்கு ஒரு சிறப்பு காரணம் உள்ளது.  ஏனெனில் அதன் முன்னாள் மாணவர்களான பாயல் கபாடியா, சந்தோஷ் சிவன், மைசம் அலி மற்றும் சிதானந்த் எஸ் நாயக் ஆகியோர் கேன்ஸ் விழாவில் பிரகாசிக்கிறார்கள். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இது, மத்திய அரசின் நிதி உதவியுடன்  செயல்பட்டு வருகிறது.

ஒற்றைச் சாளர முறையில் திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்தல், பல்வேறு நாடுகளுடன் கூட்டுத் தயாரிப்பு, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சத்யஜித்ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் திரைப்படக் கல்விக்கு ஆதரவளித்தல் அல்லது இந்தியாவை உலகின் உள்ளடக்க மையமாக உருவாக்குவதற்கான பன்முக முயற்சிகள் ஆகிய அனைத்தும் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம