முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலத் தொல்லியல் துறையில் உதவிக் காப்பாட்சியர் பணிக்கு நியமனம் குறித்த சர்ச்சை உண்மை நிலை என்ன?

தமிழ்நாடு அரசின் மாநிலத் தொல்லியல் துறையில் உதவிக் காப்பாட்சியர் பணிக்கு நியமனம்


செய்வதில் சமஸ்கிருத மொழியில் பட்டப்படிப்பு அவசியம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)அறிவித்திருப்பது பலரும் நன்கு உண்மை உணர்ந்த போதும் சிலர் மட்டுமே அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தும் சர்ச்சையை உணர்ந்தாலும் சமஸ்கிருதம் மொழி அறிவு தேவை என்பது சரியான முறை என்பதே தமிழ் அறிஞர்கள் கருத்து. 

தமிழ்நாடு தொல்லியல் துறையில் உதவிக் காப்பாட்சியர் பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டிருக்கிறது. அதில், சமஸ்கிருத மொழியில் பட்டப் படிப்புடன், பழமையான வடமொழி இணைந்த தமிழ் மொழியில், பண்டைய இந்திய வரலாறுகள் குறித்த அறிவும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.சி.எஸ்.சி) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
சமஸ்கிருத மொழி கட்டாயம் எனக் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அரசியல் சார்ந்த பலர்  உண்மை அறியாதவர்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது  முதலில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அல்லது

ராமதாசு தெரிவித்துள்ளதாவது :- ‘இந்த ஒரு அறிவிப்பு சமஸ்கிருதத் திணிப்பு’ என்று விமர்சித்திருக்கிறார். , நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘சமஸ்கிருதம் தெரிந்திருப்பது தான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிந்து கொள்ள ஒரே தகுதியா.?. தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு’ என்ற கேள்விகளை அவர் அறியாமையால் எழுப்புகிறார். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் உதவிக் காப்பாட்சியர் பணிக்கான தேர்வில் தான் இந்தச் சர்ச்சையை இவர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்தப் பணிக்கு சமஸ்கிருதம் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தையும்  முன்வைப்பவர்கள் சில உண்மைகள் அறிய வேண்டிய அவசியம் பற்றி இறுதியில் நாம் கூறுவோம்,


அதற்கு முன் ‘தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்படும் கல்வெட்டுகளில் சில பிரமி மற்றும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடுகள் தான் அதிகமிருக்கும். ஆனால், வரலாற்றுத் தொல்லியல் அறிவும், தமிழ் மொழிப் புலமையும் உள்ளவர்களால் மட்டுமே கிரந்த எழுத்து கொண்ட தமிழ் மொழியை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, அதற்கு சமஸ்கிருதப் பட்டப்படிப்பு தேவையில்லை’ என்பவர்கள். மேலும், ‘தமிழகத்தில் தொல்லியல் துறையில் உயர் பணிகளில் இருப்பவர்கள் எவரும் சமஸ்கிருதம் படித்து பணியில் சேரவில்லை. எனவும் கூறுகின்றனர் பணியில் சேர்ந்த பின் கிடைத்த அனுபவத்தின் மூலமாகவே கிரந்த எழுத்துகள் குறித்த அறிவை அவர்கள் வளர்த்துக்கொண்டனர். தொல்லியல் துறை பணிகளுக்கான ஆட்கள் தேர்வு விதிகளில் கூட சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லப்படவில்லை’ என்ற வாதமும் அவர்கள் சார்பில் முன்வைக்கப்படுகிறது.

சமஸ்கிருதம் கட்டாயம் என்று கூறியிருப்பது அப்பட்டமான சமஸ்கிருத திணிப்பு’ என்றும் விமர்சிக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எனும் ராமதாசு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்பதுதான் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அப்படி இருக்கும் போது, சமஸ்கிருத பட்டம் படித்தவர்கள் தமிழகத்தில் எங்கிருந்து கிடைப்பார்கள்? சமஸ்கிருதம் படித்தவர்களை தொல்லியல் துறையில் திணிப்பதற்காகவே இத்தகைய கல்வித் தகுதிகளை தமிழ்நாடு அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்ட ஆட்கள் தேர்வு அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்று, சமஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கி விட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழித் தமிழை கட்டாயத் தகுதியாக அறிவித்து புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும்’ என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அல்லது ராமதாசு வலியுறுத்தியிருக்கிறார். மேலும் 

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘யாருடைய உத்தரவின் பேரில்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)-யின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலின் பேரில் தான் இது வெளியிடப்பட்டிருக்கிறதா, அப்படி யென்றால், அமைச்சர் ரகுபதி கூறியது போல், உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தி.மு.க ஆட்சியா, திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா.. அல்லது மனு நீதியா’ என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். மேலும், ‘தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்திருக்கிறது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா, தமிழ் மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம், திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும்.


அரசுப் பணியிலிருந்து தமிழை அகற்ற தி.மு.க அரசு முனைவது கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்“ என்கிறார் சீமான்.   இது குறித்து ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலரான கே.ஸ்ரீதரன் கருத்து . “நான், தொல்லியல் துறையில் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டவன். நான் பணியில் சேர்ந்த போது சமஸ்கிருதம் படிக்கவில்லை. ஆனாலும், பிறகு சமஸ்கிருதம் கற்று அறிவை வளர்த்துக்கொண்டேன். ஆனால், என்னுடைய பணியில் சேர்ந்த நண்பர்கள் பலர் டிப்ளோமா படிப்பு மூலம் சமஸ்கிருதம் கற்றிருந்தனர். கல்வெட்டுக்களையும், செப்பும் பட்டயம் எனும் செப்பேடுகளையும் படிப்பதற்கு சஸ்கிருதம் தெரிந்திருந்தால் தான் எளிதாக இருக்கும்.


சமஸ்கிருத அறிவு இல்லாமலும் சமாளிக்க முடியும். ஆனால் அதே நேரம், சமஸ்கிருதம் தெரிந்திருந்தால், கல்வெட்டுகளைப் படிக்க உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. என்கிறார். உதாரணமாக, சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பார்கள். அதன் பொருள் புரிய வேண்டுமானால்  சமஸ்கிருத மொழியில் அறிவு தேவை.



தொல்லியல் செப்பேடுகள் வடமொழியில் தான் இருக்கும். அதில், முன்னுரை சமஸ்கிருத்தில் இருக்கும். வரலாற்றுக்கு அடிப்படையான சான்றுகளைத் தெளிவுபடுத்த சமஸ்கிருத அறிவு கொஞ்சம் தேவை தான். பொருட்களைச் சேகரிப்பதும், அவற்றை காட்சிப்படுத்துவதும் தான் காப்பாட்சியர், மற்றும் உதவிக் காப்பாட்சியர் ஆகியோரின் முக்கியமான பணிகள். ஆகவே, இந்தப் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தேவை என்று சொல்ல முடியாது. அதே நேரம், சமஸ்கிருதம் தெரிந்தால், அவர்களுக்கு அது கூடுதல் தகுதியாக இருக்கும். சில இடங்களில் சமஸ்கிருதம் அவர்களுக்கு பயன்படவும் செய்யும்” என்கிறார் கே.ஸ்ரீதரன்.


இப்போது நாம் இது சார்ந்த உண்மை நிலைக்கு வருவோம்.வடமொழி இல்லாமல் தமிழ் ஏது 1980 வரை நம் புழக்கத்தில் இருந்த நிலை மறந்து வரலாறு அறியாமல் பேசும் இவர்களின் செயலை கடந்த தலைமுறை மக்கள் நன்கு அறிவோம், ஆனால் இந்த தலைமுறையில் பலரும் தாய்மொழியான  ஒழுங்கான தமிழ் பேச எழுதத் தெரியாத நபர்கள் தான் முன்னால் முதல்வரை ஜெயலலிதா என்று கூறுவதை செயலலிதா என்பது உச்சரிப்புப் பிழை



அது போலவே ஸ்டாலின் மற்றும் இராமதாஸ் மற்றும் கிருஷ்ணன் ஹரி பாஸ்கர் என்பதும் இஸ்லாமியம் கிருஸ்தவம் போன்ற பெயர்களும் வடமொழி இல்லாமல் உச்சரிப்பு இல்லை.அதுபோல நாம் சுதந்திரம் அடையும் முன் இருந்த மன்னர் ஆட்சியில் இதுபோன்ற நிலை இல்லை, இன்று வரலாறு தெரியாது உள்ள பலர் பிழையான வரலாறு எழுகின்றனர் . அதை தடுக்க.  A chronologically organized historical study   குரோனாலஜிக்கல் துறை உள்ளது


ஆனால் நீண்ட உறக்கத்தில் குரட்டை விடுவதால் தான் இந்த வரலாற்று பிழை நடக்கிறது, 
சோழப் பேரரசின் மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தி கூறும் கல்வெட்டு தமிழ் தானே இதை படித்த பிறகாவது இந்த வினா எழுப்பும் நபர்கள் உணரட்டும்.       "ஸ்வஸ்திஸ்ரீ். திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகைபாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண் திசை புகழ் தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும் திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன் எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவி ராஜகேசரி  ன்மரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு"  இதில் தமிழ் வடமொழி இரண்டறக் கலந்தது.  இந்த நிலையில்  தாம்பரம் மாநகராட்சி பெயர்ப்பலகை பிழைகள் தான் தமிழ்நாட்டில் தற்காலத் தமிழ் நிலை உணர்த்தும் .. அதைத் தடுக்க இயலாத இவர்கள் வரலாற்று நிகழ்வு குறித்து நடத்தும் விவாதம் சமூகத்தில் ஏற்புடையதாக இல்லை என்பதே பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...