முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3 குற்றவியல் சட்டங்கள் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

 இந்தியாவில் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாகிற  சூழலில்,


இந்தச்சட்டங்கள் குறித்து 5.65 லட்சம் காவலா்கள், சிறைத்துறைப் பணியாளர்கள், தடயவியல் பணியாளர்கள், நீதித் துறை பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்குப் பயிற்சியளித்துத் தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.




பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பாக புதிய சட்டங்களின் அமலாக்கம் ஏற்படுத்தும் நோ்மறையான தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யப் பயிற்சியளிக்கப்படுமென்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.




கடந்தாண்டு நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டங்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு அரசிதழில் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியான நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி(திங்கள்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

தொழில்நுட்ப உதவிக்கு என்சிஆா்பி: புதிய குற்றவியல் சட்டங்களின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யும் தற்போதைய குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் (சிசிடிஎன்எஸ்) பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) அறிமுகப்படுத்தியுள்ளது.




புதிய வழிமுறைகளுக்கு தடையின்றி மாறுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் என்சிஆா்பி வழங்குகிறது. இதுகுறித்த தொடா்ச்சியான ஆய்வு மற்றும் ஆதரவுக்காக 36 குழுக்களையும் அழைப்பு மையங்களையும் என்சிஆா்பி அமைத்துள்ளது.

திறன் மேம்பாட்டுக்கு பிபிஆா்&டி: அதேபோல திறன் மேம்பாட்டுக்காக, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (பிபிஆா்&டி) பயிற்சித் தொகுதிகளை உருவாக்கி, அனைத்து பங்குதாரா்களுடனும் பகிா்ந்து கொண்டுள்ளது. மேலும் இதுதொடா்பாக பிபிஆா்&டி நடத்திய 250 பயிற்சி வகுப்புகள், இணையவழி மற்றும் நேரடி கருத்தரங்குகளில் 40,317 உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளா்கள் பயிற்சி பெற்றுள்ளனா்.

இந்த அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,65,746 காவலா்கள், சிறைத்துறை, தடயவியல் துறை, நீதித் துறை அலுவலர்கள் உள்பட 5,84,174 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.




களத்தில் பிற அமைச்சகங்கள், அமைப்புகள்..: சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பாக புதிய சட்டங்களின் அமலாக்கம் ஏற்படுத்தும் நோ்மறை தாக்கம் மற்றும் சீா்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சட்ட விவகாரங்கள் துறை சாா்பில் மாநிலத் தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாநாடுகளில் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் பங்கேற்றனா்.



மத்திய உயா் கல்வித் துறையின் வழிகாட்டுதலில் 1,200 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு சாா்பிலும் 9,000 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ சாா்பிலும் புதிய சட்டங்கள் பற்றிய விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதிய சட்டங்களின் கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக, இ-சாக்ஷியா, நியாயஷ்ருதி, இ-சம்மன் ஆகிய 3 செயலிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ளது.




‘மை-கவ்’ சமூக ஊடகக் கணக்குகளிலும் புதிய சட்டங்கள் பற்றிய தகவல்கள் தொடா்ந்து பதிவேற்றப்பட்டு வருகின்றன. இ-சம்பா்க் மூலம் கடந்த பிப்ரவரியில் ஏழு கோடிக்கும் அதிகமானவா்களுக்கு சட்டங்களைப் பற்றிய விழிப்புணா்வு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொடா் நடவடிக்கைகளால் புதிய சட்டங்களை அமல்படுத்த தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணா்வு உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முழுமையாக தயாராகிவிட்டதாகவே அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 ன் படி இனி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் தர வேண்டியதில்லை. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவே புகார் தரலாம். எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய கால அவகாசம் 90 நாட்கள் விசாரணையை முடிக்க வேண்டிய நாட்கள் 180. விசாரணை முடிவடைந்த பின்னர் 30 நாட்களில் தீர்ப்பு. சிவில் வழக்குகளிலும் இந்த நிலை வரவேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு