திருவள்ளூரில் வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசில் வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்கள் நலன் கருதி, திருவள்ளூர் மாவட்டக் கருவூல அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு வரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு 18.07.2024 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கருவூல அலுவலர் திரு சண்முகானந்தம் வரவேற்புரையாற்றினார்.
வருமானவரித் துறை அலுவலர்கள் திரு தீபன் குமார், திரு செந்தில் குமார், திரு ராஜாராமன் ஆகியோர் பல்வேறு விதிகளின் அடிப்படையில் முறையாக வரிப்பிடித்தம் செய்வது எவ்வாறு, வரிப்பிடித்தம் செய்வோரின் கடமைகள், பொறுப்புகள், விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி எடுத்துரைத்தனர். ட்ரேசஸ் (TRACES) தளம் குறித்து வரிப்பிடித்தம் செய்வது குறித்த ஆலோசகர் திருமதி ஜானகி விவரித்தார்.
இந்தக் கருத்தரங்கில் வரிப்பிடித்தம் குறித்த கையேடுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. வருமானவரி – ட்ரேசஸ் தளம் குறித்து தமிழில்ள 16 தலைப்புகளில் வருமானவரித்துறையின் அதிகாரபூர்வ யூட்யூப் தளத்தில் காணொலிகள் பயன்பாட்டுக்கு கிடைப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிடிஎஸ் நண்பன் என்ற சாட்போட், பிளேஸ்டோர் மூலமாக பயன்பாட்டில் இருப்பது பற்றிய தகவலும் தரப்பட்டது.
300-க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட கருத்தரங்கின் நிறைவில் மாவட்ட கருவூல நேர்முக உதவியாளர் (கணக்கு) திருமதி சித்ரா நன்றி கூறினார்.
கருத்துகள்