நில மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டுத் தலைமறைவான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது
நில மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டுத் தலைமறைவான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலையில் கேரளாவில் சிபிசிஐடி தனிப்படைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் குப்பிச்சிபாளையம் பிரகாஷுக்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் நகர் காவல் நிலையம் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகாரளிக்கப்பட்டது. கரூர் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த இந்த நில மோசடி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதனால் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கக் கேட்டு மனுத்தாக்கலும் செய்திருந்தார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்தார் 14 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது அதனால் அங்கிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை தனிப்படை காவல்துறையினர் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. எம். ஆர். விஜயபாஸ்கர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராவார். கரூர் வடிவேல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மனைவி விஜயலட்சுமி. இவருக்கு அட்சயநிவேதா, அஸ்வர்தவர்ணிகா என இரண்டு மகள்களும் உள்ளனர். அதிமுக வைச் சேர்ந்தவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரூர் பசுபதீசுவரர் கோவில் அறங்காவலர் குழுவில் தலைவராகவும் இருந்தார்.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.
கருத்துகள்