தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சபதம்.
கோயம்புத்தூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை தெரிவித்ததாவது: நான் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? அது மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதை எனக்கு நானே கேள்வியாகக் கேட்கிறேன். சித்தாந்தம் சித்தாந்தம் என தொங்கிக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டுள்ளோமா என என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டுள்ளேன்.
இன்று காலையிலிருந்து எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி, நான் அரசியலில் தொடர வேண்டுமா என்ற கேள்வி தான். தமிழ்நாட்டில் பட்டப்பகலில் ஆளுநர் மாளிகையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டடத்திற்குப் பின்னால்,
கொடூரமாக சித்ரவதை செய்து, எதற்கு பெண்ணாக பிறந்தோம் என நினைக்கும் அளவுக்கு ஒரு கொடூரமான செயல் சென்னையில் நடந்துள்ளது. அது வழக்கம் போல் அரசியலாகியுள்ளதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறோம். என்று சொல்வதை விட எங்கள் அரசியல் பாதையை தீர்மானிக்கும் தருணமாக இதனைப் பார்க்கிறேன்
தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவேயில்லை. ஞானசேகரன் தி.மு.க.,வில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பிலுள்ள ஆள் . ஏற்கனவே குற்றங்கள் செய்துள்ள ஆள் தி.மு.க.,வில் இணைத்துங் கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைதளத்தில் பதிவிடவும் பதவி தேவைப்படுகிறது.
அக்கட்சி பத்திரிகையிலும் அவரது பெயர் உள்ளது வந்துள்ளது. எங்களுடைய குற்றச்சாட்டு அவர் தி.மு.க.,வில் இருப்பதில்லை. ஒரு குற்றவாளி இதே போல் கொடூரமான செயலைச் செய்தவன், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டு, அமைச்சர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து, அதனை உள்ளூர் காவல் நிலையத்தில் நான் தி.மு.க.,க்காரன் எனக்காட்டத் தேவைப்படுகிறது. ரௌடி ரிஜிஸ்டரில் தனது பெயர் வரக்கூடாது என்பதற்கும், அரசியல் அடையாளத்திற்கும் தேவைப்படுகிறது.
அதை வைத்து மறுபடியும் ஒரு குற்றத்தைச் செய்துள்ளான். இதுதான் எங்களின் கோபம். அவன் தி.மு.க.,வில் இருக்கிறது கோபம் கிடையாது. தி.மு.க., என்ற போர்வை குற்றம் செய்பவர்களுக்குத் தேவைப்படுகிறது. தி.மு.க, என்ற போர்வை இருந்ததனால் மட்டும் தான் அந்தக் குற்றவாளி அந்த பெண் மீது கை வைத்துள்ளான். தி.மு.க., கட்சிப் பதவி இருக்கிறது. அமைச்சர் பக்கத்தில் இருக்கிறான் என்பதற்காக ஸ்டேசனில் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே இதேபோன்ற ஒரு குற்றத்தை செய்திருக்கிறான். அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்துள்ளான். தி.மு.க., பொறுப்பில் இருந்ததால் அவனை சோதனை செய்யவில்லை.
அதனால் அவன் தைரியமாக வெளியே வந்தான். எப்.ஐ.ஆர்., எப்படி வெளியானது. காவல் துறையைத் தவிர வேறு யாரும் எப்ஐஆர்.,ஐ வெளியில் விட முடியாது. அது ஒரு எப்.ஐ. ஆரா. , படிக்காதவன் எழுதினால் கூட ஒழுக்கமாக எழுதுவான். அதை பார்க்கும் போது, குற்றம் செய்தது பெண்ணா? குற்றம் செய்தது அந்த அயோக்கியனா எனச் சந்தேகம் எழுகிறது. அந்தப் பெண் குற்றம் செய்தது போல் எப்.ஐ.ஆர்., எழுதப்பட்டுள்ளது. அதைப் படித்தால் இரத்தம் கொதிக்கிறது. காக்கிச்சட்டை அணிந்து இந்த எப்.ஐ.ஆர்., எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா ? இந்த எப்.ஐ.ஆர்., கோர்ட்டில் நிற்குமா?மொபைல் எண் அப்பா பெயர், ஊர் பெயர் வெளியாகி உள்ளது. இதற்கு வெட்கப்பட வேண்டும். குடும்பத்தை நாசம் செய்துவிட்டீர்கள். ஏழு தலைமறைக்கு ஒரு கறுப்பு அடையாளம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்களா?மூன்று மாதம் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருந்தது.
அண்ணாமலை திரும்பி வந்ததால், மறுபடியும் கலவரம் வெடித்தது என அமைச்சர் சொல்கிறார். இதற்கு வெட்கப்படணும். நீங்கள் எல்லாம் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படணும். கட்சிப் பதவியில் இருப்பதால் மரியாதையாக பேசிக் கொண்டுள்ளேன். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற வெங்காய பொறுப்பில் இருக்கிறேன். அதனால் மரியாதையாக பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்ததால் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன்.வீதிக்கு தனி மனிதனாக வந்தால் வேறு மாதிரி இருக்கும். கட்சித் தலைவராக தொண்டராக நான் ஒரு சபதம் எடுத்துள்ளேன். எத்தனை ஆர்ப்பாட்டம் நடத்துவது. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போனால், முன்னாள் மாநில ஆளுநரைப் பிடித்து வைத்துள்ளனர். நாயைப் பிடிப்பது போல் பிடித்து வைத்துள்ளனர். எங்கள் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை என ஆர்ப்பாட்டம் செய்கிறோமா? இனிமேல் ஆர்ப்பாட்டம் வேலையெல்லாம் இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கு வீடு வீட்டின் முன்பு போராட்டம் நடக்கும் வீட்டிற்கு வெளியே வந்து பா.ஜ.க, தொண்டன் போராட்டம் நடத்துவான். எனக்கு நானே சாட்டை அடி கொடுக்கக் கூடிய நிகழ்வை நாளை நடத்தப்போகிறேன். நாளை காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப்போகிறேன்.
தி.மு.க., ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை செருப்புப் போட மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பை கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதமிருக்கப் போகிறேன் பிப்ரவரி மாதம்.,2 வது வாரம் ஆறுபடை வீட்டிற்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்.சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள். கேட்டால் கட்சி போர்வைக்குள் ஒழிந்து கொள்வீர்கள். நாளையிலிருந்து எனது அரசியலும் இப்படித்தான் இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உங்களுக்கு எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்த எப்.ஐ.ஆர்., வெளியில் விடப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டுமே வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். எனக்கு இதுதான் வேலையா?
சிறைத்துறையை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வேலையை செய்துள்ளீர்களா ? தப்பு நடந்தால், அதை வெளியில் கொண்டு மக்களிடம் கொண்டு வைப்பது எங்கள் வேலை. பதில் சொல்வது உங்கள் வேலை". என அண்ணாமலை தெரிவித்தார் பேட்டி முடிந்ததும், கே.அண்ணாமலை செருப்பைக் கழற்றினார்.
கருத்துகள்