முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

BSNL வழங்கும் நேரடி சேட்டிலைட் இணைய சேவை அறிமுகம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய சேவையை அறிமுகம் செய்கிறது.


இந்தியாவின் எந்தவொரு பகுதியிலுமுள்ள இந்திய மக்கள் அனைவருக்கும் நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் டைரக்ட்-டு-டிவைஸ் என்ற புதிய சாட்டிலைட் இணைப்பு சேவையை (direct-to-device satellite connectivity service) அறிமுகம் செய்கிறது. இந்தியாவிற்குள் Starlink சாட்டிலைட் சேவையைக் கொண்டு வர அமெரிக்காவின் எலான் மஸ்க் ட்ரை முயற்சிக்கும் நேரத்தில் BSNL-ன் இந்த அறிவிப்பு எலான் மஸ்க் கவனத்தையே ஈர்த்துள்ளது. இந்திய அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு இயக்குனரான BSNL, கலிபோர்னியா நாட்டைச் சேர்ந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான வியாசாட் (Viasat) உடன் இணைந்து, இந்தியாவில் முதல் நேரடி-சாதன செயற்கைக்கோள் இணைப்பு சேவையை (India's first direct-to-device satellite connectivity service) அறிமுகப்படுத்தியுள்ளது.


பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வியாசாட் (Viasat) ஆகிய இரண்டு நிறுவனங்களும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு தடையில்லா இணைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

bsnl-satellite-to-device-service கேபிள் இணைப்பு இல்லை செட்-டாப் பாக்ஸ் இல்லை BSNL-க்கு இலவச TV சேவை. 

பிஎஸ்என்எல்-ன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவை (BSNL's Satellite-to-Device service) இனி பிஎஸ்என்எல் D2D சேவையுடன் இணையும் இதன் பயனாளர்கள் இந்தியாவின் எந்த இடத்தில் குறிப்பாக மலைப்பிரதேசம் மற்றும் பாலைவனம், கடல் வெளி எங்கிருந்தாலும் சரி, எந்தவொரு நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்திலுருந்தாலும் சரி, இனி எளிமையான நினைத்த நேரத்தில் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்த முடியுமென்று கூறப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவை எப்படி இயங்கும்? இதற்கு தனிப்பட்ட SIM கார்டு தேவையா? இல்லையா?நெட்வொர்க் இல்லாமல் எப்படி இணைப்பு வருகிறது? இந்த புதிய சாட்டிலைட் இணைப்பு சேவைக்கான கட்டணம் எவ்வளவு என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்ததற்கான விடைகளை நாம் தெரிந்துகொள்ளலாம். BSNL ன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவை (BSNL's Satellite-to-Device service) ஒரு செயற்கைக்கோள் இணைப்பு சேவையாகும். இது நாட்டின் தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்புக்குள்ள தடைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

BSNL-ன் 26-26 பிளான்.Jio, Airtel, Vi-உள்ள பயனாளர்கள் இனி நெட்வொர்க் மாறுதல் செய்வார்கள் காரணம் 

கிராமப்புறங்களில் கூட இனி செல்லுலார் நெட்வொர்க் தேவையில்லையா? தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பயனர்கள் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த புதிய செயற்கைக்கோள் சேவையுடன் இணைந்துக்கொள்ளலாம். அதேபோல், இந்த சேவையை பயன்படுத்தி மக்கள் செல்லுலார் அல்லது வைஃபை கவரேஜ் குறைவாக உள்ள பகுதிகளில் அவசர அழைப்புகள் (emergency calls), எஸ்ஓஎஸ் செய்தி (SOS messaging) அனுப்புதல் மற்றும் யுபிஐ (UPI) பணப் பரிமாற்றங்களைக் கூட மேற்கொள்ளலாம் என BSNL அறிவித்துள்ளது.இந்த சேவைக்கு பயனர்கள் வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்குகளை (cellular network) நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால். சுமார் 36,000 கிமீ தொலைவில் உள்ள புவிசார் செயற்கைக்கோள்கள் (geostationary satellites) மூலம் இருவழித் தொடர்பை வழங்க இந்த புதிய BSNL சேவை நிலப்பரப்பு அல்லாத நெட்வொர்க் (non-terrestrial network - NTN) இணைப்பைப் பயன்படுத்துகிறது என்பது குறிபிடத்தக்கது.



பிஎஸ்என்எல்-ன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவைக்கு அக்டோபர் 2024 ல், BSNL-ன் நேரடி செயற்கைக்கோள் இணைப்புக்கான சோதனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்தச் சேவையானது BSNL-ன் மூலம் இன்னும் 1 மாதத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. BSNL Satellite-to-Device சேவை கட்டணம் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதேபோல், இந்த புதிய சாட்டிலைட் இணைப்பு சேவை ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் இணைக்கப்படுமா அல்லது தனி சந்தாக்கள் தேவையா என்பதையும் BSNL இன்னும் குறிப்பிடவில்லை.மேலும், சாதனத்தின் இணக்கத்தன்மை மற்றும் விலை நிர்ணயம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை BSNL இன்னும் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை துவங்க இன்னும் 1 மாத காலம் மட்டுமே இருக்கும் நிலையில், விலை மற்றும் சேவை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்குள் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவை உள்நுழைவதற்குள் BSNL அதன் சாட்டிலைட் சேவையை அறிமுகம் செய்துள்ளது எலான் மஸ்க்கிற்கு வியப்படையச் செய்துள்ளது.

இனி பிஎஸ்என்எல் D2D சேவையுடன் இணையும் பயனாளர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி, எந்தவொரு நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில் இருந்தாலும் சரி, இனி எளிமையான நினைத்த நேரத்தில் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்த முடியுமென்று கூறப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவை எப்படி இயங்கும்? இதற்கென்று பிரத்தியேக SIM கார்டு தேவையா? இல்லையா

இனி பிஎஸ்என்எல் D2D சேவையுடன் இணையும் வேட்க்கையாளர்கள் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, எந்தவொரு நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில் இருந்தாலும் சரி, இனி எளிமையான நினைத்த நேரத்தில் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்த முடியுமென்று கூறப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவை எப்படி இயங்கும்? இதற்கென்று பிரத்தியேக SIM கார்டு தேவையா? இல்லையா?நெட்வொர்க் இல்லாமல் எப்படி இணைப்பு ஏற்படும்? இந்த புதிய சாட்டிலைட் இணைப்பு சேவைக்கான கட்டணம் எவ்வளவு என்று பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கான விடைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க. BSNL இன் புதிய சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவை (BSNL's Satellite-to-Device service) ஒரு செயற்கைக்கோள் இணைப்பு சேவையாகும். இது நாட்டின் தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு தடைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பயனர்கள் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த புதிய செயற்கைக்கோள் சேவையுடன் இணைந்துக்கொள்ளலாம். அதேபோல், இந்த சேவையை பயன்படுத்தி மக்கள் செல்லுலார் அல்லது வைஃபை கவரேஜ் குறைந்துள்ள பகுதிகளில் அவசர அழைப்புகள், எஸ்ஓஎஸ் செய்தி அனுப்புதல் மற்றும் யுபிஐ  மூலம் பணம் அனுப்பி பெறுதல்களையும் மேற்கொள்ளலாம் என BSNL அறிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...