முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

20 வருடமாக போலி பால் தயாரித்த அகர்வா(பா)ல் வீதியில் விற்பனைக்கு வந்த வேதிப் பொருள்

20 வருடமாக போலி பால் தயாரித்த அகர்வா(பா)ல் வீதியில் விற்பனைக்கு வந்த வேதிப் பொருள். 


 1 லிட்டர் வேதியியல் பொருட்கள் பயன்படுத்தி 500 லிட்டர் பால் தயாரித்து விற்பனை செய்த- 20 ஆண்டுகளாக ஏமாற்றிய அகர்வால் என்ற தொழிலதிபர் கலப்பட தடுப்புச் சட்டத்தில் கைதானார். பாலில் தண்ணீரைக் கலந்து விற்பது, பால் பவுடர் கலந்த நீரை சுத்தமான பால் என் விற்பது போன்ற மோசடியை மக்கள் அறிந்த நிலையில் கலப்படம் என்றாலும் அது மக்களையோ அல்லது சமூகத்திலோ பெரிதாக பாதிப்பு ஏற்படாது ஆனால் வேதியியல் பொருட்கள் மக்களுக்கு நேரடியாக நோய்களை உருவாக்கும்.


அப்படி உத்தரப்பிரதேசத்தில் ஒரு அகர்வால் என்பவர் அகர்வால் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வெறும் வேதியியல் பொருட்கள் மூலம் செயற்கையாகப் பால் மற்றும் பால் பொருள்களை.      இவர் 20 ஆண்டுகளாக பால் மற்றும் பனீர் விற்று வந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது1 லிட்டர் வேதியியல் பொருட்களில் இருந்து 500 லிட்டர் பால்' - 20 ஆண்டுகளாக ஏமாற்றியது எப்படி?         

பாலில் சேர்க்கப்படும் சில செயற்கை சுவையூட்டிகளை உணவு கலப்படத் தடுப்புச அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அவைகளுடன்  இரண்டு ஆண்டுகள் கடந்து காலாவதியானவை. மேலும், அவரது குடோன்களிலிருந்து காஸ்டிக் பொட்டாஷ் (caustic potash), வே பவுடர் ( whey powder), சர்பிடால் (sorbitol), மில்க் பெர்மீட் பவுடர் (milk permeate powder) மற்றும் ரீஃபைனுடு சோயா கொழுப்புகள் (refined soya fats) ஆகியவற்றை உணவுக் கலப்படத் தடுப்பு அலுவலர்கள்  பறிமுதல் செய்தனர். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அலுவலர்கள், அகர்வாலுக்கு சொந்தமான கடை மற்றும் நான்கு குடோன்களில் இரண்டு நாள்களுக்கு முன் புலந்த்ஷாஹரில் `அகர்வால் டிரேடர்ஸ்' என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாகப் பால் மற்றும் பால் பொருள்களை விற்று வருகிறார்.


இது குறித்து சரியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். சோதனைகள் முடிவில், வேதிப் பொருட்கள் வைத்து உண்மையான பாலைப் போலவே நிறம், சுவை தரம் என செயற்கையாகப் பாலை அகர்வால் உற்பத்தி செய்திருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  செய்தியாளர்களிடம் பேசிய அலுவலர் ஒருவர், ``போலியான பாலை உருவாக்கப் பயன்படுத்திய கெமிக்கல் குறித்த தகவலை அகர்வால் வெளியிடவில்லை. இருப்பினும், 5 மில்லி லிட்டர் கெமிக்கலில் 2 லிட்டர் பாலை அவர் உருவாக்குகிறார்." எனக் கூறினார். மேலும், இந்தப் ஃபார்முலாவை அகர்வால் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தி வரும் அதே வேளையில்,


``கடந்த 6 மாதங்களில் அகர்வால் இந்த பால் பொருள்களை எங்கு சப்ளை செய்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்." என FSSAI அலுவலர் வினித் சக்சேனா தெரிவித்தார்.செயற்கை பால் மற்றும் பனீர் உருவாக்கப் பயன்படுத்திய இரசாயனங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் 5 மில்லி கிராம் மட்டுமே கொண்டு, அவர் 2 லிட்டர் வரை போலி பாலை உருவாக்க முடியும்," எனத் தெரிவித்தனர், மேலும் அவர் உண்மையான பாலில் இருந்து செயற்கை பாலின் வாசனை, தோற்றம் மற்றும் சுவையை மறைக்க சுவையூட்டும் கலவைகளைப் பயன்படுத்துவார் என்றும் கூறினார்.


கலப்படம் செய்யப்பட்ட பால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அலுவலர்கள் டெமோ வழங்குவதை ஒரு வீடியோ காட்டுகிறது. அவற்றில் ஒன்று, பால் பாட்டிலை உருவாக்க பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறிய முன் கலந்த வெள்ளைக் கரைசலைக் காட்டுகிறது. ரசாயனத்தின் ஒரு சிறிய பகுதி பால் சுவைகள், செயற்கை இனிப்புகள் மற்றும் அதன் மொத்த அடர்த்தியை அதிகரிக்க மற்றொரு தீர்வுடன் இயற்கையான நீரில் ஊற்றப்படுகிறது. "சுவை மற்றும் இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் பாலின் நம்பகத்தன்மையை மக்களை நம்ப வைக்கும்" என்று அலுவலர்கள் கூறினார்.


பால் கலவை தவிர, குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட இனிப்புகளும் காலாவதியானதாகக் கூறினர். இதற்கிடையில், மற்ற இரசாயனங்கள் காஸ்டிக் பொட்டாஷ், பால் பெர்மீட் பவுடர், மோர் பவுடர், சர்பிடால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா கொழுப்புகள் ஆகியவை அடங்கும்.

அஜய் அகர்வாலுக்கு  கீழ் பணிபுரிபவர்களிடம் ஃபார்முலா பற்றி அறிந்து கொள்ள  விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது தொழிற்சாலையிலிருந்து போலி பால் வாங்குபவர்களைக் கண்டுபிடிக்கும் விசாரணையும் நடைபெறுகிறது. "கடந்த ஆறு மாதங்களில் அவர் எங்கிருந்து பால் தயாரிப்பு வேதியியல் பொருட்களை வாங்கி சப்ளை செய்தார் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்," என்று எஃப்எஸ்எஸ்ஏஐ அலுவலர் வினித் சக்சேனா மணிகண்ட்ரோல் மேற்கோளிட்டுள்ளார்.


இந்தியாவில் உள்ள  பாதி பால் பண்ணைகள் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவை, அதனால் பால் மற்றும் இதர பால் பொருட்களில் கலப்படம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் விளைவாக, தரத்தை உறுதி செய்வதற்கான சோதனைகள் சவாலானதாக மாறுகிறது, அமைப்புசாரா துறைகள் திரவத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...