முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே பதிவெண் கொண்ட நான்கு ஆம்னிப் பேரூந்துகள் சிக்கியது

தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப் படி போக்குவரத்து விதிகள் கூறும் தமிழ்நாடு (TN) பதிவெண்களைக் கொண்ட ஆம்னிப் பேருந்துகளைத் தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்க வேண்டும்.


ஆனால், புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் நாகலாந்து என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண்களைக் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருவதை நாம் அன்றாடம் காணலாம். இந்த விதிமீறலால், தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்புகள் ஏற்படுகிறது. அதனால் தான், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை, தமிழ்நாடு பதிவெண்ணாக மாற்ற வேண்டும் என்றும், வெளிமாநில பதிவெண்களைக் கொண்ட ஆம்னி பேருந்துகளைத் தமிழ்நாட்டில் இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.ஆனாலும், அரசின் உத்தரவை மதிக்காமல் பல ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயக்கப்படுகிறது வெளிமாநில பதிவெண்கள் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உள்ளூர் பதிவெண்களில், புது சர்ச்சையும்  தற்போது கிளம்பியுள்ளது. அதாவது, ஒரே பதிவெண்களில் நான்கு ஆம்னிப் பேரூந்துகளை இயக்கியிருப்பதாக புகார் வந்துள்ளது.

மதுரையிலிருந்து, தனியார் சொகுசு ஆம்னிப் பேருந்து ஒன்று, 23 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்குப் பயணித்தது. சுரேஷ் என்பவர் இந்தப் பேருந்தை ஓட்டிச் சென்றார். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

அப்போது, அந்த பேரூந்தில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட்டேக், இன்னொரு பேரூந்துக்கும் பயன்படுத்தப்பட்டதை கண்டு அங்கு பணியிலிருந்த ஊழியருக்குச் சந்தேகம் எழுந்ததனால், உடனடியாக, பேரூந்தை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடி அலுவலர்களுக்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.வரதன் ஏர் டிராவல்ஸ் என்ற அந்தப் பேருந்து, புதுச்சேரி பதிவெண் கொண்டது.. ஆனால், மற்றொரு பேருந்தின் பாஸ்டேக்கை தவறாகப் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே பதிவு எண்ணில் 4 பேரூந்துகளை மாற்றி மாற்றி ஓட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சாலை வரி கட்டாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரே பேரூந்தின் ஆவணத்தை, நான்கு பேரூந்தூகளுக்கும் பயன்படுத்தியது உறுதியானது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் பல லட்சம் ரூபாயையும் மோசடி செய்திருக்கிறது.ஒரே பதிவெண்ணில் நான்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வந்துள்ளது தற்போது கவனத்தில் வந்துள்ளது, இதுபோல் இன்னும் எத்தனை இடங்களில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரியாததால், அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் ஆவணங்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை வலுக்கத் துவங்கியிருக்கிறது.இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் "ஒரே பதிவெண்ணில் இயக்கிய நான்கு தனியார் சொகுசுப் பேரூந்து உரிமையாளர் புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம். அவர் மீது ஒரே பதிவெண்ணில் நான்கு பேரூந்துகளை இயக்கி, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...