முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் 'ரொபாக்கோ'வின் சொத்துக்களை முடக்க அரசாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜனங்கள் பணத்தை ஏமாற்றி நில  மோசடி வழக்கில் சிக்கிய நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் 'ரொபாக்கோ'வின் சொத்துக்களை முடக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்


என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நடராஜன் தாக்கல் செய்த வழக்கில் ரொபாக்கோ பிராப்பர்ட்டீஸ் நிறுவன முதலீட்டாளர்கள் நலச் சங்க தலைவராக உள்ளதால் மதுரையில் பாலசுப்பிரமணியன் என்பவர் நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் துவக்கினார். அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி, குறைந்த விலையில் வீட்டு மனைகள் (பிளாட்கள்) கிடைக்குமென நிறுவனம் அறிவிப்பு செய்தது. நிறுவனம் நம்பிக்கையானது நம்ப வைக்கும் வகையில் முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் வீட்டு மனைகள் துவக்கத்தில் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 250 நிதி நிறுவனங்களை பாலசுப்பிரமணியன் துவக்கினார். அந்த நிறுவனங்கள் சிலவற்றின் இயக்குனர்கள் சார்லஸ், இளையராஜா. ஆகியோரால் சிவகங்கை மாவட்டத்தில் ரொபாக்கோ நிறுவனம் துவக்கப்பட்டது.

சார்லஸ், இளையராஜா மற்றும் அவர்களின் ஊழியர்கள், மற்றும் முகவர்கள் கூறியதை நம்பி எங்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் ரூபாய்.35 கோடியை முதலீடு செய்தனர். அதற்கு ரசீதுகளும் வழங்கப்பட்டன. உறுதியளித்தபடி டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி அல்லது வீட்டு மனைகளை அந்த நிறுவனம் வழங்கவில்லை.

சார்லஸ், இளையராஜா உள்ளிட்ட சிலருக்கு எதிராக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் பிரிவில் 2023 ஆம் ஆண்டில் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கைதான சார்லஸ், இளையராஜாவிற்கு மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. அவர்கள் வெளியே வந்த பிறகும், புதிய நிறுவனங்களைத் துவக்கி மக்களை ஏமாற்றும் செயலை மீண்டும் துவக்கியுள்ளனர்.

முதலீட்டாளர்களிடம் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்து வற்புறுத்துகின்றனர். அந்த இருவர் மற்றும் சிலருக்குச் சொந்தமான சொத்துகளின் பட்டியலை காவல் துறையினரிடம் அளித்தோம். அவர்கள் சொத்துக்களை முடக்க தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்ப முன்வரவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பாதுகாப்பதில் காவல் துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர்.மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்தனர். இருவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அந்த வழக்கை விசாரித்தார்.

​​மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனம் மொத்தம் ரூபாய்.172 கோடியை வழங்க வேண்டியுள்ளது. சார்லஸ், இளையராஜா ரூபாய்.6 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜாமினில் வெளியே வந்த பின்னர் சாட்சிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் புகார்களை வாபஸ் பெறுமாறு மிரட்டுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்: பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.  அரசு தரப்பில் வழக்கறிஞர்: நிறுவனத்தின் பல சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இடைக்காலமாக முடக்குவதற்கு அரசாணை வெளியிடுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. என்றார் இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி: சொத்துக்களை உடனடியாக முடக்க சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் சட்டப்படி அரசாணை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர் விரைவாக மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை, முன்னேற்றம் குறித்து அரசு தரப்பில் செப்டம்பர்.25 ஆம் தேதியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என  உத்தரவிட்டார்.  இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934, (அத்தியாயம் III-B) ன் கீழ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வேளாண்மை, தொழிற்சாலை பணிகள் மேற்கொள்ளவோ, அசையாச் சொத்துகளை வாங்குவதோ, விற்பதோ அல்லது கட்டுமானத் துறையில் நேரடியாக ஈடுபடவோ முடியாது. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் எத்தகைய வைப்புத் தொகைகளையும் பெறக் கூடாது. இருப்பினும் இந்திய ரிசர்வ் வங்கி 81 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து நிரந்தர வைப்புத்தொகை பெற அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வேளாண்மை, தொழில்துறை செயல்பாடுகள், எந்தவொரு பொருட்களையும் வாங்குவது அல்லது விற்பனை செய்வது (பத்திரங்களைத் தவிர) அல்லது எந்தவொரு சேவைகளையும் வழங்குதல் மற்றும் அசையாச் சொத்தின் விற்பனை அல்லது கொள்முதல் அல்லது கட்டுமானம் ஆகியதுறைகளில் வங்கி அல்லாத நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.

9 நவம்பர் மாதம் 2017 ஆம் தேதியன்று, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வேலையை வெளியில் கொடுத்து (அவுட்சோர்சிங்) செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டும் அறிவிப்பை வெளியிட்டது. புதிய விதிமுறைகளின்படி, உள் தணிக்கை, முதலீட்டுத் துறையை நிர்வகித்தல், உங்கள் வாடிக்கையாளர் (KYC) அறிந்து கொள்வதற்கான மூலோபாய மற்றும் இணக்கச் செயல்பாடுகள் மற்றும் கடன்களை அனுமதித்தல் மற்றும் வசூலித்தல் போன்ற முக்கிய மேலாண்மைச் செயல்பாடுகளை வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் வெளிநபர்களுக்கு (அவுட்சோர்சிங்) வழங்க முடியாது.

