முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்ய வலியுறுத்தியவரை மன்னிப்புக் கேட்க வைத்த மத்திய அமைச்சர் பலரும் கண்டனம்

உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு இருக்கிறது.   


ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள்” என்பது குறித்து தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோயம்புத்தூர் அன்னபூர்ணா உணவகக் குழுமத் தலைவருமான சீனிவாசன் சில நிமிடங்கள் பேசினார்.  இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக காணொளி ஒன்றும்  பரவியது.இந்த விவகாரம் தற்போது அதிகம் விவாதிக்கும் நிலையில்,


மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, ‘தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என லண்டனில் உள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது


அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். இருப்பினும், GST குறித்து நியாயமாகக் கருத்துத் தெரிவித்தவரை மன்னிப்புக் கேட்க வைத்திருப்பது கண்டனத்திற்குரியது' என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "கோயம்புத்தூர் அன்னபூர்ணா தொழிலதிபருக்கு அவமரியாதை ஏற்படுத்தியிருக்கிறார்கள்" எனக் கண்டனம் தெரிவித்த நிலையில், கேரளா மாநில கங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "இதுதான் அவர்களின் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அன்னபூர்ணா சீனிவாசன் எழுப்பிய கேள்வி நியாயமானது தான். ஆனால், அவர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு ஆணவம்!" எனப் பதிவிட்டுள்ளது.

கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் 




காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி, “பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அருவருப்பானதும். கூட. தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என  தெரிவித்திருக்கிறார்.                  நடந்த நிகழ்வுகள் குறித்துக் காண்போம் :- பல தொழில்துறை அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து  பேசியதாவது, "உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ எங்களுடைய ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க. ஸ்வீட்டுக்கு ஐந்து சதவீதம், உணவுக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் உள்ள வைக்குற கிரீம்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது.


அவங்க வரும்போதெல்லாம் ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி, காரம் சாப்பிடுவது, காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி என்பதை பார்க்கும் வாடிக்கையாளர்கள், பன்னைக் கொண்டா.. அதில் கிரீமை நாங்களே தடவிக் கொள்கிறோம் என்கிறார்கள்.



கடை நடத்த முடியவில்லை மேடம். இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை, ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டுத் திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்" எனக் கோரிக்கை வைத்தார். ஏற்கெனவே ஜிஎஸ்டி குறித்து, சிறுகுறு மற்றும் நடுத்தர வியாபாரிகளிடையே பலவிதமான சலசலப்புகள் இருக்கையில், சீனிவாசனின் பேச்சு மொத்த வியாபாரிகளின் மனவேதனையையும் கொட்டி தீர்த்ததை போலானதாகக் கூறப்படுகிறது.




எனவே சீனிவானின் பேச்சுக்கு பெருவாரியான ஆதரவும் கிடைத்தது. சமூக வலைதளத்தில்  இவரது பேச்சு பரவலாகப் பகிரப்பட்ட நிலையில் மறுதினம் 

செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அது தொடர்பாக ஒரு காணொளி வெளியான நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும், "கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்கச் சொல்வீர்களா?" எனக் கொந்தளித்தனர்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் பேசின உண்மை மாறாது. அவரின் கேள்வி நாடு முழுவதும் பரவி விட்டதனால் அதிகாரம் அதை பணிய வைக்கிறது. என பலரும் பேசும் நிலை. ஆக இதில் பொது நீதி யாதெனில் எந்த வியாபாரம் செய்யும் நபரும் கை முதலில் ஜி எஸ் டி வரி செலுத்துவதில்லை அதை மக்கள் தான் கட்டும் நிலை அதனால் தான் மக்கள் மத்தியில் பிஜேபி அரசியல் ரீதியாக எடுபடவில்லை என்பதே உண்மை , அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் பேசியது கொஞ்சம் தான் இன்னும் கேள்விகள் அதிகம் உண்டு கேட்டால் பதில் வருமா என்பது எழுவினாஅன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் பேசிய விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் வானதி சீனிவாசனும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கையாண்ட விதம் தான் பேசுபொருளாகிறது.


ஒருவர் உங்க ஹோட்டலில் என்ன சாப்பிடுகிறார் என்பதை இப்படித் தான் பார்ப்பீர்களா?

ஒருவர் என்ன சாப்பிடுகிறார் என்பதை பொதுவெளியில் எப்படிச் சொல்லலாம்?

ஒரு பெண் தலைவர் என்றால், துச்சமாகப் பேசிவிடுவதா?

அவரே தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கேட்டார்.

இதெல்லாம் சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் விளக்கம்..!  ஆக பொது வாழ்வில் மக்கள் பிரதிநிதிகள் சில முன்னுதாரணமாக இருக்க வேண்டியது தலையாய கடமை,




தொழில் நடத்துபர்களை அழைத்து குறை கேட்புக் கூட்டம் நடத்துகிறீர்கள்! அங்கே வந்த மத்திய அமைச்சருக்கோ, அதை ஏற்பாடு செய்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கோ கிடைக்காத முக்கியத்துவம் குறைக்கு தீர்வு தேடி வந்தவருக்கு கிடைக்கிறது. அவர் அப்போது பேசியவற்றில் தொடர்ந்து பேசியவர், GST., அலுவலர்கள், இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது, அதே சமையல் அறை, அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது, அலுவலர்களே திணறுகிறார்கள்.  உளுந்தம் பருப்பு உற்பத்தி இடத்தில் ஒரு GST விற்பனை ஆகும் போது மொத்த விற்பனை கடையில் ஒரு GST  நேரடி விற்பனைக் கடைகளில் ஒரு  GST அந்த உளுந்தம் பருப்பு இட்லி ஆகும் போது ஒரு GST இப்போது ஒரு உளுந்தம் பருப்பு இட்லி ஆகும் போது மூன்று GST களைச் சந்திக்கும் போது விலை உயர்வு மக்கள் தலையில் தான் சேர்கிறது என்பது உண்மை. அவர்களுக்கும் உதவி பண்ணுங்க . திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மாதிரி ஏதேனும் நிகழ்வு வரும் போது, வருஷத்துல ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு 7500 என பில் போடுகிறோம். கூடுதல் பெட் கொடுத்தால் ரூபாய்.1,000 சேர்த்து பில் பண்ணுவோம். அதுவும் தற்போது ஹோட்டல்களின் அறையில் கட்டணங்களை மேக் மை ட்ரிப் தான் முடிவு செய்து நிர்ணயிக்கிறது. ஒரு நாள் 7500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., போடுகிறார்கள். இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும், என்றார். இருந்த நியாயமான உண்மையும், பிரச்சினையின் வலியும் தான் காரணம்!




சூழ்நிலையை சரியாக கையாளத் தெரிந்தால், அவரையும் மீறி நீங்கள் அரசியல் ஆதாயம் அடைந்திருக்கலாம். அதற்கு தலைமைப் பண்பும், பெருந்தன்மையான குணமும் தான் வேண்டும்.

பொது மக்கள் பார்வையில் கிட்டதட்ட 99 சதவீதம் மானவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். அவர் பேசியதில் உள்ள நியாயத்தையும், அதை நகைச்சுவையாகச் சொல்லிய விதத்தையும் ஒரு வித ரசனையுடன் ஏற்கிறார்கள். 

ஆனால், அவரை மன்னிப்புக் கேட்க வைத்தது அநாகரீகம்! 

அதை பகிரங்கப்படுத்தியது அதைவிட அக்கிரமம். என்பதே மக்கள் மத்தியில் நடக்கும் விவாதம் 

அந்த அக்கிரமத்தை நியாயப்படுத்தி சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரஸ் மீட் தருவது ஆணவத்தின் உச்சமாக வே பார்க்கப்படுகிறது!




உங்கள் கட்சி நிகழ்வுகளுக்கு எத்தனை முறை சாப்பாடோ, டிபன்,காபியோ, ஸ்வீட் காரமோ அன்னபூர்ணாவில் ’ஸ்பான்சர்’ வாங்கி இருப்பீங்க என பல கட்சிகள் தேர்தல் நேரத்தில் நன்கொடையும் வாங்கி இருப்பீங்க என கட்சி பிரமுகர்கள் பேசுகின்றனர்.. அந்த நன்றி உண்ர்வாவது வேண்டாமா?

அதிகாரத்தில் இன்று இருக்கலாம், நாளை இல்லாமலும் போகலாம். ஆனால், ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ள ஒரு பாரம்பரியம் கொண்ட தொழில் அதிபர், கொங்கு மண்டல பல லட்சம் வாக்குகள் கொண்ட மக்களின் அன்பையும், மதிப்பையும் ஒரு சேரப் பெற்றவர் உரிமையோடு பேசியதை குதர்க்கமாகப் புரிந்து கொண்டு, தண்டிக்க துணியும் அளவுக்கு அதிகார நிலை தான் காரணம்  என்றால், என்ன செய்வது?

உழைத்து முன்னேறிய அன்னபூர்ணா சீனிவாசனுக்கும், 


பிறர் உழைப்பில் வாழும் கொங்கு மண்டல வசூல் நபர்களுக்கும் இருக்கும் தராதரத்தை மக்கள் அறியாமலில்லைகோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட சம்பவம் பரவலாக விவாதிக்கும் நிலையில் இன்னொரு நிகழ்ச்சி மறக்கப் பட்டது.

நிதியமைச்சர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக சூலூர் சென்றார். அங்கே தான் இறுக்கமான முகத்துடன் சீனிவாசன் குறித்து அதிருப்தி தெரிவித்தார். அவர் 

வெளியே வந்த போது அருன் என்ற நபர் செல் போன்களுக்கான செமி கண்டக்டர் ஏன் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகின்றது என வினா எழுப்பியுள்ளார். அதற்கு 

நிதியமைச்சர் அரசு குறிப்புகளில் இதுபற்றி உள்ளது. இதைப் படித்து விட்டு டெல்லி வந்து விவாதிக்கும்படி கோபத்துடன் சொல்லிச் சென்றுள்ளார் பின்பு செய்தியாளர்களிடம் வீடியோவை திருத்தவும் சொன்னார். 

நிதியமைச்சர் அங்கிருந்து சென்றதும் காவலர்கள் அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்ற நிகழ்வு தேவையற்றது.

இது போன்ற கேள்விகள் எழுப்ப ஜனநாயக நாட்டின் குடிமக்களுக்கு தார்மீக உரிமை உள்ளது. அதற்கு பதில் சொல்வது அரசின் அமைச்சரின் கடமை. கேள்வி கேட்பவர்களை இப்படி நடத்துவது சர்வாதிகாரப் போக்காகும். 

இதுதான் உலகமயம் என்று மிக எளிதாக பதில் சொல்லி இருக்கலாம். ஆனால் அமைச்சர் யாரும் கேள்வி கேட்பதை விரும்புவதில்லை போலவே தெரிகின்றது. 

அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்புக் கேட்க வைக்கப் பட்டார். செமி கண்டக்டர் இளைஞர் காவல் நிலையத்தில் விசாரிக்கப் பட்டார். இருவருமே எதிரிகள் போலத்தான் நடத்தப் பட்டுள்ளனர். 


கோயம்புத்தூரில் மதக் கலவரங்கள் நடப்பதால் மக்கள் எல்லோருமே அந்த வகையானவர்கள் என்று இவர்கள் சார்ந்த கட்சியினர் நினைத்து விட்டனர் போலும்.  கோயமுத்தூரோடு நெருங்க நெருங்க அதன் பலதரப்பட்ட முகங்கள் தெரியும் போது தான்  அரசியல் ரீதியாகப் பதறுகின்றனர். இதன் அடிப்படையில் கட்சி சார்பாக பேசிய ஒரு தலைவர் 

 அவரது அன்னப்பூர்ணா உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறேன். சாதாரணமான இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் இட்லிக்கு ஒரு விலை வைத்திருக்கிறார். அதே இட்லியை குளிர் சாதன அறையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு விலை வைத்திருக்கிறார். இது ஏன்? அங்கே மின்சார செலவு கூடுதலாக வருகிறது. ஆகவே அங்கே இட்லி விலை அதிகமாகிறது. அதைப்போலத்தான் பண்ணும் பிரட்டும் ஏழை எளிய மக்கள் சப்பிடக்கூடியது.ஆகவே அதற்கு ஜிஎஸ்டி இல்லை. அதே பண்ணில் ஒருவர் ஜாம் அல்லது க்ரீம் வைத்துச் சாப்பிட்டால் அவர் ஏழை கணக்கில் வரமாட்டார். அவர் வசதியாக உள்ளதால் தான் கூடுதலாக க்ரீம், பட்டர் வைத்துச் சாப்பிடுகிறார். அதனால் வரி கூடுதல். இதைக் கூட அந்த முதலாளிக்குப் புரியாதா? என முட்டுக் கொடுக்க பலர் வந்து விட்டனர், அதற்குப் பெயர் தான் இன்புட் வரி. எந்த ஏழை பண்ணில் பட்டர் வைத்துச் சாப்பிடுகிறார் சொல்லுங்கள்?இதே அன்னப்பூர்ணா கோயம்புத்தூர் ஆர்.எஸ் புறத்தில் பார் நடத்துகிறது. அங்கே சாதாரண அன்னபூர்ணாவில் விற்கப்படும் உணவின் விலையா விற்கும் நிலை இருக்கிறது? அங்கே ஏன் விலையைக் கூடுதலாக விற்கிறார்கள்? இரண்டும் ஒரே நிறுவனம் தான். விலையை ஒரே மாதிரி போடுங்கள் என்று அவர் கேட்பது போல கேட்க முடியுமா? ஒரு பொருளை வைத்துத்தான் வரி போட முடியும். எல்லா பொருளுக்கும் ஒரே வரியைப் போட முடியாது.


அன்னபூர்ணா உரிமையாளர் அடிப்படைப் புரிதல் இல்லாமல் பேசி இருக்கிறார் என்பதை இப்போது பாஜகவினர் பலரும் கருத்துக்களாகத் தெரிவிக்கிறார்கள். ஆக மக்கள் உணரும் பிரச்சினைகள் தான் அவர் பேசியது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம