முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர்


அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது.



சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம்



ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல் கடந்து ஈழத்தீவு சென்றதால் மாமன்னர் இராஜராஜ சோழரின் சகோதரியான குந்தவை நாச்சியாரால் மகளாகவே  தஞ்சாவூர் சோழர்கள் அரண்மனையில் பாசமுடன் வளர்க்கப்பட்டவர் கொடும்பாளூர் வேளிர் மலையமான் எனும் சிற்றரசன் பின்னர் திருக்கோவிலூர் சிற்றரசனான வரலாறு கொண்ட வேளிர் எனும் சிற்றரசன் மகள் அரசி வானதி. 






"காளாமுகர்கள்' என்பவர்கள் சைவ சமயத்தின் ஒரு பிரிவினராவர். அவர்கள் நெற்றியில் கருப்பு வண்ணத்தைப் பூசித் தோற்றத்தில் பயங்கரமானவர்களாகத் தெரிவார்கள். காளாமுகர்கள், தாங்கள் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் பிறந்தவர்களாகக் கூறிக் கொண்டனர்.





தண்ணீர் குடிப்பதற்காக மனிதர்களின் மண்டை ஓட்டினையே காளாமுகர்கள் பாத்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர். சுடுகாட்டுச் சாம்பலையே தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். கையில் எப்போதும் மண்டை ஓட்டையும் தடியையும் வைத்திருந்தனர். சிவபெருமானுக்கு சோமபானம் "கள்" வைத்துப் படைத்தனர்.  நீண்ட ஜடாமுடியைத் தரித்திருந்ததோடு ருத்திராட்ச மாலைகளையும் அணிந்திருப்பர்.


சைவ சமயத்தைச் சார்ந்த இந்தக் காளாமுகர்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகமாக வசித்தனர். கொடும்பாளூரை ஆண்ட சிற்றரசான வேளிர்கள் சாளுக்கிய மற்றும் சேர நாட்டில் கொண்டிருந்த அரசியல் தொடர்பு காரணமாக"காளாமுகர்கள்" கொடும்பாளூருக்கு வந்து தங்கி யிருக்கக்கூடும் என்பது வரலாற்று அறிஞர்களின் பார்வை.

வேளிர் சிற்றரசான பூதி விக்ரமகேசரி, காளாமுக சைவப் பிரிவின் தலைவனான "மல்லிகார்ஜுனனுக்கு' ஒரு பெரிய மடம் கொடும்பாளூர் முகப்புப் பகுதியில் கட்டிக் கொடுத்து நாளடைவில் உணவு கிடைக்கும் சத்திரமாகவே மாறியது அம்மடத்தில் ஐம்பது காளாமுகர்களுக்கு உணவளிக்க பல கிராமங்களை மானியமாக அளித்ததாக மூவர் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.


அந்த சத்திரம் இன்றும் கொடும்பாளூரில் சிதிலமாகி உள்ளது ஆனால் அக்காலத்தில் உணவளிக்க பல கிராமங்களை மானியமாக அளித்ததாக மூவர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுத் தகவல். கொடும்பாளூரில் மூவர் கோவிலில் தோரணங்கள், விமானக்கூடுகள் ஆகியனவும் சோழர்கள் காலச் சிற்பிகளால் நேர்த்தியாகவே வடிக்கப்பட்டுள்ளது.

கோவில் ஒரு தாமரை மலர் போன்ற பீடத்தின் மேல் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்பகுதியைச் சுற்றியுள்ள யாளிகளின் சிற்பங்களும் நான்கு மூலைகளிலும் உள்ள மகரங்களின் திறந்த வாயிலிருந்து வெளிப்படும் சிறிய மனித உருவங்களும்  கவர்கின்றன. கருவறைச் சுவற்றின் மூன்று பக்கங்களிலும் மாடங்கள் அமைந்துள்ளது.



கருவறையின் மாடங்களிலும் விமானத்திலும் காணப்படும் சிற்பங்கள் சோழர் சிற்பக்கலைத் திறனுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. இச்சிற்பங்களின் அங்க அமைப்பு, அளவு, பரிமாணங்கள் மனித உடற்கூற்றோடு அமைந்திருப்பது சிறப்பானது. கோவிலுக்குச் சற்று கிழக்கே "ஐந்தலை' எனும் ஐந்து கோயில்கள் இருந்து காலப்போக்கில் அழிந்து தற்போது அடித்தளம் மட்டுமே உள்ளது.




 மற்ற கோவில்களை விட காலத்தால் முற்பட்டதென வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

கொடும்பாளூரில் கோவில் பகுதியைச் சுற்றி நடைபெற்ற தொல்லியல் துறையின் அகழாய்வில் கிடைத்த சிற்பங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காளாமுகர்களுக்கு பின்னர் மதுரை பாண்டியர் தஞ்சாவூர் சோழர்கள் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சத்திரம் 




இடங்கழி நாயனார் நடத்தியது சிறப்பு அங்கு உள்ள நந்தி சோழ தேச மன்னர் அமைப்பு நந்தி கொம்பு இல்லாமல் இருக்கும், பாண்டிய மன்னர் கட்டிய ஆலயத்தில் நந்தி கொம்பு இருக்கும். இடங்கழி நாயனார் திருக்கோயிலுள்ள இடத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் முசுகுந்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.சங்க காலத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்கிய கொடும்பாளூா் சோழர் மாற்றுத் தலைநகர் உறையூருக்கும், பாண்டியர் தலைநகர் மதுரைக்குமிடையே இருந்த பெருவழிப்பாதையில் எழில்மிகு நகரமாகும். கோவலனும், கண்ணகியும் காவிப்பூம்பட்டிணத்திலிருந்து கொடும்பாளூா் சத்திரத்தில் உணவருந்தி சாவடியில் தங்கி அவ் வழியாக மதுரை சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கொடும்பாளூா், சிலப்பதிகாரத்தில் “கொடும்பை நெடுங்குளக் கோட்டகம்” எனவும். “கோனாட்டுக் கொடும்பாளூா்” என “கொங்கு மண்டல சதகம்” எனவும் குறிப்பிடுகிறது. 



சிவத்திருத்தொண்டு புரிந்த 63 நாயன்மாா்களில் ஒருவர் “இடங்கழி நாயனாா்” ஆட்சி செய்த அவதார பூமி கொடும்பாளூா் எனபது இங்கு கூடுதல் சிறப்பு. இடங்கழி நாயனாா்  குறுநில மன்னராக அதாவது வேளிர் சைவம் தழைக்கத் தொண்டு செய்தவா். பெரிய வரலாற்றுப் பின்னணி கொண்ட புனித பூமி அதற்கான தடயங்களை இழந்து சிற்றூராக மாறியுள்ளது அந்தப் பகுதியில் வாழும் மக்கள் இந்த பெருமை மிகு வரலாறு அறியாத நிலையில் வாழுவதைக் காணலாம். கொடும்பாளூரின் வரலாற்றுப் பின்புலத்தை வரலாற்று ஏடுகளில் மட்டுமே காண்பதும் நம் மனதிற்கு வருத்தத்தை அளித்தது

கொடும்பாளூரில் சிவனந்தன் சைவ நெறி தவறாத பக்தா் ஒருவா் வாழ்ந்து வந்தாா். சிவனடியாா்களின் பசிப்பிணி தீர திருவமுது செய்வதே இவரின் தலையாய பணி. ஒரு நாள் கூட இப்பணியில் அவர் தவறியதில்லை .ஒரு சமயம், திருவமுது படைக்கப் பொருள் கிடைக்காமல் அலைந்த சிவனந்தன். எங்கு தேடியும் கிடைக் கவில்லை. அன்றிரவு இந்தப்பகுதியின் அரசரான இடங்கழி நாயனாரின் அரண்மனைக்குள் புகுந்த சிவனந்தன், அங்கிருந்த தானியங்களைத் திருடிய போது அவரைப் பிடித்த அரண்மனைக் காவலா்கள்,  மறு நாள் காலை மன்னனின் முன் நிறுத்தினா்.“எதற்காக அரண்மனைக்குள் புகுந்து தானியங்களைக் கொள்ளையடித்தாய்?” என சிவனந்தனிடம் கேட்டாா் இடங்கழி நாயனாா். “நான் சிவனடியாா்களுக்கு அன்றாடம் உணவளிப்பது வழக்கம். ஆனால் அதற்குத் தேவையான பொருள்கள்  கிடைக்கவில்லை. எனவே அரண்மனைக்கு வந்து தானியங்களைத் திருடினேன்,” என்றாா். சிவனந்தனின் கூற்றைக் கேட்ட இடங்கழி நாயனா், அவரை விடுதலை செய்து, அவரிடம் மன்னிப்பு கோரியதோடு சிவனடியாா்களுக்குத் தேவையான நெல்லையும் பொருளையும் இனி அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லலாம் என ஆணையிட்டாா். சிவனந்தரது சிவப்பணி சத்திரம் தொடா்ந்து நடந்தது.  சில காலம் கழித்து  மழையின்றி பஞ்சம் நிலவி விளைச்சலும் பாதிக்கப்பட்டது. அரண்மணையிலிருந்த பொருட்களும் தீா்ந்தன. சிவனடியாா்களுக்குத் திருவமுது படைக்க முடியவில்லை. இடங்கழி நாயனாா் தம் நாட்டிற்கு ஏற்பட்ட சோதனையால் சிவனடியாா்களுக்கு அமுது படைக்க இயலவில்லையே என்று ஈசனிடம் வேண்டினாா்.                                        -விளம்பரம்-

.                   -விளம்பரம்-          அன்றிரவே, இடங்கழி நாயனாா் கனவில் தோன்றிய ஈசன், “பஞ்சம் தீரும் வரை ஒரு பொற்காசினை இங்கே வைப்போம். அதனை எடுத்து உம் திருத்தொண்டினைத் தொடா்க,” எனக் கூறி மறைந்தாா். நாயனாா் விழித்தெழுந்து ஈசன் காட்டிய இடத்திற்குச் சென்று பாா்த்தபோது அங்கே ஒரு பொற் காசு இருந்தது. பஞ்சம் தீரும் வரை அக்காசினைக் கொண்டு திருத்தொண்டாற்றிய இடமே கொடும்பாளூர் சத்திரம், இடங்கழி நாயனாா் பின்னா் ஈசனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தாா். அதனால் அவரது குரு பூஜை ஐப்பசி மாதம் காா்த்திகை நட்சத்திரத்தில் கொடும்பாளூரிலுள்ள ஆலயத்தில் அவரது சந்நிதியில் சிறப்பாக நடை பெறுகின்றது




அன்று தினம் நாமும் வழிபட்டோம். சுந்தரமூா்த்தி நாயனாா் தாம் அருளிச்செய்த திருத்தொண்டா் தொகையில் “மடல்சூழ்ந்த தாா்நம்பி இடங்கழிக்கு அடியேன்” என இவரது புகழினைப் பாடியுள்ளாா். சிவனடியாா்களுக்குத் திருவமுது படைக்க ஒரு காலத்தில் “அன்னம்பாலிக்கும் தில்லைத் திருச்சிற்றம்பலமாகத் திகழ்ந்த திருவூரான கொடும்பாளூா்” சென்று காலத்தை வென்று நிற்கும் இக்கலைக்கோயில்களைக் கண்டு மகிழ்வது வாழ்வியல் நிறைவு



சிவனடியார்களுக்குத் திருவமுது படைத்த இடங்கழி நாயனார் அவதாரத்தால் "அன்னம் பாலிக்கும் தில்லை திருச்சிற்றம்பலமாகத் திகழ்ந்த திருவூரான கொடும்பாளூர்' 1500 ஆண்டு காலம் சென்று காலத்தை வென்று நிற்கும் இக்கலைக் கோயில்களைக் கண்டு வருவது சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு