முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயுள் தண்டனைக் கைதி சித்ரவதை DIG உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்

ஆயுள் தண்டனைக் கைதி சித்ரவதை செய்த குற்றச்சாட்டில் சிக்கிய சிறைத்துறை DIG, கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சிறைத்துறை அலுவலர்கள் மூவர் பணியிடை நீக்கம்.




கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதி சிவக்குமார் (வயது 30) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ளார், 




சில மாதங்களுக்கு முன்னர் வேலூர் சரக சிறைத்துறை DIG  ராஜலட்சுமிக்கு  வீட்டு வேலைகளை செய்வதற்காக வேலூர் மத்திய சிறையிலிருந்த சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் பயன்படுத்தியுள்ளனர்.



அதில் அவர், வீட்டிலிருந்த ரூபாய்.4.25 லட்சம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடியதாகக் கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி செல்லில் அடைத்து சிவக்குமாரை சித்ரவதை செய்ததாக புகார் தொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.






அதை விசாரித்த நீதிபதிகள் CBCID விசாரணைக்கு உத்தரவிட்டதன்பேரில் CBCID காவல் துறை வேலூர் சரக சிறைத்துறை DIG ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர்  அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்ட 14 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆயுள்தண்டனைக் கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு உடனடியாக அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.



 வேலூர் சரக DIG ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், சிறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல்-2 சிறைச்சாலைக்கும் மாற்றம் செய்யப்பட்டார்.




மீண்டும் இந்த வழக்கு அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் இந்த வழக்கில் உயர் அலுவலர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நிலையில் DIG ராஜலட்சுமி, ADSP அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை உயர் அலுவலர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் தெவித்தனர். ஆயுள் தண்டனைக் கைதி சிவக்குமாரை 95 நாட்கள் தனிமைச் சிறையிலடைத்து சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் மத்திய சிறையில் CBCID SP-வினோத் சாந்தாராம் விசாரணை நடத்தினார்.  கைதி சிவகுமாரை  தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் கலாவதி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் HCP வழக்குத் தொடரப்பட்டதை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, புகார் தொடர்பாக வேலூர் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தின் நீதிபதி ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.



இந்த நிலையில் வேலூர் சிறைத் துறை காவல்நிலையத்தில் BNS சட்டத்தின் 115(2), 118(2), 146, 49, 127(8) ஆகிய 5 பிரிவுகளின் படி வேலூர் சரக சிறைத்துறை DIG- ராஜலட்சுமி, மத்திய சிறையின் (பொறுப்பு) கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன், DIG-யின் மெய்க்காவலர் ராஜூ, சிறப்புப் படைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, வார்டர்கள் சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ததில், தண்டனைக் கைதி சிவக்குமார் உள்ளிட்ட சிலர் சிறைச்சாலை பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் பணி, காற்று நிரப்பும் பணி, தோட்ட செடிகள் பராமரிப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். 1983-ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்ட விதிகள் 447-ன் படி சிறைவாசிகள் சிறைக்கு வெளியே பணியமர்த்த சிறைத்துறை தலைவரின் முன் அனுமதி இருக்க வேண்டும். ஆனால், கைதியான சிவக்குமார் உள்ளிட்டோரை வெளியில் பணியில் அமர்த்தியதற்கான அனுமதி எதுவும் பெறவில்லை. மேலும், சிறைச்சாலை விதிகளை மீறி DIG வீட்டில் கைதி சிவக்குமார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.சிறைத்துறை DIG வீட்டிலிருந்து ரூபாய்.4.25 லட்சம் பணம் திருடு போனதாக கூறப்பட்டுள்ளது குறித்து. அது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார்.

தண்டனைக் கைதி சிவக்குமார், எச்.எஸ்-4 தொகுதியில் 81 நாட்கள் தனிமைச்சிறையிலும் மூடிய தனிச்சிறையில் 14 நாட்களும் அடைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்பாக வேலூர் CBCID காவல்துறை ஆய்வாளர் இந்திரா வழக்குப்பதிவு செய்துள்ளதன் தொடர்ச்சியாக விசாரணை அலுவலராக சென்னை CBCID-1 SP-யான வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டார். அவர், சேலம் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம் செப்டம்பர் மாதம்.10 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, சிவக்குமார் தெரிவித்த தகவல்களை காணொளி காட்சியில் CBCID அலுவலர்கள் வாக்குமூலமாக பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக வேலூர் மத்திய சிறையில் CBCID SP-யான வினோத் சாந்தாராம் செப்டம்பர் மாதம்.11 ஆம் தேதி காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினார். சிறைக்குள் சிவக்குமாரை அடைத்து வைத்திருந்த தனி அறைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...