வங்கியல்லாத நிதிநிறுவனப் பணியாளர்கள் அவுட்சோர்சிங் செயல்பாட்டைச் செய்ய வேண்டிய அளவிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் தகவல்களை அணுகிப் பெற வேண்டும்.

நேரடி நிதி உதவி மற்றும் கடன் மீட்பு முகவர்களுக்கான நடத்தை விதிகளை வங்கியல்லாத நிறுவனங்களின் கண்காணிப்பு வாரியங்கள் அங்கீகரிக்க வேண்டும். கடன் வசூலைப் பொறுத்தவரை, வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் அவற்றின் வெளி முகவர்களும் எந்த விதமான அச்சுறுத்தலையும் துன்புறுத்தலையும் நாடக்கூடாது. அனைத்து வங்கியல்லாத நிதிநிறுவனங்கள், தங்கள் சேவை தொடர்பான குறைபாடுகளை வாடிக்கையாளர்கள் கேட்டறியவும், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கவும் தனி அமைப்பை நிறுவிக்கொள்ள வெளி நிறுவனங்களை அவுட்சோர்சிங் மூலம் அமர்த்திக் கொள்ள வேண்டும். வேண்டும்.முதலீடு, குத்தகை, தவணைத்திட்டம், கடன் என்ற வகை நிறுவனமல்லாத, ஏதாவது ஒரு திட்டத்தின் அல்லது ஏற்பாட்டின் அல்லது ஏதாவது ஒருவகையின் கீழ் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதை தனது முதன்மை வியாபாரமாகவுடைய, ஒருவகை வங்கிசாரா நிதி நிறுவனத்தை (NBFC), எஞ்சியுள்ள வங்கிசாரா நிதி நிறுவனம் என்பர். இந்த நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி, ரொக்கச் சொத்துக்களைத் தவிர முதலீடுகளையும் வைத்திருக்க வேண்டும். இந்த வகை நிறுவனங்கள் முதலீட்டை பெறும் வழிமுறைகள், முதலீட்டாளர்களின் தொகையை பயன்படுத்துவது குறித்த விதிமுறைகள் ஆகிய செயல்பாடுகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களிலிருந்து மாறுபடுகின்றன. இந்த நிறுவனங்கள் உச்ச வரம்பில்லாமல் வைப்புத் தொகையை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு எஞ்சியுள்ள வங்கியல்லாத நிதி நிறுவனமும் தன்னால் ஏற்படுத்தப்பட்ட வைப்புத்தொகை மற்றும் செய்யப்பட்ட முதலீடுகளின் தொகை, வைப்பாளர்களுக்குத் தர வேண்டிய மொத்த கடன் தொகைகளை விட குறைவாய் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் வைப்பாளர்களின் நலனை பாதுகாக்க, இந்த நிறுவனங்கள், பாதுகாப்பானவையும், ரொக்கத்தன்மையுள்ளவையுமான கடன் பத்திரங்களை உள்ளடக்கிய, மத்திய மற்றும் மாநில அரசாங்கக்கடன் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் (SCB) நிலை வைப்புத்தொகைகள், வைப்புத்தொகைச் சான்றிதழ்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது ஐந்து தமிழ்நாடு NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து..! ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை..!

இந்தியாவில் வங்கி மோசடிகள், முறையாக நிர்வாகம் செய்யாத நிதி நிறுவனங்கள் மூலம் மக்கள் தங்களுடைய பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் இருக்கும் அனைத்து நிதி நிறுவனங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறது, அதிலும் குறிப்பாக சிறு நிதி நிறுவனங்கள் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆர்பிஐ இன்று நான்கு NBFC நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்து, பிற 13 NBFC நிறுவனங்கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழைத் தானாக முன்வந்து ஒப்படைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி நான்கு NBFCகளின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ய முக்கிய காரணமாக இருந்தது, வங்கிச் சட்டம் 1934 இன் பிரிவு 45-IA (6) கீழ் மீறல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ராஜஸ்தானின் பாரத்பூர் இன்வெஸ்ட்மெண்ட் லிட், மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட KS ஃபின்லீஸ் லிமிடெட், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பில்ட் கான் ஃபைனான்ஸ் லிமிடெட் (Build Con Finance Limited) மற்றும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆப்ரேட்டிங் லீஸ் அண்ட் ஹயர் பர்ச்சேஸ் நிறுவனம் லிமிடெட் (Operating Lease and Hire Purchase Company Limited) ஆகியவை அடங்கும். NBFC உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள், RBI சட்டத்தின் படி இனி எவ்விதமான நிதி நிறுவனத்தின் வணிகத்தை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி நான்கு NBFCகளின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ய முக்கிய காரணமாக இருந்தது, வங்கி சட்டம் 1934 இன் பிரிவு 45-IA (6) கீழ் மீறல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம