மத்திய, மாநில அரசுகளின் வரவு செலவுகளை சரியாக ஆய்வு செய்த அறிக்கையை
மாநில சட்டசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது, அரசியலமைப்புச் சட்டத்தினால் 'சுதந்திரமான அமைப்பு' என அங்கீகரிக்கப்பட்ட இந்தியத் தணிக்கைத் துறையின் முதன்மையான பணியாகும். சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் வரவு செலவுகள் ஆய்வு செய்யப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்ட அறிக்கையில்,
'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியத் தணிக்கைத் துறை தலைவர் (CAG) தணிக்கை மேற்கொள்ளும் அதிகாரத்தை மீறும் வகையில் தணிக்கைக்கு தமிழ்நாடு அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைக்காததாலும் ஆவணங்களைத் தராததாலும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோவில்கள் மற்றும் அவற்றின் கொடைகள் மீதான ஆணையரின் பொதுக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் ஆய்விற்காக முன்மொழியப்பட்ட இணக்கத் தணிக்கை மேற்கொள்ள முடியவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநில அரசின் துறைகள் அனைத்திலும் தணிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரமிருப்பதாக அக்கவுன்டன்ட் ஜெனரல் தெரிவித்திருக்கிற நிலையில், அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து அந்தத் துறையின் அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறுவது இதுதான்.
`கோவில்களுக்கு மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து நிறைய சொத்துகள், நிலங்கள்னு என உள்ளது. தவிர உண்டியல், நன்கொடைனு பக்தர்களிடமிருந்தும் லட்சக்கணக்கில் பணம் வருகிறது, இந்தத் தொகைகள் முறையாகக் கையாளப்படுதான்னு கண்காணிக்க ஆட்கள் வேணும்னு தான் அந்த ஹிந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் அறநிலையத்துறையின் பணியாளர்களின் ஊதியமே கோவில் பணத்திலிருந்துதான் கொடுக்கப்படுது. இந்தியத் தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை மக்களிடமிருந்து வரி முதலான வருவாய் அரசுக்கு வருவதை ஆய்வு செய்ய அதிகாரமிருக்கிறது. எந்தெந்தத் துறைகள்ல மக்கள் பணம் போகிறதோ அந்தத் துறைகளை ஆய்வுகள் செய்யலாம்.
கோவில்களுக்கு வரும் வருவாய் பணம் மக்கள் விருப்பப்பட்டு, ஒரு நம்பிக்கையில கொடுப்பது. இது அரசுக்குத் தருகிற பணமாகாது. அதனால தான் இந்தியத் தணிக்கைத் துறையின் ஆய்வு வரம்புக்குள் இந்தத் துறைகள் வருகிறதுனு சொல்லும் நிலையில்.
அதேநேரம், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குள்ளேயே ஒரு ஆடிட் விங் இருக்கிறது. அது கோவில்களின் சொத்துகள், நன்கொடை, உண்டியல் பணம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து துறைக்கு உரிய அறிக்கையை அனுப்பிய நிலையில் தான் இருக்கிறது’’. என்கின்றனர் சிலர். ஆனால் ஓய்வு பெற்ற சில ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களோ இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, CAG அரசியலைமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எனக் கூறுவதால். அதே அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா மதச்சார்பற்ற நாடு. அப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட மதத்தால் நிர்வாகிக்கப்படுற இடங்களில் அரசே எப்படி ஆடிட் செய்ய முடியும். பண்ணவே கூடாது’’ என்கிறார்கள் இவர்கள்.
CAG அறிக்கை வெளியான அன்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், `ஹிந்து சமய அறநிலையைத்துறை கோப்புகளைக் கொடுத்து ஒத்துழைப்புத் தரவேண்டுமெனக்’ குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிக மற்றும் ஆலயக் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளர் இரா.ராமலிங்கத்திடம் பேசிய தகவல் படி.
கோவில்களுக்கு பக்தர்கள் செலுத்துகிற பணம் வரி வருவாய் இல்லை தான். ஆனால் அது லட்சங்கள் மற்றும் கோடிகளில் வருகிறது. இந்தப் பணம் செலவாகிற இடத்துல் கண்காணிக்கிற அமைப்பா ஹிந்து சமய அறநிலையத்துறை தான் இருக்கிறது. அவங்க இந்தப் பணத்தை முறையாகத்தான் செலவு செய்றாங்களானு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவங்களுக்குள்ளேயே நடக்கிற தணிக்கை விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரிய மாட்டேங்குதே. அதோட வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகுமில்லையா? கோவில்கள் மூலமாகக் கிடைக்கும் பணம் கோவில் வளர்ச்சிக்கு மட்டும் தான் செலவாகிறதான்னு தெரியவில்லையே. இதுக்குத்தான் காலகாலமாக கோவில்களை ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேணும் என்கிற கோரிக்கையை பாஜக வைக்கிறது’’ என்கிறார். இவர்.பா.ஜ.க.வின் இந்தக் கோவில் நிலைப்பாடு குறித்து திமுகவின் பிரமுகர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறும் போது
’’அறநிலையத்துறை இன்னைக்கு நேத்து உருவாக்கப்படலை. கோவில் சொத்துகள் ஒரு சில தனி நபர்களால் கொள்ளையடிக்கப்படுதுங்கிற குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிக்கட்சி காலத்துலயே உருவாக்கிட்டாங்க. காமராஜர் முதலமைச்சரா இருந்தப்ப இந்தச் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு இப்ப வரை இயங்கிட்டு இருக்கு. மாநில அரசே கோயில்களின் வரவு செலவு குறித்து முறையான தணிக்கை செய்துடுறாங்க. ஏதோ திமுக அரசாங்கம்தான் கோவில்கள் விஷயத்துல தவறு செய்கிற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்க அறிக்கை விடுறாங்கன்னா அதுக்கு என்ன பதில் சொல்றது? கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருந்து விடுவிக்கணும்கிறதெல்லாம் அரசியல் பண்றதுக்காகப் பேசறது’’ என்கிறார். ஆனால் இதுவரை எல்லா நடவடிக்கைகளையும் பார்த்தால் பாஜக பேச மட்டுமே செய்கிறது ஆனால் செயலில் இறங்கவில்லை அதுவே உண்மை நிலை. அதுபோலவே பலவிதமான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனைகளும். இதுவரை எந்த பெரிய நடவடிக்கைகளும் யார் மீதும் எடுக்க வில்லை என்பதே பொதுவெளியில் பேச்சாக உள்ளது. அதுபோலவே பாஜகவின் ஊழல் ஒழிப்பும் காணல் நீராகவே உள்ளது
கருத்துகள்