முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பண மோசடி நியோமேக்ஸுக்கு வரப்போகும் கிளைமேக்ஸ்

நியோமேக்ஸ் புகார்தாரர்களின் பட்டியலை வெளியிட்டது


மாநிலப் பொருளாதாரக் குற்றப்பிரிவு மதுரை  தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்த நியோமேக்ஸ் மோசடி தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின் படி புகார்தாரர்களின் பட்டியலை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் அரசு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது 

நியோமேக்ஸ் உள்ளிட்ட 42 இணை நிறுவனங்கள் மீது பண மோசடிப் புகார் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல் துறையின் விசாரணையிலிருந்து வருகிறது. முதல் தகவல் அறிக்கை குற்ற எண்: 3/2023 ன் படி வழக்குப் பதிவு செய்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளராக மனிஷா சிறப்பு விசாரணை அலுவலராக தற்போது பலர் மாற்றப்பட்டு புலன் விசாரணையை நடத்தி வருகிறார். நியோமேக்ஸ் தொடர்பான நீதிமன்ற வழக்கில், சென்னை மதுரைக் கிளையில் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவுக் காவல்துறைக்கு சில



வழிகாட்டுதல்களுடன் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியதன் படி, நவம்பர் மாதம் 05 ஆம் தேதி பொது அறிவிப்பை வெளியிடவும் நவம்பர் மாதம்-05 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரையில் பண முதலீட்டாளர்களிடமிருந்து புகார்களைப் பெற வேண்டும்;நவம்பர் மாதம் 16 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 05 ஆம் தேதி வரையில் புகார்களை ஆய்வு செய்து, டிசம்பர் மாதம்-06 ஆம் தேதி இறுதி செய்யப்பட்ட பண மோசடியில் சிக்கிய முதலீட்டாளர்களின் பெயர் பட்டியலை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்; டிசம்பர் மாதம்-06 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம்-10 ஆம் தேதி வரை ஆட்சேபணை இருப்பின் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும்; டிசம்பர் மாதம்-16 ஆம் தேதி இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; டிசம்பர் மாதம்-18 ஆம் தேதி வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில்,

நவம்பர் மாதம்-04 ஆம் தேதியன்று தமிழில் தினத்தந்தி இதழ், ஆங்கிலத்தில் THE HINDU இதழிலும் பொருளாதாரக்குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விளம்பரம் செய்திருந்தார்கள். டிசம்பர் மாதம்-15 ஆம் தேதி வரை நேரிலும் தபால் மூலமாகவும் பெறப்பட்ட புகார்களை ஆய்வு செய்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் மாதம்-06 ஆம் தேதியன்று வெளியாக வேண்டிய பட்டியல் ஒருநாள் தாமதமாக டிசம்பர் மாதம்-07 ஆம் தேதியன்று பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை இணையதளத்தில் வெளியிட்டிருந்தது,  தாமதம் தலைமையிடத்தில் தொழில்நுட்பக் காரணங்களாலேயே ஆனதாகத் தகவல். நாளொன்றுக்கு நேரிலும் தபாலிலும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது, புகார் அளித்த பண முதலீட்டாளர்களின் தொலைபேசி எண் பதிவைக் கொண்டு மட்டுமே விவரங்களைச் சரிபார்க்க முடியும் என வடிவமைத்துள்ளார்கள். நாமும் நமக்குத் தெரிந்த புகார்தாரர் ஒருவரின் தொலைபேசி எண உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்தோம்.

நியோமேக்ஸில் அவரது முதலீடு செய்திருப்பது, ஒரு கோடியே இருபது இலட்சத்துக்கு மேல் அவரது பெயரில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத நில விற்பனை ஆவணங்களைக் கைவசம் வைத்துள்ளார். அவரது மனைவி பெயரிலும் முதலீடு செய்யப்பட்ட நிலையில் இரண்டு நபர்கள் பெயரில் அளிக்கப்பட்ட புகார் மனுவிலும் ஒரே கைப்பேசி எண்ணை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். 15-க்கும் அதிகமான பத்திரங்கள்; அந்த பாண்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு புகார்தாரர் ஐ.டி. கொண்டதாக உள்ளது. அப்படி இருக்கையில், முதல் பாண்டில் உள்ள கஸ்டமர் ஐ.டி.யை மட்டும் குறிப்பிட்டு அவரது முதலீடு வெறும் ஐந்து இலட்சம் தான் என்பதாகவே பதிவாகியிருக்கிறது.

எவர் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில், மோசடி செய்யப்பட்ட பண முதலீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது ?  ( அப்படி ஒரு விதி ஊழல் தடுப்புச் சட்டத்தில் உண்டா என்றால் இல்லை என்றே கூறலாம்)  என்ற அடிப்படையில், தொ எண் மற்றும் மின்னஞ்சல்முகவரியை பதிவு செய்தால் மட்டுமே உள் நுழைய முடியும் என்பதாக வடிவமைத்திருப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், ஒரே முதலீட்டாளர்களிடம் ஒவ்வொரு பாண்டிற்கும் ஒவ்வொரு கஸ்டமர் ஐ.டி. இருக்கும் நிலையில், கஸ்டமர் ஐ.டி.யை உள்ளீடு செய்து விவரங்களை சரிபார்க்கும் வகையில் வடிவமைத்திருக்கலாம்.அல்லது, ஒரே புகார்தாரரின் மொத்த முதலீட்டையும் ஒரே பக்கத்தில் தோன்றும் வகையிலாவது வடிவமைத்திருக்க வேண்டும். இந்தக் குறைபாடு, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சாதமாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கணக்கை குறைத்து காட்டுவதற்காக இப்படி செய்துவிட்டார்களோ என்ற தேவையற்ற சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்திருக்கிறது.

இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் நாம் குறிப்பிட்டு சொன்னது போல, சம்பந்தபட்ட முதலீட்டாளர் நியோமேக்ஸில் முதலீடு செய்தது 1கோடியே இருபது இலட்சத்து சொச்சம். தற்போது இணையத்தில் காண்பித்திருப்பது வெறும் ஐந்து இலட்சம். அவரது கைப்பேசி எண்ணில்தான் அவரது மனைவிக்குமான புகாரையும் பதிவு செய்திருந்தார்.

அவரது மனைவியின் பதிவையும், அவரது விடுபட்ட மற்ற முதலீட்டு விவரங்களையும் அவர் சரிபார்ப்பது எப்படி? அதற்கான வழிமுறை என்ன? அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதே இணைய தள பக்கத்தின் வழியாகவே, தெளிவான தகவலை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில்  எல்லோரது எதிர்பார்ப்பும் இன்னும் வருமான வரி துறைக்கு பயந்து புகார் அளிக்காமல் இருக்கும் கருப்புப் பணம் முதலீடு செய்த நபர்கள் தான் https://tneow.org.in இணையதளத்தில் பட்டியல் வெளியாகியிருக்கிறது. மொத்த முதலீட்டாளர்களின் பெயர் மற்றும் முதலீட்டுத் தொகை விவரங்களுடன் PDF பார்மேட்டில் வெளியாகுமென எதிர்பார்க்க ஆனால் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதைப்போல, தனிப்பட்ட புகார் செய்த முதலீட்டாளர்கள் மட்டுமே விவரங்களைப் பார்வையிடலாம் என வரம்பு நிர்ணயம் செய்துள்ளது இதில் வேடிக்கை என்னவென்றால் அரசு ஊழியர்கள் தான் அதிக அளவில் முதலீடு செய்த நபர்களாகும்  வருமான வரி கணக்கு காட்டாத லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மற்றும் தவறான வழியில் பணம் சேர்த்த பலர் நியோமேக்ஸ் நிலமோசடியில் சிக்கிய போதும் அவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் வெளியே கூறமுடியவில்லை, மேலும் இதுவரை புகாரும் கொடுக்க வில்லை இதுவே மோசடி செய்த கும்பலுக்கு சாதகமான நிலையாக உருவாக்க உதவியாக உள்ளது மேலும் இந்த வழக்கு இவ்வளவு நாட்கள் கடப்பதற்கு இந்த நிலங்கள் அணைத்தையும் சதுரமான  நிறுவனம் கைப்பற்றத் தான் காலம் கடத்துவதாகவும் ஒரு தகவல் உள்ளது அது உண்மை எனில் அமலாக்கத்துறை தலையீடு உடனே தேவை இதில்  பண சூதாட்டம் காரணமாக CBI மற்றும் PMLA சட்டம் மூலம் ED மற்றும் SEBI இதில் விசாரணை வளையத்தில் வராத வரை பொருளாதார குற்றப்பிரிவு பணக்கார மோசடி  நபர்கள் மீது நடவடிக்கையைப் பாய்ச்சாது, நீதிமன்றத்தின் வழியில் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்யும் புலன் விசாரணை முழுமையாக நடக்குமா? என்பதே எழுவினா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...