முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், சர்பானந்த சோனாவால், எல்.முருகன்

திரு ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்


2019-ஆம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வெற்றிகரமாகப் பொறுப்பு வகித்த திரு ராஜ்நாத் சிங்கிற்குப் பாதுகாப்புத் துறையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமரின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் ஒதுக்கியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதி உறுப்பினரான திரு ராஜ்நாத் சிங், 2019 ஜூன் 1 அன்று, முதல் முறையாகப் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.

திரு ராஜ்நாத் சிங் 1951 ஜூலை 10, அன்று உத்தரப் பிரதேசத்தின் சந்தோலி மாவட்டத்தில் பிறந்தார். கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆசிரியராகப்  பணியாற்றினார். 1977 - 1980 மற்றும் 2001 - 2003-ம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1991-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச அரசில் கல்வி அமைச்சராக இருந்தார். 1999-ம் ஆண்டு  முதல் 2000-ம் ஆண்டு வரை மத்திய அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.

பின்னர் 2000 – 2002 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தார். 2003-ம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். 1994-1999 மற்றும் 2003-2008-ம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டில் அவர் 15 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மே 27 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திரு ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2019, 2024-ம் ஆண்டில், அவர் ராஞ்சி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சராக திரு சர்பானந்த சோனாவால் பொறுப்பேற்றார்

மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், ஜூன் 10 அன்று புதுதில்லியில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய அமைச்சர், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான தொலைநோக்குடன் இலக்குகள் மற்றும் நோக்கங்களை வழங்குவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார். வளர்ச்சி அடைந்த  பாரதமாக மாற இந்த நாட்டிற்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு முழுமையானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு சோனாவால், இதை நோக்கித் தனது குழுவினர் தொடர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார்.



 இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், கடல்சார் துறையை மேம்படுத்துவதற்கும், பொருளாதார சக்தியாக மாறுவதற்கான நமது முயற்சியில் அதன் முழுமையான வளர்ச்சிக்கும் சில அற்புதமான பணிகளைச் செய்து வருகிறது. வளர்ச்சி அடைந்த  பாரதம் என்ற இறுதி இலக்கை அடைவதை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, தேசத்திற்கு முன்னுரிமை என்ற நோக்கத்துடன் தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் தொடர்ந்து உறுதியேற்போம். 2047, அமிர்த காலத்தின் தொலைநோக்குப் பார்வையில் திட்டமிட்டுள்ளபடி முழுமையான வளர்ச்சியை நோக்கி கடல்சார் துறையை மேம்படுத்த தமது அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றும்” என்று கூறினார்.


மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் பொறுப்பேற்றார்

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முருகன், தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி அரசின் கொள்கைகளை வெளியிடுவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுவதாக அவர் மேலும் கூறினார்.


ஏழைகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் முருகன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3 கோடி ஊரக மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை முடிவு இதற்கு உதாரணம் என்று குறிப்பிட்டார்.

அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, அமைச்சகம் மற்றும்  ஊடகப் பிரிவுகளைச் சேர்ந்த இதர உயர் அதிகாரிகள் டாக்டர் முருகனை வரவேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம