இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியின் பட்டமளிப்பு விழா
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியின் 18-வது தொகுதி பயிற்சி அறிவியல் அலுவலர்கள் அணு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் தங்கள் ஓராண்டு நோக்குநிலை மற்றும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். எந்திரப் பொறியியல், ரசாயனப் பொறியியல், மின்னணுவியல், கருவியியல், அணுஉலை இயற்பியல், அணு எரிபொருள் சுழற்சி வேதியியல் ஆகிய துறைகளில் ஜூலை 26, 2024 அன்று இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பட்டம் பெற்றனர்.
டாக்டர். வித்யா சுந்தரராஜன் விழாவில் வரவேற்று பேசினார். கடந்த 18 ஆண்டுகளில், 600-க்கும் அதிகமான பயிற்சியாளர்கள் பட்டம் பெற்றுள்ளனர் என்று அவர் அப்போது கூறினார்.
புகழ்பெற்ற விஞ்ஞானியும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநருமான, திரு சி ஜி கர்ஹாட்கர் தமது உரையில், அணுசக்தித்துறையில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல தொழில்நுட்ப சிறப்போடு பின்பற்ற வேண்டிய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட்டார். பேராசிரியர். ஏ கே தியாகி, புகழ்பெற்ற விஞ்ஞானி, ஜே சி போஸ் ஆகியோர் கலந்துகொண்டு, நினைவுமலரை வெளியிட்டு முதலிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மதிப்புமிக்க ஹோமிபாபா பரிசுகளை வழங்கினர். அணு எரிபொருள் சுழற்சி வேதியியல் துறையிலிருந்து இந்தத் தொகுப்பில் ஒட்டுமொத்த முதலிடம் மற்றும் ஹோமி பாபா பதக்கத்தை திரு கன்னையா குமார் பகத் பெற்றார்.
கருத்துகள்