மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 32,963 கனஅடியிலிருந்து 45,598 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 55.697 டி.எம்.சி.யாகவும். தொடர்ந்து நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது, மேலும் ஆடிப் பெருக்கு காரணமாக கூடுதல் நீர் திறக்கப்படும் மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் கூட்டுக் குடிநீர் திட்டம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கருத்துகள்