பித்தளை சொம்பை இருடியமென ஏமாற்றி சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் சம்பவம் போல் நடந்த மோசடி.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதுரங்க வேட்டை திரைப்படக் காட்சிகள் போல ரூபாய்.9 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இரிடியம் என ஏமாற்றி பித்தளை சொம்பை வண்ணம் பூசிக் கொடுத்து மோசடி நடந்ததாக, பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரில் மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் தேடுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஜஸ்டின் ஜெயக்குமார் (வயது 56). அவருடைய நண்பரான அருண்குமார் மூலமாக தேனியிலிருந்து குமார் என்ற பெயரைச் சொல்லி ஒரு நபர் தொடர்பு கொண்டு
தன்னிடம் விலை மதிக்க முடியாத !?இரிடியம் உள்ளதாகவும் அதை வாங்கி வெளியில் விற்றால் ரூபாய்.5 கோடி வரை வருமானம் வரும் என ஆசையை தூண்டும் வார்த்தைகள் கூறிய நிலையில் இவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது
(மாதிரி)ஜஸ்டின் ஜெயக்குமாரைத் தொடர்பு கொண்ட மற்றொரு நபர் ராஜேஷ் என்பவன் உங்களிடம் இரிடியம் இருந்தால் கொடுங்கள் ரூபாய்.5 கோடி வரை நான் விற்பனை செய்து தருகிறேன் எனக் கூறியதைத் தொடர்ந்து ஜஸ்டின் ஜெயக்குமார் மீண்டும் குமாரை என்பவனைத் தொடர்பு கொண்டு இரிடியம் கேட்ட ராஜேஷ் குறித்த தகவல்களைக் கூறியுள்ளார். உடனடியாக குமார் இரிடியம் வாங்குவதற்கு ரூபாய் 10 லட்சம் கொண்டு வந்தால் வாங்கித் தருவதாகக் கூறவே
அதற்கு ஜஸ்டின் ஜெயக்குமார் தன்னிடம் ரூபாய்.9 லட்சம் மட்டுமே உள்ளதாகவும், தனது நண்பரிடம் ரூபாய்.50 ஆயிரம் இருப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து குமார் ரூபாய். 9 லட்சத்து 50 ஆயிரத்தைக் கொண்டு வரும்படியும், மீதி பணம் தானே போட்டு இரிடியத்தை வாங்கி வெளியே விற்றுக் கொள்ளலாம் எனக் கூறிய
குமார் என்பவன் பேச்சை நம்பி ஜஸ்டின் ஜெயக்குமார் அவரது நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு கார்களில் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளார். ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் நின்றிருந்த குமார் என்பவனைச் சந்தித்து ரூபாய்.9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்டு இரிடியம் வாங்கி வருவதாகச் சென்ற குமார் சிறிது நேரத்தில் ஒரு பெட்டியுடன் வந்துள்ளார். அதே நேரத்தில் ராஜேஷ் என்பவரும் அங்கு வந்து சேர்ந்துள்ளார்.
அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த ராஜேஷ் இது இரிடியம் தான் என உறுதி செய்து கொண்டு, பெட்டியுடன் மதுரைக்கு வாருங்கள் எனது கம்பெனியில் வைத்துப் பேசி விற்பனை செய்து தருகிறேன் எனக் கூறியுள்ளான். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மதுரை புறப்பட்டனர். இதற்கிடையே இந்த இரிடியம் மோசடி நடப்பது குறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்ததெனவும் வாகன சோதனை நடந்திக் கொண்டிருந்த போது இரண்டு கார்களில் பெட்டியுடன் வந்த ஒரு பெண் உள்பட ஏழு பேரிடம் விசாரணையை மறித்துச் செய்தனர் அப்போது, அவர்கள் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட விபரம் தெரிந்தது.
7 பேர் காவல் துறையில் பிடிபட்டதை அறிந்தவுடன், பின்னால் வந்த இரண்டு கார்களில் வந்த குமார் என்பவனும் மற்றும் ராஜேஷ் என்பவனும் தப்பி விட்டனர். ஏழு நபர்களை ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த பெட்டியைத் திறந்து சோதனை செய்ய முயன்ற போது பெட்டியை முறைப்படி திறக்காவிட்டால் உடல் வெந்துவிடும், உடலில் பாகங்கள் செயலிழக்கும் என அவர்கள் தெரிவித்ததனால் பயந்த காவலர்கள் நீண்ட நேரம் ஆலோசித்து பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட ஒரு சொம்பு இருந்தது. அந்தச் செம்பு இருந்ததை சோதனை செய்த போது அது சாதாரண பித்தளைச் சொம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இரிடியம் என்று ஏமாற்றி பணம் பறித்த குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் கூட்டுச் சேர்ந்து மோசடி செய்தது தெரிந்ததையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜஸ்டின் ஜெயக்குமார், முகமறிந்து, முகவரி தெரியாத குமார் மற்றும் ராஜேஷ் மீது க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேற்கண்ட குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனர். பித்தளை செம்பை வண்ணம் பூசி இரிடியம் எனக் கூறி ரூ.9லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மோசடி செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது
இதில் உண்மையான பொது நீதி யாதெனில்:- பணத்தை இழந்த நபர் உழைத்து வாழ நினைக்காத நபர் மேலும் இவர் போன்ற நபர்கள் பலர் உண்மை அறியாமல் பல இடங்களில் மோசடி நபர்களின் வலையில் சிக்க புத்தர் வாங்கியத்தில் ஆசைதான் இவர்கள் துன்பத்திற்கு காரணம்.ஒசுமியம் தனிமத்தை அடுத்து இரண்டாவது அடர்த்தி மிகுந்த தனிமமாக இரிடியம் கருதப்படுகிறது.
2000 °செல்சியஸ் வெப்பநிலைக்கு அதிகமான உயர்வெப்பநிலையிலும் இரிடியம் அரிப்பைத் தடுக்கும் ஒரு தனிமமாக உள்ளது. சில உருகிய உப்புக்களும் ஆலசன்களும் மட்டும் திடநிலை இரிடியத்தை அரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன என்றாலும், கடைசியாகப் பிரித்தெடுக்கப்படும் இரிடியம் தூள் மிகவும் வினைத்திறன் கொண்டதாகவும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது.இரிடியம் ஒரு வேதியியல் தனிமம் ; இது Ir மற்றும் அணு எண் 77 ஐக் கொண்டுள்ளது . பிளாட்டினம் குழுவின் மிகவும் கடினமான, உடையக்கூடிய, வெள்ளி-வெள்ளை மாற்ற உலோகம் , இது 22.56 g/cm 3 (0.815) அடர்த்தியுடன் இயற்கையாக நிகழும் ( ஆஸ்மியத்திற்குப் பிறகு) இரண்டாவது அடர்த்தியான உலோகமாகக் கருதப்படுகிறது . lb/cu in) சோதனை எக்ஸ்ரே படிகவியல் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது . [ a ] 191 Ir மற்றும் 193 Ir இரிடியத்தின் இரண்டு இயற்கையான ஐசோடோப்புகள் மற்றும் ஒரே நிலையான ஐசோடோப்புகள் ஆகும் ; பிந்தையது அதிக அளவில் உள்ளது. இது 2,000 °C (3,630 °F) வெப்பநிலையில் கூட, அரிப்பை எதிர்க்கும் உலோகங்களில் ஒன்றாகும் .இதை அறிந்த நபர்கள் ஏமாற மாட்டார்கள். மூடர்களின் ஆசை வார்த்தை நம்பி ஏமாறும் நபர்களும் மூடர்கள் தான். கரகச் சொம்பால் கிரகத்தில் சிக்கிய நபர்கள் எப்போது மாறும் இதைத் தடுக்கும் நிலை.
கருத்துகள்