முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாமக குடும்பச் சண்டைக்கு பின்னணி என்ன?

 தமிழ்நாடு என்னடா புறம்போக்கா? அதைத் தடுக்காமல் போகாது பாமக என முழங்கிய இயக்கம்.


இன்று குடும்பச் சண்டையில் அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குடும்பம் சார்ந்த மருத்துவர் அன்புமணி vs கோ.க.மணி மோதல் காரணமாக தந்தை மகன் இடையே வார்த்தை மோதல் கட்சி மோதலாகவே பொது வெளியில் வெடித்துள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய 1988-89 காலத்திலிருந்து ஆண்டு தோறும் நடைபெறும் பொதுக்குழு டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் பதிவு அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகளின் படி வருடத்தின் கடைசியில் நடப்பது வழக்கம், கூட்டத்தில் இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸுக்கும் தலைவர் மருத்துவர் அன்புமணிக்கும் இடையே வார்த்தை மோதல்

நடந்த நிகழ்வுகள் பின்னணியில் தான் அரசியல் சூழ்ச்சி நகர்வுகள் உள்ளது. மருத்துவர் அன்புமணியின் 

சகோதரி காந்திமதிக்கும் பரசுராமனுக்கும் மகனாக நிறுவனரின் மகள் வழிப் பேரனாக முகுந்தன் இருந்தாலும் கட்சியில் சேர்ந்த நான்கு மாதங்களில் எப்படி முகுந்தனை தலைவராக்கலாமென மருத்துவர் அன்புமணி பொதுக்குழுவில் கேள்வி எழுப்பவே ?             “என் முடிவில் விருப்பம் இல்லாவிட்டால் விலகிக் கொள்ளலாம்” என நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் ஆவேசமாகவே பேசிய நிலையில், இது இன்று மட்டுமே நடந்த நிகழ்வுகள் அல்ல இது கடந்த நான்கு ஆண்டுகளில் நெருப்பாகப் புகைந்து, அனலாகத் தகிக்கும் நிலை என்பதைப் பலர் அறியாத நிகழ்வு. இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் சட்ட வழக்கறிஞர்கள் மன்ற உறுப்பினர் கோ.க.மணி மற்றும் அவரது மகன் தமிழ் குமரன் அரசியல் வளர்ச்சி தான் காரணம். அவர்கள் எப்போதும் திமுக சார்பாகவே சிந்தனை கொண்டவர்கள். ஆனால் மருத்துவர் அன்புமணி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சார்ந்த நிலையில் முடிவு செய்வதே ஆக குடும்ப கட்சி என திமுகவைக் கூறும் நபர்கள் தேமுதிக மற்றும் பாமகவை அறியாதவர்கள் எனலாம், கடந்த காலத்தில் பாமகவின் ஒரே முதல் சட்ட மன்ற உறுப்பினர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் யானையில் வென்றவர் வெளியேறக் காரணம் இரண்டாவதாக பாமக தனித்து நின்று நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆன கோ.க.மணி தான் ஆனால் அவரோடு வெற்றி பெற்ற தாரமங்கலம் கோவிந்தன், எடப்பாடி கணேசன், பேராசிரியர் தீரன் போன்றவர்கள் வெளியேற்றக் காரணமாக இருந்தது கோ.மணி தான்.




இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உறவினர் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இவரது மனைவி சுந்தராம்பாள் காலமாகிவிட்டார் இவர் தியாகச் செம்மல் பட்டம் அடைமொழி கொண்டு பாமகவின் செல்லப்பிள்ளை போல பார்க்கப்பட்ட நிலையில் தான் மகன் மருத்துவர் அன்புமணி அரசியல் களம் புகுந்து இளைஞர் சங்கம் நிர்வாகியாக வந்தார் அதற்கு முன்னர் சேலம் இரா.அருளும் காலம்சென்ற அரியலூர் அறிவுச் செல்வனும் இருந்து வெள்ளைச்சீறுடை மாநாடு மதுரையில் நடத்திய போராளிகள். அவர்கள் பதவியில் மருத்துவர் அன்புமணி அமர்த்தப்பட்டார்


அந்தப்பதவி தன்மகனான இன்று திமுகவின் முக்கிய புள்ளி நடத்தும் திரைப்பட நிறுவனம் சார்ந்த பொறுப்பினைக் கவணிக்கும்  CEO தமிழ் குமரனுக்கு தக்கவைக்க முயற்சி செய்த கோ.க.மணிக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது. கோ.க.மணி பாமகவின் அரசியல் களத்தில் ராஜதந்திர வேளைகளைச் செய்த நிலையில் வெளியேற்றப் பட்ட பலர் உண்டு அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் தீரன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பு.தா.இளங்கோவன் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் இரா.எழில் மலை, பசுபதி பாண்டியன், ஜான் பாண்டியன், முகையூர் கலிவரதன், ஓமலூர் தமிழரசு, தாராபுரம் சிவகாமி வின்சென்ட், மதுரை முருகவேல் ராஜன், அந்தியூர் கிருஷ்ணன் மற்றும் அமைப்பு செயளாலர் ஆகிய நாம் உள்ளிட்ட பலர் அடக்கம்,  இதில் பாதிக்கப்பட்ட பலர் உண்டு அதில் காலம் சென்ற பாக்கம் இராமகிருஷ்ணன்,

இல.க.சடகோபன்., மற்றும் நாகப்பட்டினம் எஸ் கே.ராமசாமி தற்போது சட்ட மன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் முன்னாள் மத்திய இணை அமைச்சர்  பொன்னுச்சாமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனிப்பொறுப்பு என்.டி. சண்முகம் முன்னாள் மத்திய இரயில்வே இணை அமைச்சர் இரா.வேலு IAS  (ஓய்வு) மற்றும் பால சுந்தரி, சைதை சிவா இராயபுரம் இராம. முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் உண்டு. அதன் பலனாக இவர் கடைசியாக வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குருவுக்கு தீங்கு செய்ய மருத்துவர் ச.ராமதாஸைப் பயன்படுத்தி செய்த பல வேலைகள் காலஞ்சென்ற அண்ணன் நெற்குப்பை இராம.இராமநாதன் நன்கு அறிவார். கோ.க.மணி எரியும் தீ வெட்டிக்கு எண்ணெய் ஊற்றுவதில் கில்லாடி ஆகவே தனது பதவியை தட்டிப் பறித்து அதை ஒரே மகனுக்கு தாரை வார்த்த மருத்துவர் இராமதாஸுக்கு அவர் குடும்பத்தினர் மூலமே அரசியல் காய் நகர்த்தி தங்கை மகன் மூலம் தாய்மாமன் பதவிக்கு வேட்டு வைத்து குளிர் காய்வதை நாம் நேற்று நடந்த நிகழ்வில் அவர் நைசாக தலைவர் அன்புமணி மீண்டும் மைக் எடுக்க விடாமல் தடுக்கும் செயலைக் கண்டவர்கள் மட்டுமே அறிந்த உண்மை. இவரது செயல் இப்போது மருத்துவர் ச.இராமதாஸ் வளர்த்த பாமகவை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது. என்பது பாமகவில் அருகில் இருந்து பார்த்த பலரும் அறிவார்கள். மருத்துவர் ச.ராமதாஸால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி  36-வது ஆண்டைக் கடந்து அடியெடித்து வைக்கிறது. அந்தக் கட்சியின் தேர்தல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டும் போராட்டத்தில் உரிமைகள் உருவான இயக்கம். தான் வன்னியர் சங்கம். அதன் தொடர்ச்சியாக, 1989-ஆம் ஆண்டு இதே நாளில், சென்னை கடற்கரை சீரணி அரங்கில் 10 லட்சம் மக்கள் புடைசூழ பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்றுவித்தார் அதில் அர்ஜுன் சிங், என்.டி திவாரி, வாழப்பாடி கூ. ராமமூர்த்தி, தராசு ஷ்யாம் உள்ளிட்ட பலர் வாழ்துரைக்க மருத்துவர் ச.ராமதாஸ். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், மதச்சிறுபான்மையோர் ஆகியோரை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தங்களின் கட்சிக் கொடி, கொள்கை, நிர்வாகிகள் நியமனம் 108 ஜாதிவாரி பிரதிநிதிகள் உள்ளிட்ட விஷயங்களை வடிவமைத்தார் மருத்துவர் ச.ராமதாஸ். காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை தங்களின் வழிகாட்டிகளாகவும் சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம், மனித நேயம் என அறிவித்தார். பாமக தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தின் சமூக மாற்றத்தை விரும்பும் பலர் அந்தக் கட்சியை மிகத் தீவிரமாக ஆதரித்தனர். பாமகவின் இரண்டாவது இதழான தமிழ் ஓசையில் கட்டுரைகளை ஏழுதினர். கட்சி தொடங்கிய ஆறு மாதத்துக்குள், அப்போதைய வேலூர் மாவட்டத்தில் பெரணமல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. வெற்றி பெறாவிட்டாலும் 22,000 வாக்குகளைப் பெற்றது. 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 33 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு 1991 தேர்தலிலும் இஸ்லாமிய, தமிழ்த் தேசிய, அம்பேத்கரிய அமைப்புகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினார் மருத்துவர் ச. ராமதாஸ்.

199 தொகுதிகளில் அந்த அமைப்பு போட்டியிட்டது பா.ம.க. ஆனால், அந்தத் தேர்தலில், பா.ம.க-வின் சார்பாகப் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்தின் மட்டுமே வெற்றுபெற்றார். ஆனால், அந்தத் தேர்தலிலும் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது . அடுத்து வந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழவே, பின் வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் மற்றும் 12 சிறிய கட்சிகளுடன் இணைந்து, 116 தொகுதியில் போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது பா.ம.க. மீண்டும் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது. தமிழகத்தில் ஒரு கட்சி தொடங்கப்பட்டு மூன்று தேர்தலில், பிரதான இருபெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது பா.ம.க-வின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியது. பின்னர், 1998- ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி. 5 தொகுதியில் போட்டியிட்டு 4 -ல் வெற்றி பெற்றது. கட்சிக்குக் கிடைத்த இரண்டு இணை அமைச்சர் பதவியில் முதலில் மத்திய இணை மந்திரி பதவியை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலித் இரா.எழில்மலைக்குக் கொடுத்தார் மருத்துவர் ச.ராமதாஸ். பிறகு, 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க மதிமுக, ஜனதா கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள, தி,மு,க-வுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு உருவானது. அப்போது, ஏழு தொகுதியில் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றது பா.ம.க. 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் வெற்றி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி என ஏறுமுகத்தையும், மத்திய சுகாதார அமைச்சர் பதவியைப் பெற்றது, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி. பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து, போட்டியிட்டு தர்மபுரி என்ற ஒரு இடத்தில் மட்டும் மருத்துவர் அன்புமணி வெற்றி என இறங்கு முகத்தையும் சந்தித்தது பா.ம.க.பிறகு, 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அறிவித்து தனித்துக் களம் இறங்கியது பா.ம.க. அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பா.ம.க-வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது பா.ம.க. தர்மபுரியில் போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி மட்டும் வெற்றிபெற்றார். பிறகு, 2016 ஆம் ஆண்டு தேர்தலில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்து அதேபோல போட்டியிட்டபோது பா.ம.க. அப்போது ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை என்றாலும், 5.36 சதவிகித சதவிகித வாக்கையும் பா.ம.கவின் மீது மக்கள் மத்தியில் சிறிதளவு நம்பிக்கையும் ஏற்பட்டது ஆனால், மீண்டும், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது பா.ம.கவின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது..அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவும் முடியவில்லை...தொடர்ந்து, 2021 தேர்தலில், அதே கூட்டணியில், 23 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் வெற்றி பெற்றது.தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக அல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பத்து இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. 4.4 வாக்கு சதவிகிதத்தைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இழந்தது..,தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக போட்டியிடவில்லை என ஒதுங்கிக்கொண்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக தேர்தலை எதிர்கொண்டது.., பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 56,296 வாக்குகளைப் பெற்றார்..,திமுக வேட்பாளரிடம், 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்...கட்சி ஆரம்பித்து, 1989,1991,1996 என முதல் மூன்று பொதுத் தேர்தலில், ஆறு சதவிகித வாக்குகளையும் கணிசமான வெற்றியையும் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாமக, அடுத்து வந்த,1998,1999,2001,2006 நான்கு தேர்தலில் நல்ல வெற்றியைப் பதிவு செய்து உச்சத்துக்குச் சென்றது. அடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..,இனி வரும் காலங்களிலாவது மீளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க நினைத்த பலரும் அதிர்ச்சி அடையும் விதமாக குடும்ப அரசியல் காரணமாக உடையும் நிலையில் உள்ள பாமக மீட்க வழி உண்டா இதுவே இப்போது எழும் வினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...