"ஐந்துமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும், வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்",
ஆறுமுகமான தமிழ்க் கடவுள் அழகன் முருகப்பெருமான். ‘மலை சார்ந்த குறிஞ்சி நிலக் கடவுள்’, செந்நிற மேனியன், சூரியனுக்கு ஒப்பானவன் எனப் போற்றப்படுகிறார். சந்திரன் சஞ்சரிக்கும் பாதையில் கார்த்திகை நட்சத்திரத்தை எளிதாக அடையாளம் காணலாம். ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பே கார்த்திகை நட்சத்திரம் .சிவன் நெற்றியில் உதித்த தீப்பிழம்புகளை சரவணப் பொய்கையில் சேர்த்தார். ஆறு தீப்பிழம்புகளும் ஆறு குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் வளர்த்தனர். அந்தப் பெண்கள் சரவண பொய்கைக்கு வருகை தந்த சிவபெருமானையும்பார்வதி தேவியையும் வணங்கிய போது சிவபெருமான் அவர்கள் கேட்ட அஷ்ட சித்து வரமளித்தார். அது. “அனி மாதி சித்திகளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை. இணுகாத வேகார் பரகாய மேவல். அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே" -திருமூலரின் திருமந்திர-668 வது பாடல். அதாவது
அணிமா (அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்). மகிமா (மலையைப் போல் பெரிதாதல்). இலகிமா (காற்றைப் போல் இலேசாய் இருத்தல்). கரிமா (கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்). பிராத்தி (எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்). பிராகாமியம் (உடல் கூடு விட்டுக் வேறு உடல் கூடு பாய்தல்) ஈசத்துவம் (நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்). வசித்துவம் (அனைத்தையும் வசப்படுத்தல்). இவைதான் அஷ்ட சித்துக்கள். "வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே. செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை". முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். இவர்கள், பார்வதியின் அம்சம் என்று ஒரு சாராரும், சப்தரிஷிகள் எனப்படும் ஆங்கிரஸ், கிருது, மரீசி, புலஹர், புலஸ்தியர், அத்ரி மற்றும் வசிஷ்டர் ஆகியோரில், வசிஷ்டர் மனைவி அருந்ததி நீங்கலாக, மற்றவர்களின் துணைவியர் என்று, மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை, ஆறு ரிஷி பத்தினிகளுக்கும் அளித்தார்,
சிவன். அப்போது இவர்களுக்கு, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா மற்றும் துலா என்ற பெயர்கள் ஏற்பட்டன.முருகனையே வளர்க்கும் பேறு பெற்ற இவர்களை, வான மண்டலத்தில் நட்சத்திரமாக ஒளிரும் வாய்ப்பளித்தார், சிவன். இந்த நிகழ்வு ஆடி கிருத்திகையன்று நிகழ்ந்ததால், இந்த நாள் முருகனுக்குரிய விசேஷ நாளாயிற்று. மேலும் முருகனுக்கு, கார்த்திகேயன் என்ற பெயரும் ஏற்பட்டது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக உள்ளது அதில் 33 வது படலம் அஷ்ட சித்து உபதேசித்த படலமாகும். திருக்கைலாயமலையில் ஆலமர நிழலில் சிவனும் உமையம்மையார் இருக்க பூதத் தலைவர்களுக்கும் ஜனகர் உள்ளிட்ட நான்கு முனிவர்களுக்கும் சிவ நெறிகளையும் தருமங்களையும் உபதேசித்துக் கொண்டிருந்த போது முருகனை வளர்த்த பெண்கள் அறுவரும் அடக்கமாக விபூதியும் ருத்திராட்சிதமும் அணிந்து இறைவனிடம் "எமக்கு அட்டமாசித்திகளை அறிவித்தருள்க" என வேண்டினார்.
இறைவனும் அவர்களுக்கு அவற்றை உபதேசிக்க அவர்கள் உடனே அவற்றை மறந்தனர். மறதி அவர்களுக்கு இழப்பைத் தந்தது. சிவனார் கோபித்துப் பொறுப்பற்ற நீங்கள் பட்டமங்கை எனும் ஊரில் பாறாங்கல்லாகக் கிடக்கக்கடவது என சபித்தார். "விமோசனம்" கேட்டார்கள். ஆயிரம் ஆண்டுகள் அங்கே கல்லாகக் கிடந்த பின் அங்கு குருவாக சோம சுந்தரக் கடவுளாக யாம் வருவோம். அட்டமாசித்திகளின் பெயர்களும் அவற்றின் விவரமும் அங்கு மீண்டும் கூறுவோம்" என அருளினார்.
அவ்வாறே அவ்வியக்கியர் அனைவரும் பட்ட மங்கையில் கெட்டொழிந்த கற்களாய்க் கிடந்தனர். ஆயிரம் வருடம் அகன்ற பின் சோம சுந்தரர் குரு தெட்சிணாமூர்த்தியாக அங்கு வந்து அவர்களை எழுப்பினர்; அதில் காளி வடிவாக இருந்த பார்வதியும் அழகு வடிவம் பெற்ற பின்னர் எழுந்த கன்னியர் அறுவரும் உமையம்பிகையும் குருவருளைப் பெற வணங்கினர். சிரமேற் கரம் வைத்த குருவான ஈசன் அட்டமாசித்திகள் உபதேசித்து அருளினார். இறைவனை அறிந்த யோகியர்கள் இந்தச் சித்திகளை அறிவார்கள்; ஆனால் செயல்படுத்த மாட்டார்கள்; இவை நாடிய பொருளைத் தரும்; தேடிய தகவல்களைத் தரும்; எனினும் அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டுச் சித்திகளை அடைய உத்தம யோகியர்கள் விரும்பமாட்டார்கள்; அதை விட உயர்ந்த மனநிலையில் வாழவேண்டுவார்கள் என அறிவித்தார்.
ஈசன் வழங்கிய சித்திகளைப்பற்றி அறிந்தவர்கள் உமா பார்வதியை மனத்தில் தியானித்து அதன் பயனாக அட்டமாசித்திகளை நன்கு பயின்று விண்வழியே சென்று தாம் உறையும் திருக்கைலாய மலையை அடைந்தனர். தட்சிணாயண காலமான, சூரியனின் தெற்கு நோக்கிய பயண காலத்தின் துவக்க மாதமான, ஆடியில் வரும் கார்த்திகை, இதே காலத்தில் வரும் கார்த்திகை மாத திருக்கார்த்திகை, உத்ராயண காலமான, சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் துவக்க மாதமான, தை மாத கார்த்திகை ஆகியவை விசேஷம் "குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்! புன்தலைய பூதப்பொரு படையாய் - என்றும் இளையாய்! அழகியாய்! ஏறுஊர்ந்தான் ஏறே!இளையாய்! என் உள்ளத்து உறை."
"குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும். மெய்விடா வீரன்கை வேல்!" -
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும். துளைத்தவேல் உண்டே துணை." -
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும் கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட தனி வேலை வாங்கத் தகும்."
"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும். வேலப்பா! செந்தில் வாழ்வே!" - -(நேரிசை வெண்பா). திருமுருகாற்றுப்படை"பட்டமங்கையில் பாங்காயிருந்து அட்டமாசித்தி அருளிய அதுவும்" - மாணிக்கவாசகர் கீர்த்தித்திருவகவல் . கார்த்திகை பெண்களை வணங்கும் குருஸ்தலம் இந்த ஸ்தலம் தேவர்களுக்கு அடைக்கலம் தந்த கடம்பவன முனிவர் வசித்த க்ஷேத்திரம் அய்யனார் உருவில் பூதகணங்கள் உடன் உள்ளது.
கருத்துகள்