2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர்.
முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்காத நிலையில், ஒரு ஆண்டுக்கு மேலாக சிறைச்சாலையில் இருந்து வருகிறார்.ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்படும் போது, அவருக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு சிறியதாக ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில்,
புழல் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் நான்கு மணியளவில் திடீரென உடல்நலக் குறைவேற்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, திடீரென ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலைக் குறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. வெளியான தகவல், இன்று மதியம் உணவு சாப்பிட்ட பிறகு செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததாகவும், அதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கருத்துகள்