பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதும்,
பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை
இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் என பதில்மனு தாக்கல் செய்துள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம். தரப்பு வழக்கறிஞர் புகார்
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்ததில் பிறகு பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛‛பொதுச்செயலாளர் என எப்படிக் குறிப்பிட முடியும். அந்தப்பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பதவியைக் கூற முடியும்'' எனக் கேள்வி எழுப்பினர். அதையடுத்து, தவறுக்கு எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பினர் சார்பில் மன்னிப்புக் கோரியது. திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் மாதம்.,7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள்