மதுரையிலிருந்து அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக 106 நபர்களிடம் போலியான விமானப் பயணச்சீட்டைக் கொடுத்து மோசடி.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமான இராம ஜென்ம பூமி பிரமாண்டமான இராமர் கோவில் காண பலரும் தயாராக உள்ள நிலையில் . தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்களும் விடப்பட்டன, சென்னையிலிருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவையும் உள்ளது.
ஆனால், மதுரையிலிருந்து அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக ஒரு சில மக்களிடம் நபர் ஒன்றுக்கு ரூபாய் 26 ஆயிரம் வீதம் பணம் வசூலித்துள்ளனர். விமான டிக்கெட் கட்டணமாக அவர்கள் வசூலித்த பணத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் போலியான பயணச்சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த விமான பயணச்சீட்டு வைத்துள்ள 106 நபர்கள் மதுரை விமான நிலையம் வந்தனர் அப்போது தான் அவர்கள் வைத்திருந்தது போலியான பயணச் சீட்டு என்பது தெரிந்தது. அயோத்திக்கு செல்ல எங்கள் நிறுவனத்தில் முன்பதிவு செய்யப்படவில்லை என 106 நபரிடமும் இண்டிகோ நிர்வாகம் கூறியது.
106 நபரிடமும் பணம் வசூல் செய்து போலியான விமானப் பயணச் சீட்டுகள் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களால் தாங்கள் கடவுள் பெயரால் ஏமாற்றப்பட்டது அறிந்த நிலையில் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்