அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி
பெற்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
மற்ற நாடுகளின் பொதுத் தேர்தலைப் போலல்லாமல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தல், உலக அரங்கின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் பெற்றது.
2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், மீண்டும் களமிறங்கி வெற்றியை தன்வசமாக்கினார்.
அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஸ்தாபகத் தந்தைகள் அமெரிக்காவின் அரசியலமைப்பை எழுதியபோது, நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்க எலெக்டோரல் காலேஜ் அமைப்பை உருவாக்கினர். அதிபர் தேர்த்லில் வெற்றி பெற 538 எலெக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270 வாக்குகளைப் பெற வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையிலுள்ள பிரதிநிதித்துவத்திற்கு சமமான பல வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 7 ஸ்விங் மாகாணங்கள் உள்ளன. தெற்கிலும் மையப் பகுதியிலும் (டெக்சாஸ், அலபாமா, ஆர்கன்சாஸ்) குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகும் மற்றும் கடற்கரைகள் கொண்ட நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக உள்ள ஏழு மாகாணங்கள் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கின்றன. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 பிரதிரிகளைத் தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. காலை 8.30 நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 188 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 99 வேட்பாளர்களும் முன்னிலையில் இருந்தனர்.
இதுவரை வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில், இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, ஓக்லஹோமா, மிஸௌரி, டென்னிஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், தெற்கு டகோடா, வடக்கு டகோடா உள்ளிட்ட 17 மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
வெர்மோன்ட், மேரிலாண்ட், மசாசுசெட்ஸ், கொலம்பியா, இல்லினொய்ஸ், நியூ ஜெர்ஸி, நியூ யார்க் உள்ளிட்ட 9 மாகாணங்களில் கமலா ஹரீஷ் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 52.4 சதவிகிதமும், கமலா ஹாரிஸ் 46.4 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.
கலிஃபோர்னியா, வாஷிங்டன், அரிசோனா, ஓரிகான் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில்வாக்கு எண்ணிக்கை முடியவடையும் முன்.53.9 சதவீதம் வாக்குகளை பெற்றதால் டெக்சாசின் 40 எலக்டோரல் வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றினார் அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு முற்போக்காளர்கள் வசிக்கும் பகுதியாகிறது. ஆனால், எலான் மஸ்க் உள்ளிட்ட பலர் சமீப காலமாக பழமைவாதியான டிரம்பை ஆதரிக்கிறார்கள்.தொழிலதிபர்களுக்கு டிரம்ப் அள்ளித் தரும் வரி விலக்குகளும் காரணமாகும். அமெரிக்காவின் பிரபல டெக் தொழிலதிபர் மார்க் கியூபன் வெளிப்படையாகவே கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு இவர் டிரம்பை ஆதரித்திருந்தார். ஆனால், இந்த முறை டிரம்பிற்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார். டிரம்ப் மீண்டும் அதிபரானால் சிறு குறு தொழில்களுக்கு நல்லதல்ல என்பது கியூபன் கருத்தாகிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்யும் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவர் வினோத் கோஸ்லா. அவரும் இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். அதேபோல மெட்டாவின் முன்னாள் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க்கும் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். ஜோ பைடன் அதிபர் ரேஸில் இருந்த வரை ஷெரில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேநேரம் பைடன் விலகி கமலா ஹாரிஸ் உள்ளே வந்த உடனேயே அவரை ஆதரிப்பதாக ஷெரில் அறிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு சுமார் 50 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 420 கோடி ரூபாய் நன்கொடை அளித்து, அவரை ஆதரித்துள்ளார். அதேபோல பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டாவும் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். தற்போதைய சூழலில் கமலா ஹாரிஸே சரியான வேட்பாளர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அவர்கள் தவிர நெட்பிளிக்ஸ் நிர்வாகத் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ், லிங்க்ட் இன் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளனர். சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற போதிலும் அவர் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு நன்கொடை கொடுத்துள்ளார்.
மறுபுறம் டிரம்பை பொறுத்தவரை எலான் மஸ்க் வெளிப்படையாக அவரை ஆதரிக்கிறார். ட்விட்டர் எக்ஸ் தளத்திலும் கூட எலான் மஸ்க் பிரச்சாரம் செய்கிறார். டிரம்ப் ஆட்சியைப் பிடித்தால் அமைச்சர் பதவி ஏற்கக் கூடத் தயாராக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு முழு வீச்சில் இறங்கி டிரம்பிற்காக எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதேபோல பேபால் இணை நிறுவனர் பீட்டர் தியேல், டெக் முதலீட்டாளர்கள் மார்க் ஆண்ட்ரீசன் மற்றும் பென் ஹோரோவிட்ஸ், செக்வோயா கேபிடல் என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் டக்ளஸ் லியோன் ஆகியோர் வெளிப்படையாகவே டிரம்பை ஆதரித்துள்ளனர். பைடன் ஆட்சியை விமர்சிக்கும் இவர்கள், அதிபராக டிரம்ப் சரியான ஆள் என்று குறிப்பிட்டுள்ளனர். பார்ச்சூன் 500 நிறுவனங்களில் எலான் மஸ்க் தவிர வேறு எந்த நிறுவனத்தின் CEO வும் வெளிப்படையாக தங்கள் முடிவை எடுக்கவில்லை. இருப்பினும், கூகுள் CEO சுந்தர் பிச்சை, ஆப்பிள் தலைவர் டிம் குக், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் தன்னை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசியதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனாலும், இதை யாரும் உறுதி செய்யவில்லை. ஆக மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, டிம் குக், ஆண்டி ஜாஸ்ஸி, ஜெஃப் பெசோஸ், சத்யா நாதெல்லா ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
கருத்துகள்