முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் ஜாதி வாரி பிரதிநிதித்துவம்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை முழுவதும் நிரம்பியது.


234 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாட்டின்

அமைச்சரவையைப் பொறுத்த வரை முதல்வர் அடங்கிய அமைச்சரவை மொத்தம் 35 நபர்கள் தான் இடம்பெறலாம். தற்போது இருக்கும் 34 நபர்கள் கொண்ட அமைச்சரவையில் 3 நபர்கள் நீக்கப்பட்டு 4 நபர்கள் சேர்க்கப்படுவதன்மூலம் தமிழ்நாடு அமைச்சரவை மொத்தம் 35 நபர்களுடன் முழுவதும் நிரம்பியது இனி புதிதாக ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டுமானால் அமைச்சராக உள்ள ஒருவரை நீக்கினால் தான் முடியும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் புதிய அமைச்சரவையில் ஜாதி வாரியாக உள்ள பிரதிநிதிகள்  பற்றிய  தகவல் வெளியாகின. முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும்  துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலினும் இசைவேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.


அடுத்தப்படியாக  அமைச்சரவையில் முக்குலத்தோரில்:: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர்  அமைச்சரவையில் ஐந்து நபர்கள் முக்குலத்தோர் சமூகத்தினராகவும்

வன்னியர்களில்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோருடன் இன்று புதிதாக அமைச்சராகும்  ஆர் ராஜேந்திரனும் இணைகிறார் இதனால் தமிழ்நாடு

அமைச்சரவையில் வன்னியர்களின் எண்ணிக்கை  நான்காக அதிகரித்துள்ளது.

கவுண்டர்கள்: வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தகவல் - செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோருடன் புதிதாக அமைச்சராகும் செந்தில் பாலாஜியும் சேர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தினரின் எண்ணிக்கை 


நான்காக உயர்ந்துள்ளது. நாடார்கள்: சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட இருவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அட்டவணை/ பட்டியலினத்தவர்கள்: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன்,  மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்,


உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி செழியனும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இதன்மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அட்டவணை/ பட்டியலினத்தவர்களின் எண்ணிக்கையில் நான்காகிறது. யாதவர்கள்: கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பால்வளம் மற்றும் கைத்தறி கிராம தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகிய இரண்டு நபர்கள் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.


அதன்படி யாதவர் 2 பேர் தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ளனர்,

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிறு குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள். மொழி வாரி சிறுபான்மையிரில் வரும் தெலுங்கு ரெட்டியார் - தெலுங்கு நாயக்கர்கள் : தமிழ்நாடு அமைச்சரவையில்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் இருவர் தெலுங்கு ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தெலுங்கு நாயக்கர்கள்; பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறித்துறை அமைச்சர் எம்.ஆர் காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகிய மூவரும் தெலுங்கு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

வனத்துறை அமைச்சர் டாக்டர் கே.பொன்முடி உடையார் சமுதாயத்தையும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ் நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுடன் இஸ்லாமிய மத சிறுபான்மையினருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.  அது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இஸ்லாமிய மதம் சார்ந்தவர்.


தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் ஜாதிவாரி பிரதிநிதித்துவம் பேசும்



பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இந்த முறை இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...