தமிழ் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 5,557 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் இதில் 3,035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 20 ஆண்டுகளில் 5,557 லஞ்ச வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல் தஞ்சாவூர் மாவட்டக் கல்வித் துறையில் RMSA திட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 2017-ஆம் ஆண்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உத்தரவிடக்கோரி மனுதாரர் குணசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் அமர்வில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, 2017-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததற்கு நீதிபதி அத...
RNI:TNTAM/2013/50347