சென்னை மெரினா கடற்கரையில் ரோந்துப் பணியில் இருந்த காவல் பணியாளரிடம் தரம் குறைந்த வார்த்தைகள் பேசிய இருவரிடம் விசாரணை.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உள்சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரிலிருந்த இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படும் நிலையில். தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கிச் செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் பணியாளர் கடற்கரைக்கு இரவில் செல்ல அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறும் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிருவரும் காவல்துறை பணியில் இருந்த நபர்களை தரக்குறைவாக ஆபாசமாகப் பேசிய நிலையில் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தரக்குறைவாகப் பேசியதை காவல் பணியில் இருந்த நபர்கள் காணொளிக் கருவிகள் மூலம் பதிவு செய்தனர் . அந்தக் காணொளிக் காட்சி காலை முதல் சமூக வலைதளங்களில்அதிமாகப் பகிரப்பட்டு பரவியதையடுத்து,
தரக்குறைவாகப் பேசியவர்கள் மீது காவலர் சிலம்பரசன், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் அடிப்படையில் ஆபாசமாகப் பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களின் கார் பதிவெண்ணை வைத்து தீவிரமாக தன் தேடி வந்தனர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், தரக்குறைவாகப் பேசிய நபர் வேளச்சேரி பகுதியில் வசிக்கும் சந்திரமோகன் என்பதும், அவரது தோழியாக உடனிருந்தவர் மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், இருவரையும் துரைப்பாக்கத்தில் தேடிக் கண்டு பிடித்தனர். அவர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையின்போது அவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரினார். அவரது முகம் மறைத்து அதனை காவல் துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது..வசதியான சந்திரமோகன், அயல் நாட்டு கலாச்சார பப் ஒன்றில் நிர்வாகி. தொடர்ந்து விசாரணை நடைபெற்று கைதாகி சிறை சென்றார். இதுஒருபுறம் இருக்க, “ நேற்று இரவு மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் நானும், எனது பெண் தோழியும் காரில் வெளியே சாப்பிட நின்று கொண்டிருந்தோம். அப்போது, போலீஸ் அங்கிருந்த எல்லோரையும் எழுப்பினர். மொத்தமாக எழுப்பும் போது எனக்குக் கோபம் வந்தது. என்னிடம் போலீஸ் வந்து வெளியேறும்படி சொல்லும்போது நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தேன். அதிக மதுபோதையில் இருந்ததால் இவ்வாறு நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்” என சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு காணொளியில் ஒன்றையும் காவல்துறை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்