பெங்களூர் ரயில் நிலையத்திற்கு நாய் இறைச்சிகள் பார்சல் மூலம் கொண்டு வரப்பட்டதா ஆய்வில் முடிவு தெரியவரும்
கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நாய் இறைச்சிகள் பார்சல் மூலம் கொண்டு வந்து நகரம் முழுவதும்
விற்கப்படுவதாக ஹிந்துத்துவா சமூக அமைப்புகளில் சில ஜூலை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புகாரளித்தன.ஜெய்ப்பூர் - மைசூரு விரைவு ரயில் மூலமாக இராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கண்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டிய நிலையில். கடந்த 12 ஆண்டுகளாக அந்தக் கடையில் நாய் இறைச்சி மட்டுமே விற்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் உணவு பழக்கம் அலுவலர்கள் நடத்திய சோதனையில், 90 பார்சல்கள் இரயிலிலிருந்து வந்திறக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.அதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறை ஆணையர் முழு விசாரணை நடத்த உத்தரவிட்டார். பெங்களூரில் நாய் கறி விற்றதாக வெளியான தகவல் பரவியதால் பரபரப்பானது. ரயில் நிலையத்தில் சுமார் 1,500 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பலருக்குத் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பெங்களூரு காவல்துறை இணைந்து கேஎஸ்ஆர் சிட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு நடைமேடை 8 ல் நாய் இறைச்சி இருப்பதாக புகார் சொல்லப்பட்டது. துவக்கத்தில் சுமார் 5,000 கிலோ இறைச்சி இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
அலுவலர்கள் சோதனையிட்டதில் 150 பெட்டிகளில் 1,500 கிலோ இறைச்சி இருப்பது தெரிந்தது. காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் "பெங்களூரில் ஒரு கிலோ இறைச்சி சராசரியாக ரூபாய்.750 முதல் 800 வரை விற்பனையாகிறது. கடந்த 6 மாதங்களாக சிலர் ஆட்டு இறைச்சி என ஒரு கிலோ ரூபாய்.550 முதல் 600 வரை விற்பனை செய்தனர். அதன் அடிப்படையில் சந்தேகம் வந்தது. அப்துல் ரசாக் என்பவர் தான் நாய் இறைச்சியை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்கிறார். அதுகுறித்து மாநில முதலமைச்சர், உணவுத்துறை, காவல்துறையினர் ஆகியோருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை." என சில வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்" நாங்கள் முறையாகத் தொழில் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஜெய்பூரில் இறைச்சிக் கூடம் உள்ளது. இறைச்சியை 5 டிகிரி வெப்பத்தில் நன்கு பராமரித்துத் தான் பெங்களூர் அனுப்புகிறோம். பணம் பறிப்பதற்காக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்." என அப்துல் ரசாக் என்பவர் கூறவே. "இது ஆட்டு இறைச்சி தான். நாய் இல்லை. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலர்களிடம் விரைவில் சமர்பிப்பேன்." என அவர் கூறினார்.
. "ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ள இறைச்சி மாதிரிகளின் முடிவுகள் 14 நாட்களில் கிடைத்துவிடும். அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றும் அலுவலர்கள் கூறினர். இதேபோல் தான் , கடந்த 2018 ஆம் ஆண்டு இராஜஸ்தானிலிருந்து சென்னை ரயில் நிலையத்துக்கு ஆயிரம் கிலோ நாய் இறைச்சி கொண்டு வரப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. ஆனால், பரிசோதனையில் அது நாய் இறைச்சி இல்லை, ஆட்டு இறைச்சி தான் என தெரியவந்தாக அலுவலர்கள் தெரிவித்தார்கள். அது போலவே இதுவும் இருக்குமா என்பது சோதனை முடிவுகள் வந்த பின் தான் உண்மை தெரியும். அதுவரை பெங்களூர் இறைச்சி உணவு உண்ணும் மக்கள் நிலை தான் கவலை தருவதாக அமையும்.
கருத்துகள்