முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலியல் கொடுமைப் புகாரில் கைதான மகுடீஸ்வரனுக்கு மாவட்டப் பொருளாளர் ஆனந்த் அனுப்பிய எச்சரிக்கை அறிவிக்கை

பாலியல் கொடுமைப் புகாரில் கைதான பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளர் அவரது  பொருப்பைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை மிரட்டி ரூபாய்.1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளார்.

அப்படி வசூலித்த பணத்தை உடனடியாக கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் படி பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது 

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகில் புஷ்பத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர். அவரது மனைவி செல்வராணி, புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராவார். மகுடீஸ்வரன் கடந்த மாதம் காலை உணவுத் திட்ட பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக எழுந்த புகாரின் விசாரணைக்குப் பிறகு கைதாகிச் சிறை சென்றார். அதனால், அவரது மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

மகுடீஸ்வரன் ரேக்ளா ரேஸ் நடத்தப்போவதாகவும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறி, தொழில் நிறுவனங்களை மிரட்டி ரூபாய்.1 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

அதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஆனந்த், மகுடீஸ்வரனுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதில், கட்சியின் பெயரைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களில் ரூபாய்.1 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. 

வசூலித்த தொகைக்கு எந்த நிறுவனத்திற்கும் முறையாக இரசீது வழங்கவில்லை. எனவே, ‘வசூல் செய்த தொகையை கட்சியின் மாவட்ட நிர்வாக வங்கிக் கணக்கில் செலுத்தி, அதற்கான விவரங்களை வழங்க வேண்டும். தவறினால் கிரிமினல் வழக்குத் தொடரப்படும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நோட்டீஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், மகுடீஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த போது கடந்த ஆண்டு தி.மு.க அரசையும், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியையும் கண்டித்து, ஆயிரக்கணக்கானோரைச் சேர்த்து போராட்டம் நடத்தியதையடுத்து தொப்பம்பட்டி ஒன்றியத்தில் செல்வாக்கான ஆளாகவே வலம்வந்தார். இந்த நிலையில் தான், பாலியல் புகாரில் சிக்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்


மாவட்டத் தலைவர் கனகராஜ் தெரிவிக்கையில் "மகுடீஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக கட்சியில் செயல்பட முடியவில்லை எனக் கூறி, கடந்த 2-ஆம் தேதி  கொடுத்திருந்த கடிதத்தை ஏற்றுத்தான் மாநிலத் தலைவர் ஒப்புதலுடன் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான புகார் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.       

  ஆனால்  அப்போது தேர்தல் நடவடிக்கைகளுக்காக காரணமாக  கட்சியினர் மீது எழுந்த புகார்கள் தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தலுக்கு பின் நடக்க உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான மண்டபத்தில் இன்று நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்தக் கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அணி மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கூட்டத்தில் புகாருக்கு ஆளானவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாகவும்.                              ஏழு முதல், 11 மாவட்டங்களுக்கு ஒரு பெருங்கோட்டமென, எட்டு பெருங்கோட்டங்களுமுள்ளன. மாவட்ட வாரியாக ஆய்வு செய்து கட்சி பணிகளை முடுக்கிவிட வேண்டிய பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என, கட்சியின் தலைமை கண்டறிந்துள்ளது. எனவே, அவர்களது பொருப்புக்களை மாற்றியமைப்பது மற்றும் மாநில நிர்வாகிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம