முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிண்டி அரசு பல் நோக்கு மருத்துவமனை டாக்டர் பாலாஜி ஜெகநாதன் மீது கொலை வெறித் தாக்குதல்

சென்னை கிண்டி அரசு பலநோக்கு  மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில்


பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சையில்  இருப்பவருக்கு சரியாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை 



என அந்தப் பெண்ணின் மகன் விக்னேஷ்வரன் என்பவர் மருத்துவமனையில் நாளடைவில் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.  இந்த நிலையில் இன்று 13.நவம்பர்.2024 காலை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகநாதன் பணியிலிருந்தபோது டாக்டரிடம் விக்னேஷ்வரன் என்பவர், `என்னுடைய அம்மாவுக்கு ஏன் இன்னும் குணமாகவில்லை. ஹாஸ்பிட்டலில் சரியாகவே சிகிச்சை அளிப்பதில்லை’ எனந் தகராறில் ஈடுபட்டுள்ளார்.




அதனால் அங்கிருந்தவர்கள் விக்னேஷ்வரனை சமரசப்படுத்த முயன்றனர். அதைக் கடந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஷ், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜி ஜெகநாதனைக் குத்தியதில் நிலை குலைந்தவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். டாக்டரைக் குத்தி விட்டு தப்பியோட முயன்ற விக்னேஷ்வரனை 



அங்கிருந்தவர்கள்  துரத்திப் பிடித்த பின்னர் உதைத்தனர். படுகாயமடைந்த டாக்டரை மீட்டு அவருக்கு முதலுதவிச் அளிக்கப்பட்டு அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.  இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு இணை இணை ஆணையர் சிபிச்சக்கரவர்த்தி தலைமையில் காவலர்கள் வந்து விக்னேஷ்வரனை காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்றனர்.



தொடர்ந்து என்ன நடந்தது என அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த டாக்டரிடம் நலம் விசாரித்தார். அதோடு டாக்டரை கத்தியால் குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்தச் சூழலில் அரசு மருத்துவர்கள், பணியின் போது தங்களுக்கு பாதுகாப்பில்லை என வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ``கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அரசு மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.டாக்டர் சிவபாலன் இளங்கோவன் கருத்து படி டாக்டர். பாலாஜி மிகவும் நேர்மையான மருத்துவர். ஓமாந்தூரார் பல்நோக்கு அரசினர் மருத்துவமனையில் அவர் பணி புரிந்தபோது, அங்கு அவர் மட்டுமே ஒரே ஒரு Medical Oncologist. சரியாக காலை 8 மணிக்கு வந்துவிடுவார், மாலை செல்வதற்குள் குறைந்தது நூறு நோயாளிகள் வரை பார்த்திருப்பார். ஒரே நாளில் எண்பதில் இருந்து நூறு நோயாளிகள் அதுவும் Oncology ல் பார்ப்பது அத்தனை எளிதானதல்ல. ஒரே ஒரு மருத்துவர் என்பதால் விடுப்பும் எடுக்க மாட்டார், அத்தனை பொறுப்பான மருத்துவர். என்கிறார்.



மருத்துவத் துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் மக்களும் இதை அறியாமல் மருத்துவர்கள் மீதே கோபப்படுகிறார்கள். 

தமிழ்நாடு மருத்துவத்துறையின் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி எச்சரிக்கையாக இந்தச் சம்பவத்தை பார்க்க வேண்டும். சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு மருத்துவத்துறையின் போதாமைகளை சரி செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மருத்துவர்களும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு பணியாளர்கள் என்பதை உணரவேண்டும்.மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை ஆணையர் அருண் ஆய்வு செய்த பிறகு செயதியாறர்களிடம் தெரிவித்ததாவது:- டாக்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கவில்லை. முதல்முறையாகத்தான் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் நிலவும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. டாக்டர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்வோம். சென்னையில் உள்ள நான்கு மருத்துவமனைகளிலும் தனித்தனி காவல் நிலையங்கள் உள்ளன.

டாக்டரை கத்தியால் குத்திய நபரின் தாயார் ஆறு மாதங்களாக இங்கு தான் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் செய்த நபர் தினமும் இங்கு வந்து சென்றார். நேற்று கூட டாக்டரிடம் பேசியுள்ளார். நடந்தது கொலை முயற்சி. இவ்வாறு அருண் கூறினார். இதில் யாரும் பேசாத சில உண்மைகள் உண்டு ஆனால் சில பத்திரிகைகள் பேசத் தயங்கும் நிலையில் சி மூத்த பத்திரிகையாளர்கள் சமூக சூழலியல் குறித்து பேசும் நிலை உள்ளது. நோயாளியை மன உளைச்சலாக்கி அந்த இளைஞனின் கையில் கத்தி பிடிக்க இந்த டாக்டரும் ஒரு வகையில் காரணம் என்று தோன்றுகிறது . பணம் பேரம் நடந்த நிகழ்வுகள் ஒரு புறம் நோயாளியிடம் அன்பாக பேச வேண்டும் . நோட்டை தூக்கி மூஞ்சியில் அடித்தால் என்ன செய்வது. மருத்துவர் பணி அரசு பணி மக்கள் பணி மருத்துவம் செய்த மருத்துவர் பாலாஜி மேல் அப்படி என்ன கோவம்?.. 7 முறை கத்தியால் குத்தியது ஏன்?. என்ற எழு வினா ஒரு புறம் சிகிச்சையின் போது என்ன டாக்டர் என்ன செய்தார்? - மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் தற்போது பரபரப்பு பேட்டியை காணமுடிகிறது குற்றம் செய்த விக்னேஷின்  தாய் பிரேமா கூறுகையில்,


அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை. மூன்று லட்சம் பேரம் பேசினார் மருத்துவர் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் போடப்பட்ட நான்கு ஊசி காரணமாக எனது உடல்நிலை மிக மோசமாக மாறியது. அரசு மருத்துவமனையில் தொடர்ந்து எங்களை அலைக்கழிக்க வைத்தார்கள். அரசு மருத்துவர்கள் எங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாகப் பேசினார்கள். இதனால் விரக்தி அடைந்து எனது மகன் இவ்வாறு செய்திருப்பார்” என அவரது தாயார் பரபரப்புக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். மருத்துவர் தரப்பில் மட்டுமே நியாயம் பேசும் ஊடகங்கள் அவர்கள் தவறுகள் குறித்தும் பேச வேண்டிய நேரமிது என்பதை சமுக கடமையுடன்  அணுகவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...