தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குமிடையில் உருவாகியிருக்கும்
மோதல், வெறும் வார்த்தைப்போராக மட்டும் முடிந்துவிடாதென்பதும், இருவருமே தனிப்பட்ட முறையில் கடும் கோபத்தில், பரஸ்பரம் பகை தீர்க்கத் திட்டமிட்டு வருகிறார்கள்” எனக் கூறி பதற்றத்தை அதிகரிக்கிறார்கள் அரசியல் விவரமறிந்தவர்கள். பணியில் சேர்ந்து,
கடந்த, 16 ஆண்டுகள் மட்டுமே சென்னை ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராகப் பணியிலிருந்த செல்வம் என்ற செல்வப்பெருந்தகைக்கு, இங்கிலாந்து நாட்டில் லண்டனில் கல்லுாரி வாங்கும் அளவுக்கு சொத்துகள் சேர்ந்த விதம் எப்படி வந்தது?, எங்கிருந்து வந்தது?, என்று, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு செல்வப்பெருந்தகை, 'என் மனைவி லண்டனில் கல்லுாரி வாங்கியதும் உண்மை. அங்கு டைரக்டராக இருந்ததும் உண்மை. ஆனால், அந்த டைரக்டர் பதவியை 2012 ஆம் ஆண்டே ராஜினாமா செய்து விட்டார்.
அந்த லண்டன் கல்லுாரி வாங்க, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தான் 500 கோடி ரூபாய் கொடுத்தார்' என, வலைதளத்தில் பதிவும் செய்து விட்டார்.
தான் சிக்கிக் கொண்டால் போதாதென்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்த்துக் கோர்த்து விட்டார் பாருங்கள் அங்கே தான் நிற்கிறார் மிஸ்டர் செல்வப்பெருந்தகை !
அதன் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் எழுகிறது, கடந்த காலத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் உதவியாளராக இருந்தபோது, செல்வப்பெருந்தகையால் முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட வதந்திகளை அவரால் மறக்க முடியாதென்பது ஒருபுறம். அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோரின் எதிர்ப்பு மறுபுறம். இந்த நிலையில்
பல கிரிமினல் பின்னணிகளுடைய நபர் என பா ஜ க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை தமது கட்சியில் இணைவது கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும்'' என்று வெளிப்படையாகவே விமர்சனம் பல தலைவர்கள் செய்த நிலையில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜெயக்குமார். மிகுந்த பணபலத்துடன் வளையவரும் செல்வப்பெருந்தகையின் வரவால், காங்கிரஸ் கட்சியிலுள்ள பல பட்டியல் ஆதிதிராவிடர் ஜாதித் தலைவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பது தான் அவரைச் சேர்க்க மறுத்த பலரது பயத்துக்கும் அப்போதைய காரணமாக அமைந்தது.
அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எப்படி செல்வப்பெருந்தகையின் பின்னணிகள் பற்றி யோசிக்காமல் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்! என்பது தான் பலருக்கும் அன்று புரியாத புதிராக இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவர் சேர முயன்ற காலத்தில் செல்வப்பெருந்தகையைக் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக அறிவிக்கவில்லை.
திரிசங்குவுக்கு விஸ்வாமித்திரர் உதவியது போல, தனக்கு சிதம்பரம் உதவுவார் என்கிற நம்பிக்கையில் அப்போது வளைய வந்து கொண்டிருந்த செல்வப்பெருந்தகை! பின்னர் ப.சிதம்பரம் மூலம் கட்சியில் இணைந்து இன்று மாநிலத் தலைவராகவே ஆன நிலையில் தற்போது பழைய வரலாறு பாஜக தோண்டும் நிலையில் இனி அது தீவிரமாக மாறும் என்பதே அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இவையல்லாது ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.. இப்போது அந்த லண்டன் நிதி முறைகேடுகள் குறித்து
அந்தவகையில், செல்வப்பெருந்தகைக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை. குறிப்பாக, செல்வப்பெருந்தகை லண்டனில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என்று கே.அண்ணாமலை, அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.
இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை, X சமூகவலைதளத்தில் நேற்று செய்துள்ள பதிவில் :-
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியதில், கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.
மாணவர்கள், நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், புனிதக் கயிற்றை கையில் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து மத மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் பரிந்துரையை, இந்து சமயத்தின் அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடிகிறது. தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நூலகம், அறநெறி குறித்து பாரதிய ஜனதா கட்சிக்கு என்ன தெரியுமென்று பேசியிருக்கிறார்.
நீதிபதி சந்துரு குறிப்பிட்ட எரிந்துபோன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேக பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16 ஆயிரம் புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான். டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் தி மு க அரசின் குழுவிலிருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாசாரம் குறித்தெல்லாம் சந்துரு எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம். எதிர்ப்புகள் அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தான். அதற்கு பதிலளிக்க வேண்டியது தமிழ்நாடு அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல. அரசியல் பேச வேண்டும் என்றால் சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், தி மு கவின் கொள்கைகளை குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்