முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொலைத் தொடர்பு சேவைகளை வளரும் நாடுகளுக்கு வழங்கும் நாடாக இந்தியா மாறத் தயாராக உள்ளதென அமைச்சர் பெருமிதம்

வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்கச் செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: திரு பியூஷ் கோயல்


தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா மாறத் தயாராக உள்ளது என்றும், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் தரமான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குபவர்களாக இந்திய நிறுவனங்கள் மாறும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.


புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை மற்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ்  தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர், எதிர்காலத்தில் இந்தியா சர்வதேச தொலைத் தொடர்பு விநியோகச் சங்கிலிகளை வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், நெட்வொர்க் இணைப்பில் இன்னும் பின்தங்கிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புகளை கொண்டு செல்ல உதவும் தீர்வுகளைக் கண்டறியுமாறு நிறுவனங்களை வலியுறுத்தினார். உலகளாவிய தெற்கில் தொழில்நுட்பம் கிடைக்கச் செய்வதிலும், உலகம் முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மலிவானதாக மாற்றுவதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கை நிறைவேற்றுவதில் உலகை வழிநடத்துவதிலும் இந்தியாவின் பங்கு உள்ளது. நாடு முழுவதும் தடையற்ற அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கியது, 'உலகின் நம்பகமான பங்குதாரர்' என்ற புனைப்பெயரை இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.


2015-ம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட முன்னோடி 'டிஜிட்டல் இந்தியா' பிரச்சாரத்தின் சாதனையாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இந்தியாவின் நிலையான நெட்வொர்க் இணைப்பை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். நல்லாட்சிக்கும், வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அவர் பாராட்டினார். இந்தியா இன்று ஒரே தேசமாக சிந்திக்கிறது என்று கூறிய திரு கோயல், இளைஞர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த நாட்டின் சிந்தனை செயல்முறையையும் நாட்டின் வளர்ச்சியை நோக்கி ஒருங்கிணைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும் தடையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர 2015-ம் ஆண்டில் டிஜிட்டல், உந்துதலுக்கு உதவியது என்று திரு கோயல் தொடர்ந்து கூறினார். நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களுக்கு உயர் தரம், மலிவு மற்றும் செலவு குறைந்த தீர்வுகள் உறுதி செய்யப்படுகின்றன, மேலும் நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய திறன் மையங்களுக்காக இந்தியாவைப் பார்க்க அனுமதிக்கும் தடையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன என்றார்அவர்.

தொலைத்தொடர்பு சேவைகளில் புதிய கண்டுபிடிப்புகள், உபகரணங்கள், சேவைகள் மற்றும் தரவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியா வளர்ந்த நாடுகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உலக தர நிர்ணய தினத்தை நேற்று இந்தியா கொண்டாடியதைக் குறிப்பிட்ட திரு கோயல், தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நாடாக இந்தியாவை மாற்ற அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியா செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்தியாவின் வளர்ச்சி கதையை வரையறுக்கும் தரத்தின் முத்திரை இருக்கும் என்று அவர் கூறினார்.

"எதிர்காலம் இப்போது" என்ற நிகழ்ச்சியின் கருப்பொருளை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தியா அதன் எதிர்காலத்திற்கு மட்டுமல்லாமல், உலகின் எதிர்காலத்திற்கும் பங்களித்து வருகிறது என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வழங்குவது உலகை ஒரே குடும்பமாகக் கொண்டுவருவதில் ஒருங்கிணைந்த பங்கை வகிக்கிறது என்றும் கூறினார். இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல் மயமாக்கலின் முழு சுற்றுச்சூழல் அமைப்பும் இந்தியாவில் அதன் முத்திரையைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்தியா அதன் கண்டுபிடிப்பு, திறமை மற்றும் அது வழங்கும் பெரிய சந்தைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதுமைப் படைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியை வரையறுக்கின்றன என்றும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், உலகம் முழுவதற்கும் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக இருப்பதை உலகம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர், அதிநவீன தொழில்நுட்பத்தில் அவரது முன்னோடி பணி உலகளவில் பாராட்டப்பட்டுள்ளது என்றும், இளைஞர்களுடனான அவரது ஈடுபாடு எப்போதும் நாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப சாதனைகளில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதில் நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலை திரு கோயல் பாராட்டினார். உலகின் பிற பகுதிகளுக்கு இணையாக 5-ஜி தொழில்நுட்பத்தை   இந்தியா அறிமுகப்படுத்தியதை சுட்டிக்காட்டிய அவர், மேலும் 6-ஜியை அறிமுகப்படுத்துவதிலும் உருவாக்குவதிலும் நாடு முன்னணியில் இருக்கும் என்று தெரிவித்தார். தேசிய அகண்ட அலைவரிசை இயக்கத்தின் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் 5ஜி தொழில்நுட்பம் பயனடையும் என்று அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு