முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி நவபாஷாணத்திலான சிலையின் மெய் அறிதல் குழுவினர் ஆய்வு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சித்தர் போகர் செய்த நவபாஷாண சிலையை


ஆய்வு செய்த ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழுவினர். ஆய்வுக்கு பின்னர் கோவில் கருவறையிலிருந்து வெளி வந்தனர் .

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நவபாஷாண சிலையை ஆய்வு செய்ய கருவறைக்குள் 30 நிமிடங்களுக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது.

தரிசனத்துக்காக  காத்திருந்த பக்தர்களுக்கு 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது.

அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி  திருக்கோவில் கருவறையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகரால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்த நவபாஷாண சிலை அசல் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண சிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த நிலையில் சிலையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவில் சிறப்புக்குழுவை அமைக்க உத்தரவிட்டதில் நீதிபதி பொன் காளியப்பன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வந்த முன்னாள் நீதிபதி பொன் காளியப்பன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி கொண்ட குழுவினர் இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறினர். அதைத் தொடர்ந்து கால பூஜைகளுக்கு பின்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அந்தக்குழுவினர் கருவறைக்குள் சோதனை நடத்தினர். கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.பாசாணம் என்பது நஞ்சுக்கலவை அல்லது கொடிய விஷக்கலப்பாகும்  இது கொடிய நோய் தீர்க்கும் சர்வ வல்லமை கொண்ட சஞ்சிகை அதாவது மருந்தாகவும் உள்ளது அதில் ஜாதிலிங்கம் ( ரசம் ), மனோசிலை, தாரம் (அரிதாரம், மால்தேவி), வீரம், கந்தகம், பூரம், வெள்ளைப் பாசாணம், கௌரி பாசாணம், தொட்டி பாசாணம், "பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம் தான் சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம் கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" -  சித்தர் போகர்                            அதற்கான நவீன வேதியியல் விளக்கம். கௌரிப் பாசாணம் (Arsenic Penta sulphite) கெந்தகப் பாசாணம் (Sulfur) சீலைப் பாசாணம் (Arsenic Di sulphite) வீரப் பாசாணம்  (Mercuric Chloride) கச்சாலப் பாசாணம்  (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை chlorine) வெள்ளைப் பாசாணம் (Arcenic Tri Oxide) தொட்டிப் பாசாணம்  (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை) சூதப் பாசாணம் : (Mercury) சங்குப் பாசாணம் : (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை) நவ பாசாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. ஏனென்றால் நவபாசாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டுள்ளதாம். மேலும் பாசாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகிறதாம். நவ பாசாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச் சிலைகள் நவக்கிரகத்தின் ஆற்றல்களைப் பெற்று விடுகின்றன என சித்தர்கள் நம்பினார்கள். அதனால் தான் பழனி சக்தி நிறைந்த கடவுளாக அருளும் நிலை ஆலயம்சித்தர் போகர் இரண்டு நவபாஷாண சிலைகள் செய்துள்ளார்.இரண்டுமே யானை முட்டி குகையில் உருவானது ஒன்று பிரசித்தி பெற்ற பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, மற்றொன்று பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் சுவாமி அருள்புரிகிறார் அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகத்தின் தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய்கள் தீரும் இது ஐதீகம் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கும், கொடைக்கானல் பூம்பாறை மலைக்கும் இடையிலுள்ள யானை முட்டி குகையில் நவ பாசாணத்தாலான மூலிகை இரசாயனங்களால் உருவாக்கப்பட்டதே நவபாஷாண சிலை அதன் சோதனை முடிந்த பிறகு அலுவலர்கள் தங்கள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். கருவறைக்குள் நவ பாஷாண சிலையை அலுவலர்கள்  ஆய்வு செய்த சம்பவம் குறித்து பக்தர்கள் விபரம் தெரியாத நிலையில் காத்திருந்த நிலையில் அது அங்கு பரபரப்பான சூழல் ஏற்படுத்தியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...