முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பித்தளை சொம்பை இருடியமென ஏமாற்றி சதுரங்க வேட்டை மோசடி

பித்தளை சொம்பை இருடியமென ஏமாற்றி சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் சம்பவம் போல் நடந்த மோசடி.       


     தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதுரங்க வேட்டை திரைப்படக் காட்சிகள் போல ரூபாய்.9 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இரிடியம் என ஏமாற்றி  பித்தளை சொம்பை வண்ணம் பூசிக் கொடுத்து மோசடி நடந்ததாக, பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரில் மோசடியில் ஈடுபட்ட  இருவரை காவல்துறையினர் தேடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஜஸ்டின் ஜெயக்குமார் (வயது 56). அவருடைய நண்பரான அருண்குமார் மூலமாக தேனியிலிருந்து குமார் என்ற பெயரைச் சொல்லி ஒரு நபர் தொடர்பு கொண்டு

தன்னிடம் விலை மதிக்க முடியாத !?இரிடியம் உள்ளதாகவும் அதை வாங்கி வெளியில் விற்றால் ரூபாய்.5 கோடி வரை வருமானம் வரும் என ஆசையை தூண்டும் வார்த்தைகள் கூறிய நிலையில் இவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது 

                               (மாதிரி)

ஜஸ்டின் ஜெயக்குமாரைத் தொடர்பு கொண்ட மற்றொரு நபர் ராஜேஷ் என்பவன் உங்களிடம் இரிடியம் இருந்தால் கொடுங்கள் ரூபாய்.5 கோடி வரை நான் விற்பனை செய்து தருகிறேன் எனக் கூறியதைத் தொடர்ந்து ஜஸ்டின் ஜெயக்குமார் மீண்டும் குமாரை என்பவனைத்  தொடர்பு கொண்டு இரிடியம் கேட்ட ராஜேஷ் குறித்த தகவல்களைக் கூறியுள்ளார். உடனடியாக குமார் இரிடியம் வாங்குவதற்கு ரூபாய் 10 லட்சம் கொண்டு வந்தால் வாங்கித் தருவதாகக் கூறவே

அதற்கு ஜஸ்டின் ஜெயக்குமார் தன்னிடம் ரூபாய்.9 லட்சம் மட்டுமே உள்ளதாகவும், தனது நண்பரிடம் ரூபாய்.50 ஆயிரம் இருப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து குமார் ரூபாய். 9 லட்சத்து 50 ஆயிரத்தைக் கொண்டு வரும்படியும், மீதி பணம் தானே போட்டு இரிடியத்தை வாங்கி வெளியே விற்றுக் கொள்ளலாம் எனக் கூறிய

குமார் என்பவன் பேச்சை நம்பி ஜஸ்டின் ஜெயக்குமார் அவரது நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு கார்களில் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளார். ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் நின்றிருந்த குமார் என்பவனைச் சந்தித்து ரூபாய்.9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்டு இரிடியம் வாங்கி வருவதாகச் சென்ற குமார் சிறிது நேரத்தில் ஒரு பெட்டியுடன் வந்துள்ளார். அதே நேரத்தில் ராஜேஷ் என்பவரும் அங்கு வந்து சேர்ந்துள்ளார்.

அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த ராஜேஷ் இது இரிடியம் தான் என உறுதி செய்து கொண்டு, பெட்டியுடன் மதுரைக்கு வாருங்கள் எனது கம்பெனியில் வைத்துப் பேசி விற்பனை செய்து தருகிறேன் எனக் கூறியுள்ளான். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மதுரை புறப்பட்டனர். இதற்கிடையே இந்த இரிடியம் மோசடி நடப்பது குறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்ததெனவும் வாகன சோதனை நடந்திக் கொண்டிருந்த போது இரண்டு கார்களில் பெட்டியுடன் வந்த ஒரு பெண் உள்பட ஏழு பேரிடம் விசாரணையை மறித்துச் செய்தனர் அப்போது, அவர்கள் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட விபரம் தெரிந்தது.

7 பேர் காவல் துறையில் பிடிபட்டதை அறிந்தவுடன், பின்னால் வந்த இரண்டு கார்களில் வந்த குமார் என்பவனும் மற்றும் ராஜேஷ் என்பவனும் தப்பி விட்டனர். ஏழு நபர்களை ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த பெட்டியைத் திறந்து  சோதனை செய்ய முயன்ற போது பெட்டியை முறைப்படி திறக்காவிட்டால் உடல் வெந்துவிடும், உடலில் பாகங்கள் செயலிழக்கும் என அவர்கள் தெரிவித்ததனால்  பயந்த காவலர்கள் நீண்ட நேரம் ஆலோசித்து பெட்டியைத் திறந்து  பார்த்த போது அதில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட ஒரு சொம்பு இருந்தது. அந்தச் செம்பு இருந்ததை சோதனை செய்த போது அது சாதாரண பித்தளைச் சொம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இரிடியம் என்று ஏமாற்றி பணம் பறித்த குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் கூட்டுச் சேர்ந்து மோசடி செய்தது தெரிந்ததையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜஸ்டின் ஜெயக்குமார், முகமறிந்து, முகவரி தெரியாத குமார் மற்றும் ராஜேஷ் மீது க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேற்கண்ட குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனர். பித்தளை செம்பை வண்ணம் பூசி இரிடியம் எனக் கூறி ரூ.9லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மோசடி செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது

இதில் உண்மையான பொது நீதி யாதெனில்:- பணத்தை இழந்த நபர் உழைத்து வாழ நினைக்காத நபர் மேலும் இவர் போன்ற நபர்கள் பலர் உண்மை அறியாமல் பல இடங்களில் மோசடி நபர்களின் வலையில் சிக்க புத்தர் வாங்கியத்தில்  ஆசைதான் இவர்கள் துன்பத்திற்கு காரணம்.ஒசுமியம் தனிமத்தை அடுத்து இரண்டாவது அடர்த்தி மிகுந்த தனிமமாக இரிடியம் கருதப்படுகிறது.


2000 °செல்சியஸ் வெப்பநிலைக்கு அதிகமான உயர்வெப்பநிலையிலும் இரிடியம் அரிப்பைத் தடுக்கும் ஒரு தனிமமாக உள்ளது. சில உருகிய உப்புக்களும் ஆலசன்களும் மட்டும் திடநிலை இரிடியத்தை அரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன என்றாலும், கடைசியாகப் பிரித்தெடுக்கப்படும் இரிடியம் தூள் மிகவும் வினைத்திறன் கொண்டதாகவும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது.இரிடியம் ஒரு வேதியியல் தனிமம் ; இது Ir மற்றும் அணு எண் 77 ஐக் கொண்டுள்ளது . பிளாட்டினம் குழுவின் மிகவும் கடினமான, உடையக்கூடிய, வெள்ளி-வெள்ளை மாற்ற உலோகம் , இது 22.56 g/cm 3 (0.815) அடர்த்தியுடன் இயற்கையாக நிகழும் ( ஆஸ்மியத்திற்குப் பிறகு) இரண்டாவது அடர்த்தியான உலோகமாகக் கருதப்படுகிறது . lb/cu in) சோதனை எக்ஸ்ரே படிகவியல் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது . [ a ] ​​191 Ir மற்றும் 193 Ir இரிடியத்தின் இரண்டு இயற்கையான ஐசோடோப்புகள் மற்றும் ஒரே நிலையான ஐசோடோப்புகள் ஆகும் ; பிந்தையது அதிக அளவில் உள்ளது. இது 2,000 °C (3,630 °F) வெப்பநிலையில் கூட, அரிப்பை எதிர்க்கும் உலோகங்களில் ஒன்றாகும் .இதை அறிந்த நபர்கள் ஏமாற மாட்டார்கள். மூடர்களின் ஆசை வார்த்தை நம்பி ஏமாறும் நபர்களும் மூடர்கள் தான். கரகச் சொம்பால் கிரகத்தில் சிக்கிய நபர்கள் எப்போது மாறும் இதைத் தடுக்கும் நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...