முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீராயி மக்கள் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

இரத்த சொந்தங்களின் அன்பையும், பாசத்தையும் கிராமத்துப் பின்னணியில்


மிகவும் அழுத்தமாகச் சொல்லும் கதையம்சம். ஒரு சிறிய பிரச்னையால் பிரிந்துபோன குடும்பம், 25 வருடங்களுக்குப் பின்னர் எப்படி ஒன்றாக இணைகிறது என்பது தான் வீராயி மக்கள் கதை.


தற்போதய காலச் சூழலில் சிதைந்து வரும் கூட்டுக்குடும்ப வாழ்வியல் கலாசாரத்தை மீட்டெடுக்க முயலும் செயல், முடியுமா, முடியாதோ ! ஆனால் இப்படத்தின் மூலம் முயற்சித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடந்தியுள்ளது இக் குழு எழுத்தாளர் நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட வேல ராமமூர்த்தி, காலம்சென்ற நடிகர் மாரிமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய ’வீராயி மக்கள்’ திரைப்படத்தின் டிரைவரான அதாவது முன்னோட்டக் காட்சி எனப்படும் First Look சுவரொட்டி எனும் போஸ்டர் வெளியானது,

இசை வெளியீட்டு விழாவில்  எழுத்தாளர் நடிகர்  வேல. ராமமூர்த்தி,  தயாரிப்பாளர்-ஹீரோ சுரேஷ் நந்தா,  எழுதி இயக்கிய நாகராஜ் கருப்பையா,  இயக்குனர் பேரரசு, லெனின், வெங்கட், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, ரவி மரியா, கேபிள் சங்கர், ரமா, சிந்தியா, பாடலாசிரியர்  மதுரகவி  படக்குழுவினர் 


@teamaimpr சார்பில் மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா உள்ளிட்டோர் நடித்த "வீராயிமக்கள்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘வீராயி மக்கள்'. எம். சீனிவாசன் ஒளிப்பதிவில், தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்த திரைப்படத்தை 



இயக்கியுள்ள நாகராஜ் கருப்பையா பேசிய போது, “இது கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, சந்தோஷத்தை மண் மனத்தோடு சொல்லும் படம். சொந்த ஊர், சொந்த மண், சொந்தங்கள் என்பது தனி சுகத்தை, விவரிக்க முடியாத உணர்வைத் தருவது. அதில் ஆயிரம் முரண்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்வது தான் அழகு என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.


கண்டிப்பாக இந்தக் கதை ஒவ்வொருவருக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கும். புதுக்கோட்டை, அறந்தாங்கி பின்னணியில் இதன் கதை களம் நடக்கிறது. அந்தப் பகுதியின் பேசும் வட்டார வழக்கு மொழியையும் படத்தில் கூறுகிறேன். இதில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அந்தந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம்.9-ஆம் தேதி படம் வெளியாகிறது” என்றார்.   இந்தத் திரைப்படத்தில் நடித்து முடித்த போது திடீரென்று நடிகர் மாரிமுத்து மரணமடைந்ததால், அவரது டப்பிங் மட்டும் இடம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நடிகர் மாரிமுத்துவின் குரல் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்தது என்பதால், அவரைப் போலவே பேச வைக்க 100 பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம்.


இறுதியில் உதவி இயக்குனர் அமல்ராஜ் என்பவரை டப்பிங் பேச வைத்தோம். அவரது குரல் 100 சதவீதம் பேர் மாரிமுத்துவின் குரலுடன் பொருந்தியுள்ளது’ எனத் தெரிவித்தார், படத்தில் நெஞ்சுக்குள்ளே பாடல் இதமான சூழலில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...